குருவாய்! வருவாய்! அருள்வாய்!
குருவாய்! வருவாய்! அருள்வாய்!
ஒருவினை வந்து உணர்வினை அழுத்தும்!
ஒருவினை நகர்ந்து உள்ளத்தை வதைக்கும்!
ஒருவினை ஒளிந்து புறவழி செல்லும்!
மறுவினை அங்கே வாசலில் நிற்கும்!
சிறுவினை கண்டு பெருவினை நகைக்கும்!
பெருவினை கண்டு சிறுவினை அஞ்சும்!
தீவினை அங்கே பல்லை இளிக்கும்!
நல்வினை செய்திடல் எதுவெனத் திகைக்கும்!
ஊழ்வினை வந்து உயிரினை உருத்தும்!
எவ்வினை எதுவினை எதுவென இருந்தும்
இறைவனின் உறுதுணை அனைத்தையும் தடுக்கும்!
நிகழ்வினை நடத்தும் ஒருவனை நம்பி,
செயல்வினை யாவும் அவனது எனவே,
பொதுவினில் வைத்து புகழ்வினைக் கூட்டி,
உருவினை ஒளித்த இறைவனை வேண்டி,
உருவினில் பெருத்த முதல்வனை நம்பி,
குருவின் குருவாம் வேலனைப் பணிந்து,
உருவினைப் பெருத்து சாகரம் மேவிய
அனுமனைக் கொண்டு வல்வினை வென்று,
ஒருவினை அடக்கி உள்ளில் அமர்ந்த
திருவினைச் சரணெனத் தாள் அடைந்தாலே,
அருவினை யாவும் அறுந்தோடிடுமே!
ஸ்வாமி சரணம்!
ஒருவினை வந்து உணர்வினை அழுத்தும்!
ஒருவினை நகர்ந்து உள்ளத்தை வதைக்கும்!
ஒருவினை ஒளிந்து புறவழி செல்லும்!
மறுவினை அங்கே வாசலில் நிற்கும்!
சிறுவினை கண்டு பெருவினை நகைக்கும்!
பெருவினை கண்டு சிறுவினை அஞ்சும்!
தீவினை அங்கே பல்லை இளிக்கும்!
நல்வினை செய்திடல் எதுவெனத் திகைக்கும்!
ஊழ்வினை வந்து உயிரினை உருத்தும்!
எவ்வினை எதுவினை எதுவென இருந்தும்
இறைவனின் உறுதுணை அனைத்தையும் தடுக்கும்!
நிகழ்வினை நடத்தும் ஒருவனை நம்பி,
செயல்வினை யாவும் அவனது எனவே,
பொதுவினில் வைத்து புகழ்வினைக் கூட்டி,
உருவினை ஒளித்த இறைவனை வேண்டி,
உருவினில் பெருத்த முதல்வனை நம்பி,
குருவின் குருவாம் வேலனைப் பணிந்து,
உருவினைப் பெருத்து சாகரம் மேவிய
அனுமனைக் கொண்டு வல்வினை வென்று,
ஒருவினை அடக்கி உள்ளில் அமர்ந்த
திருவினைச் சரணெனத் தாள் அடைந்தாலே,
அருவினை யாவும் அறுந்தோடிடுமே!
ஸ்வாமி சரணம்!
*************************************************
[தாயகம் செல்கிறேன்! ஒரு மாதம் கழித்து வருகிறேன்! முருகனருள் முன்னிற்கும்!]