Tuesday, July 01, 2008

"இது ஒரு கொலைக் கதை" - 9

"இது ஒரு கொலைக் கதை" - 9

[முந்தைய பதிவு இங்கே]

வெள்ளிக்கிழமை ராத்திரி அந்த மூணு அண்ணன் தம்பிங்களும் வந்து பெட்ரோல் போட்டாங்களா' என அந்தப் பெட்ரோல் பங்கின் உரிமையாளரை விசாரித்தார் பொன்னுசாமி.

'எந்த மூணு அண்ணன் தம்பிங்க? என்ன சொல்றீங்க?' எனப் பரிதாபமாக விழித்தார் அவர்.

'மன்னிச்சுக்கோங்க! நான் காசி, மாரி, ராசையன் பத்திக் கேட்டேன்' எனச் சமாளித்தார் பொன்னுசாமி.

'ஓ! அவங்களா! எப்பவும் இங்கதானே போடுவாங்க. அதுல என்ன விசேஷம்?' என அசுவாரசியமாகச் சொன்னார் உரிமையாளர்.

'எப்பவும் போடறதைப் பத்தியா இப்பக் கேட்டேன்? கேட்ட கேள்விக்கு ஒழுங்கு மரியாதையா பதில் சொல்லணும். அன்னைக்கு.... அதாவது போன வெள்ளிக்கிழமை ராத்திரி, .... இவங்க வந்து பெட்ரோல் போட்டாங்களா? இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. அத்தோட, அன்னிக்கு ராத்திரி இவங்க நடத்தையில எதுனாச்சும் வித்தியாசம் தெரிஞ்சுதா?' என அதட்டினார் பொன்னுசாமி [612]

'ஆமாங்க! நீங்க சொல்றது சரிதான். ஆனா, அன்னிக்கு அவங்க நடத்தையில ஒரு பரபரப்பு தெரிஞ்சுது. அது மட்டுமில்லாம அவங்க சொன்ன ஒரு வார்த்தை என்னால மறக்க முடியாதுங்க.; என அவர் சொன்னதும் சுறுசுறுப்பானார் கண்ணன்.

'என்ன சொன்னாங்க அப்படி?' என்றார்.

'இன்னிக்கு ஒரு வேட்டை இருக்கு'ன்னு சொல்லிட்டு, வண்டியில போட்டது போக, தனியா ரெண்டு 'கேன்'ல வேற பெட்ரோல் பிடிச்சாங்க' என்றார் உரிமையாளர்.

'ஓ அப்படியா? நீங்க என்ன ஏதுன்னு விசாரிச்சீங்களா' என்றதும், 'அதெல்லாம் எங்க வேலை இல்லீங்க' எனச் சொல்லிச் சிரித்தார் அவர்.

'ரொம்ப நன்றிங்க' என விடை பெற்றார் கண்ணன்.
********************

'நமக்குத் தேவையான எல்லாத் தடயங்களும் கிடைச்சாச்சு. குற்றவியல் அதிகாரிங்களும் மரத்துல இருந்த குண்டும், மண்டையோட்டுல இருந்த குண்டும் ஒரே துப்பாக்கியிலேருந்துதான் சுட்டிருக்குன்னு உறுதிப் படுத்திட்டாங்க. கைது பண்ணிறலாமா?' எனக் கேட்டார் ராஜேஷ்.

'இன்னும் ஒரு விஷயம் பாக்கி இருக்கு. இந்தப் பசங்க வைச்சிருக்கற ஜீப்புதான் அந்த இடத்துல இருந்துச்சான்னு உறுதிப் படுத்தணும்' என்றார் ஜப்பார்.

'அதெல்லாம் அப்பவே பண்ணியாச்சே! அந்த இடத்துல இருந்த டயர் அடையாளமும் இந்தப் பசங்க ஜீப்போட டயரும் ஒத்துப் போகுதுங்க.'

'வெரி குட்! இவங்க முத்தண்ணன்கிட்ட வித்த சிப்பி பத்தி என்ன தகவல் கிடைச்சது?;'

'அதான் அப்பவே விசாரிச்சாச்சே! இந்தப் பசங்க வித்த சிப்பிங்கல்லாம், கொஞ்ச நாளானாலும் ஒரே தரத்துல இருந்திச்சுன்னு!' என்று சலிப்புடன் சொன்னார் ராஜேஷ்.

'அப்போ சரி! அண்ணன் தம்பி மூணு பேரையும் கைது பண்ண வாரண்ட் வாங்குங்க' என உத்தரவு பிறப்பித்தார் ஜப்பார்.

'ஐயா! ஒரு கேள்விங்க! எப்படி இவங்கதான் குத்தவாளின்னு முடிவு பண்ணினீங்கன்னு சொல்லுங்க ஐயா! அதுவும் ரொம்ப சுளுவா கண்டுபிடிச்சிட்டீங்களே ஐயா!' எனப் பணிவுடன் கேட்டார் கண்ணன்[404]

சொல்றேன் கேளுங்க! என ஆரம்பித்தார் ஜப்பார்.

**************

[அடுத்த பதிவில் முடியும்!]

2 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Sunday, July 20, 2008 9:46:00 PM  

கதை முடிஞ்ச மாதிரி இருக்கு, அடுத்த பகுதியில் அதிரடி திருப்பம் எதும் இருக்கிறதா ?

VSK Sunday, July 20, 2008 11:40:00 PM  

அப்டில்லாம் எதுவும் இல்லீங்க கோவியாரே!

இதூ ஒரு நேரடி ரிப்போர்ட்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP