"இதுதாண்டா தமிழ்நாடு!"
"இதுதாண்டா தமிழ்நாடு!"
இன்று நான் கேட்ட ஒரு செய்தி!
நான் போற்றும் கர்மவீரர் காமராஜ் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு.
ஒரு மாணவன், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கிறான்.
கல்லூரிக்கு விண்ணப்பிக்கிறான்
கிடைக்கவில்லை!
தன் தந்தை... ஒரு எம்.எல். ஏ!!
அதுவும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.!!
தனக்கா சீட் இல்லை?
குமுறுகிறான்.
தந்தையிடம் சென்று முறையிடுகிறான்.
தந்தை முதல்வரிடம் சென்று செய்தியைச் சொல்கிறார்.
விவரத்தைக் கேட்ட முதல்வர், கல்லூரி முதல்வருக்கு தொலை பேசுகிறார்.
முதல்வரிடமிருந்தே அழைப்பு வந்ததைக் கேட்ட முதல்வர் பதறுகிறார்.
'இல்லை ஐயா! 15 இடங்கள்தான் ஒதுக்கப் பட்டிருக்கின்றன. இந்த மாணவன் பதினாறம் இடத்தில்... அதான்...' எனப் பணிவாகத் தெரிவிக்கிறர்.
கல்வி அமைச்சருக்கு அடுத்த தொலைபேசி.
அவரும் 15 இடங்கள்தான் என உறுதிப் படுத்துகிறார்.
இதனால் நல்ல திறமையான மாணவர்கள் வீணாக்கப்படுகிறார்களே, என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்கிறார்.
மாலை நேரக் கல்வித் திட்டம் பிறக்கிறது.
இவர்களையும் அரவணைத்துக் கொள்ள, இடங்களின் ஒதுக்கீடு இப்போது முப்பதாக உயர்கிறது.
எம்.எல்.ஏ. ஐ அழைக்கிறார்.
'சீட்டு இப்போ முப்பதா அதிகப் படுத்தியாச்சு. ஒன் பையன் பதினாறுன்னு நினைச்சு சீட்டு உறுதின்னு நெனைச்சுக்காத. விண்ணப்பிக்கச் சொல்லு. முப்பதுக்குள்ள வந்தா கிடைக்கும். சரியா!' என்கிறார்.
தமிழகம் இப்படியும் ஒரு காலத்தில் இருந்தது என்பதைச் சொல்லவே இப்பதிவு!