Friday, June 15, 2007

சிவாஜி ..... பாஸ்!!

"சிவாஜி பாஸ்" !!!!

சிவாஜி பார்த்தாச்சு!

எழுதச் சொல்லி சிங்கையாண்டவர் கட்டளை!

ஆனால், இதை ஒரு விமரிசனம் எனக் கொள்ளாமல், படத்தைப் பற்றிய என் கருத்து எனக் கொள்ளவும்!

முதல் நாள், முதல் ஷோ!

திரையரங்கில் நல்ல கூட்டம்!

ஆனால், ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை!
[எங்க ஊர் அப்படி!]

விளக்குகள் அணைந்ததும், சென்னை எங்களூருக்குள் வந்தது!

விசில் சத்தம் பறக்க, பேப்பர் துண்டுகள் பேப்பர்மாரி பொழிய, கைத்தட்டல்கள் காதைத் துளைக்க, சிவாஜி துவங்கினார்!

கதையைப் பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை; சொல்வதற்கும் ஒன்றுமில்லை!

ஆரம்ப நாட்களில் வந்த கிசுகிசுக்கள் போல ஒரு ஒற்றை வரிக்கதை.

நல்லெண்ணத்துடனும், பெரும்பணத்துடனும் தாயகம் திரும்பிய ஒரு இளைஞனின்[!!] ஆசைக்கனவுகள், இங்குள்ள பணபலத்தாலும், ஆட்சித் திமிராலும் எப்படி முறியடிக்கப்பட்டு, அதைத் தன் அதிரடி ஆட்டத்தால் [நிஜமாகவே அதிரடிதான்!] வெற்றி கொள்கிறான் என்பதுதான் கதை.

இந்தக் கதைக்கு கதாநாயகி தேவையே இல்லை!

ஆனால், தமிழகம் தாங்குமா!

எனவே.... எண்டர் ஷ்ரேயா... மூலக்கதையுடன், அதன் நிகழ்வுகளுக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு காட்சிக்களன்களுடன்!

ஆனால், அவர் இல்லாவிட்டால், அந்த பாடல் காட்சிகள் எப்படி இருக்கமுடியும்.

காமெடி வேணுமே!

கம் ஆன் விவேக்!!

சரி, படம் எப்படி?

3 மணி நேரப்படம்.

ஒரு நிமிடம்கூட போர் அடிக்கவில்லை!

ஒருசில காட்சி அமைப்புகள்[ஆஃபீஸ் ரூம், ம்யூசிக் ஸ்டோர்] அடிக்கடி ரிபீட் ஆனாலும், படம் தொய்வில்லாமல் போகிறது!

ரஜினி ஃபார்முலாபடி, முதல் ஒரு மணி காமெடி, அடுத்த ஒரு மணி கொஞ்சம் கதை, கடைசியில் அதிரடி என எதிலும் மாற்றமில்லை.

ரஜினி கெட்டப், உடை, மேக்கப் என படு இளமையாக ஜொலிக்கிறார்!

பாடல் காட்சிகளில் படுகவனம் எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார்!

ரஜினி ரசிகர்களுக்கு விசில் அடித்து மாளாத வண்ணம் காட்சித் தேர்வுகள்!

மெயின் பஞ்ச் டயலாக், "ச்ச்சும்மா அ....தி....ரு...தில்ல"! வரும்போதெல்லாம், அரங்கம் புத்துணர்சி பெற்று நிமிர்ந்து உட்காருகிறது.

ஷ்ரேயாவுக்கு வேலையே இல்லை, பாடல் காட்சிகளைத் தவிர எனச் சொல்லலாம். அழகாக இருக்கிறார்.

ஆடியோவில் கேட்பதைவிட, சில பாடல்கள், அரங்க அமைப்பாலும், ஒரு சில புதுமைகளாலும் திரையில் மிக நன்றாக வந்திருக்கின்றன. ....குறிப்பாக "ஸ்டைல்" பாடல் படமாக்கப்பட்ட விதம்..... அற்புதம்!!


ஏ.ஆர்.ரஹ்மான் இசை நல்லா வந்திருக்கு!

விவேக் காமெடி ஒரு ப்ளஸ் பாயிண்ட்!

பாதி ரஜினி வேலையை இவரே செய்து விடுகிறார். ஆரம்ப காட்சி ஒன்றில், ரஜினி ஒரு பஞ்ச் டயலாக் விடுக்க வாயைத் திறக்கும் போது, அவரை அடக்கிவிட்டு, இவர் தொடர்கிறார்!!

வில்லனை எதிர்கொள்ள, சிவாஜி எடுக்கும் செயல்கள், சற்றும் நடக்கக் கூடிய ஒன்றல்ல!

சண்டைக்காட்சிகள் ஆங்கிலப்படங்கள் பல பார்த்திருக்கும் நம் தமிழக மக்களுக்கு மிகவுமே பிடிக்கும்!

படம் பார்க்க விரும்பும் ரசிகர்களின் ஆர்வத்தைக் குலைக்க விரும்பாததால், ஒரு சில கருத்துகள் மட்டுமே சொல்லவிழைகிறேன்.

திரைப்படம் என்பது வெறும் கற்பனை.


நடக்க வேண்டும் என டைரக்டர் விரும்பும் ஒரு கருத்தை, நடக்காது எனத் தெரிந்த ஒரு கருத்தை, இது மாறாதா, மக்கள் துயர் தீராதா என வெதும்பும் ஒரு கருத்தை,

நம்பமுடியாத, எவராலும் பின்பற்றி செய்யமுடியாத வழியில், ஒரு அதிரடி நாயகன் செய்வதாகக் காட்டி,

இந்த அவலத்தை மட்டும் மக்கள் மனதில் விதைத்து, இது பற்றிய தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வாகவே சிவாஜி அமைந்திருக்கிறது.

ஒரு மூன்று மணி நேரப் படத்தின் மூலமாக நாடும், அரசியலும், தீயவர்களும் மாறிவிடுவார்கள் என்றெல்லாம் நம்பிட வேண்டாம், இந்தக் கசப்பான மருந்தை பொழுதுபோக்கு அம்சங்கள், பிரம்மாண்டம் கலந்து கொடுப்பதே திரைப்படம் என்பதுதான் இயக்குநரின் கருத்தாக இருந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

அந்த வகையில் பார்த்தால், ரஜினி என்னும் காந்த சக்தியின் மூலமாக, பெரும்பாலான மக்களைச் சென்றடைய வைத்திருக்கிறார் ஷங்கர்.

இது முழுக்க முழுக்க ஒரு ரஜினி படம்!


ஆனால், படையப்பாவோ, சந்திரமுகியோ அல்ல!

ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அதிலும், அந்த மொட்டை பாஸ் ரஜினி[பெயர் எம்ஜிஆர்!] சிம்ப்ளி சூப்பர்!


மற்றவர்கள், இதில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய கருத்தை.... கருப்புப் பணத்தை ஒழிக்க தன்னால் என்ன செய்ய முடியும்.... எனச் சிந்தித்தாலே போதும்.

போர் அடிக்காமல் போகிறது படம்!

அதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்.

சிவாஜி...... பாஸ்!





Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP