Wednesday, February 29, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 52 [47/2]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 52 [47/2]


[கந்தரநுபூதி 47 [இரண்டாம் பகுதி]

ஆறா றையுநீத் ததன்மே னிலையைப்
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே.

ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ
சீறா வரு சூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.

“சீறா வரு சூர் சிதைவித்து இமையோர் கூறா உலகம் குளிர்வித்தவனே.”

ஒரு காலத்துல, இந்திரன் தன்னோட ஒலகத்துல அல்லா சொகத்தியும் மானாவாரியா அனுபவிச்சுக்கினு தன்னோட ஆளுங்களோட ரொம்பவே சந்தோசமா இருந்தான். ஆட்டமின்னா ஆட்டம், பாட்டமின்னா பாட்டம், அமிர்தத்தக் குடிச்சதால சாவே இல்லாம, மனம் போன போக்குக்கு வாள்[ழ்]ந்துக்கினு, ரொம்ப ஜாலியா இருந்தான்!

வந்தான் சூரன்னு ஒர்த்தன்!
ஓங்கிப் போட்டான் தலையுல ஒரு போடு!

அவ்ளோதான்! துண்டைக் காணும், துணியைக் காணும்னு பிடிச்சான் ஓட்டம் இந்திரன்!
பொண்டாட்டி புள்ளைங்களைல்லாம் வுட்டுட்டு, சீர்காளி[ழி]க்குப் பக்கத்துல க்கீற ஒரு மூங்கில் பொதருக்குள்ளப் பூந்துக்கினு, ஒரு மூங்கிலுக்குள்ளாற ஒளிஞ்சுக்கினான்!

பாவம் அவனோட பொஞ்சாதி! இந்திராணி!
அந்தம்மா மேரு மலைக்குள்ளாறப் போயி குந்திக்கினாங்க!

இவுரு காப்பாத்துவாருன்னு நம்பிக்கினு ஆட்டம் போட்டுக்கினு இருந்த அக்கினி, வாயு, சூரியன், சந்திரன், இன்னும் மத்த தேவருங்க பாட்டுல வுளுந்திச்சு மண்ணு!
மொத்தமா மூட்டை கட்டிக்கினு போயி, அல்லாரையும் ஜெயிலுக்குள்ள தள்ளி இம்சை பண்ணினான் சூரன்!

தேவருங்க, பிரம்மா, பெருமாளு இப்பிடி அல்லாரும் போயி மொறையிட்டதால மனசு இரங்கின சிவன், தன்னோட நெத்திக்கண்ணுலேர்ந்து ஆறு பொறிங்களை அனுப்பி, ஆறுமொகத்தப் படைச்சு, அவரு கையுல ஒரு வேலையும் குடுத்து, ‘நீ போயி இவங்க தும்பத்தத் தீரு’ன்னு அனுப்பி வைச்சாரு!

அவரும் அப்பன் சொல்லைத் தட்டாம அப்பிடியே செஞ்சு, சீறி வந்த சூரனை அளி[ழி]ச்சு, சூரசம்ஹாரம் பண்ணி, தேவருங்களுக்கெல்லாம் திரும்பவும் தேவலோகத்தக் குடுத்தாரு!

இப்ப நம்ம அரசியல்வாதிங்கல்லாம் அடிக்கடி சொல்லுவாங்களே!... ‘தமிள்[ழ்]கூறும் நல்லுலகம்’னு! அப்பிடீன்னா இன்னா?
தமிள[ழ]ங்கல்லாம் இருக்கற ஒலகத்துக்கு அப்பிடி ஒரு பேரு!

அதேமாரித்தான், ‘இமையோர் கூறு ஆ ஒ[உ]லகம்!
கூறா ஒலகம்னா, கூறு ஆ ஒலகம்னு புரிஞ்சுக்கணும்!

இந்த ‘ஆ’ன்னா இன்னா? அத்த எப்பிடி சொல்லுவாருன்னு முந்தியே பல தபா சொல்லியிருக்கேன். ஒனக்கும் நெனைப்பு இருக்கும்னு நம்பறேன்’ என்றான் மயிலை மன்னார்.

‘பிமரம் கெட மெய்ப்பொருள் பேசிய ஆ’ என நாயர் முணுமுணுத்தான்!

‘அதே, அதே! கரீட்டா சொல்லிட்டியே நாயரே!’ எனத் தட்டிக் கொடுத்தான் மன்னார்! வியப்புடன் நாயரைப் பார்த்தேன் நான்!

‘செத்து சுண்ணாம்பாக் கெடந்த தேவருங்களுக்கெல்லாம், அவங்களோட சொகமான ஒலகத்த மறுபடியும் மீட்டுக் குடுத்து, அவங்க மனசையெல்லாம் குளுரப் பண்ணின முருகா!’ன்னு இந்த வரியுல சொல்லிப் பாடறாரு அருணகிரியாரு!

இப்ப, இந்த மொத்தப் பாட்டையும் பார்த்தியானா, ஒரு முக்கியமான விசயத்த நீ கெவனிக்கணும்!

அஞ்சஞ்சாச் சேர்ந்து ஒரு இருபது வந்தாக்கூட, அத்தோட ஒரு நாலு, ஏளு சேர்ந்து முப்பத்தொண்ணு ஆச்சுன்னு முன்னாடி சொன்னேன்ல!

அத்தோட கடைசியா மறுபடியும் இன்னொரு அஞ்சு சேர்ந்துத்தான் அது முப்பத்தாறு ஆச்சு!

நமசிவாய’ன்னு பஞ்சாட்சரம் இருந்தாக்கூட, அது அந்த சிவனோட ஆறு பொறியுல கெளம்பி, ஒரு ஆறு [கங்கை] வளி[ழி]யாப் போயித்தான், அல்லாருக்கும் ஒரு நெரந்தரமான சொகத்தக் குடுத்துது !! அஞ்சுதான் ஆறைக் காட்டிச்சு! ஆறுதலியும் குடுத்துது!

அஞ்சு இல்லாம ஆறு இல்ல!
ஆனாக்காண்டிக்கும், ஆறுதான் அல்லாத்துக்கும் மேலான நெலையக் குடுக்கும்ன்றத இதுல ரொம்பவே தெளிவாப் புரிய வைக்கறாரு அருணகிரியாரு…. புரிஞ்சுக்க நெனைக்கறவங்களுக்கு…. அத்தத் தேடறவங்களுக்கு!

கெடைக்கறவங்களுக்குக் கெடைக்கும்! பாக்கறவங்களால பாக்க முடியும்! அவ்ளோதான் என்னால சொல்லவும் முடியும்!’ என நிறுத்தினான் மயிலை மன்னார்!

‘ஆஹா! எவ்ளோ அழகாச் சொன்னேடா! நீ சொன்னதைக் கேட்டதும் என் மனசுல ஒண்ணு பட்டுது!

தங்கிட்ட மறைஞ்சிருக்கற அந்த ஆறாவது முகமான ‘அதோமுகத்தைக்’ காட்டணும்னு திருவுள்ளம் பண்ணிண்டு, அந்த சக்தியை தன்னோட நெத்திக் கண்ணுலேர்ந்து வெளியே கொண்டுவந்து, அப்படி வந்த மஹாசக்தியை, அந்த லோகமாதா சர்வேச்வரியாலியே ஆறுமுகக் கடவுளாப் பண்ணி, அவனோட சக்தியை இந்த லோகமே அறியணும்னு, எல்லாத்துக்கும் ஆதியான அந்த சர்வேச்வரனே என்னமோ தனக்குத் தெரியாதுன்றமாதிரி, ப்ரணவத்துக்குப் பொருள் கேக்கறதுக்காக, அந்தக் கொழந்தை முன்னாடி மண்டி போட்டு, பயபக்தியாக் கேக்கறமாதிரி நடிச்ச உலக மஹா நடிகனான அந்தப் பரமசிவனோட திருவிளையாடல்கள்ல இதுவும் ஒண்ணுன்னுதான் நினைக்கத் தோணறதுடா!’ எல்லாம் அந்தக் கபாலீச்வரனோட அருள்தான்!’ என எதிரில் தெரிந்த கபாலி கோவிலைப் பார்த்து வணங்கினார் சாம்பு சாஸ்திரிகள்!

‘சரியாப் புரிஞ்சுக்கினு ரொம்பத் தெளிவாச் சொல்லிட்டீங்க சாமி! ஆறுக்கு அஞ்சுதான் ஆதாரம்! ஆனா, ஆறுதான் ஒரே வளி[ழி]!’ என அவர் காலில் விழுந்தான் மயிலை மன்னார்!

பங்குனி உத்திரப் பெருமான் கோவில் மணி பலமாக அடித்து ஆமோதித்தது!
**************
[தொடரும்]
 அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, February 27, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 51 [47/1]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 51


47. [முதல் பகுதி]

ஆறா றையுநீத் ததன்மே னிலையைப்
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே.


ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ
சீறா வரு சூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.

‘நேத்தே சொன்னதுப்போல, இப்ப விசயம் கொஞ்சம் சீரியஸாகிப் போவுது!

 இதுவரைக்கும் சொன்னதுல்லாம் வேற! இப்ப சொல்றது ரொம்பவே வேற!
அநுபூதின்னா இன்னா? அது கிடைக்கணும்னா, எத்தயெல்லாம் வுடணும்? என்னல்லாம் பண்ணணும்? எப்பிடில்லாம் நடந்துக்கணும்?னு இதுவரைக்கும் சொல்லிக்கினு வந்த இந்தாளு, இப்ப, கொஞ்சம் பூடகமா,.... கொஞ்சம் வெளிப்படையாவே, சொல்லியும் சொல்லாமலும், புரியறவங்க புரிஞ்சுக்கறமாரி, இத்தப் பத்தி சொல்லத் தொடங்கறாரு!

எ[இ]லை மறைவு காய் மறைவான்னு சொல்லுவாங்களே, அத்த இந்தப் பாட்டுல நல்லாவே நாம பாக்கலாம்!
இத்தான்னு சொல்லலை! இது இல்லைன்னும் சொல்லலை! ஆனாக்காண்டிக்கு, அல்லாத்தியும் சொல்லிடறாரு!’ என ஆரம்பித்தான் மயிலை மன்னார்.

சாஸ்திரிகள் நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டார்! நாயர் கண்களை இன்னமும் இறுக்கமாக மூடிக் கொண்டான்! வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. நான் மட்டும் ஒன்றும் புரியாமல், என்ன சொல்றாங்க இவங்க எனும்படியாய், மூவரையும் மலங்க, மலங்கப் பார்த்தேன்!

அன்புடன் என்னைப் பார்த்தபடியே மன்னார் தொடர்ந்தான்.

‘நான் முன்னாடி ஒனக்கு ஒரு தபா சொன்னேனே அது நெனைப்பு க்கீதா? சைவ சித்தாந்தம் பத்தி! அத்த மறுபடியும் எண்ணிப் பார்த்தீன்னா, இதுல சொல்றது சுளுவாப் புரிஞ்சிரும்! இன்ன முளிக்கறே?

“ஆறாறையும் நீத்து”

இத்தத்தான் மொதமொதலா சொல்றாரு அருணகிரியாரு.

ஆறாறுன்னா இன்னா?
ஆறாறு முப்பத்தாறு! இப்பப் புரியுதா?’ எனக் கண்சிமிட்டினான் மயிலை மன்னார்!

‘அட! ஆமாம் மன்னார்! அப்போ அந்த முப்பத்தாறு தத்துவங்களைப் பத்தியும் விளக்கமா சொன்னியே!
ஆன்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் ஏழு, சிவ தத்துவம் ஐந்துன்னு சொன்னியே! இப்ப ஞாபகத்துக்கு வருது!’ எனக் கூவினேன் நான்!

‘பரவால்ல! ஏதோ கொஞ்சமாவது நெனைப்புல வைச்சிக்கினு க்கீறியே! அது வரைக்கும் சந்தோசந்தான்! அந்த முப்பத்தாறைப் பத்தித்தான் இப்ப சொல்ல வராரு அருணையாரு. அந்த முப்பத்தாறுல கடைசியாச் சொன்னது, ‘சிவ’ தத்துவம்! இப்ப சுருக்கமா இன்னொரு தபா சொல்றேன் கேட்டுக்க!

பஞ்சபூதம் அஞ்சு, பஞ்சபுலனுங்க அஞ்சு, பஞ்சப்பொறிங்க அஞ்சு, ஞானேந்திரியங்க அஞ்சு, மனம், புத்தி, அகங்காரம், சித்தமின்னு அந்தக்கரணங்க நாலு, வித்தியா தத்துவம்னு ஒரு ஏளு[ழு], ஆகக்கூடி, முப்பத்தொண்ணு. அதுக்கப்பால, சிவ தத்துவமின்னு ஒரு அஞ்சு!.ஆக மொத்தம் முப்பத்தாறு! ....ஆறாறு!

இதுல கடைசியா வர்றதுதான் சிவம்! இது வந்திரிச்சுன்னா, முளுக்க, முளுக்க ஞானமே நெறைஞ்சு கெடக்கும்!.

ஆனாக்காண்டிக்கு, இதுக்கப்பாலியும் ஒரு ரெண்டு மலம் நம்மைப் பிடிச்சு ஆட்டும்! ஆணவம், கன்மம்னு!

சிவாநுபூதி கெடைச்சதுக்கப்பாலியுங் கூட இந்த ரெண்டும் நம்மை வுடாது! இத்தக் களி[ழி]ச்சுக் கட்டினாத்தான் மெய்யான அநுபூதி கெடைக்குமாம்!

அத்தத்தான், ‘அதன்மேல் நிலையை’ன்னு இங்க சொல்றாரு அந்தப் பெரியவரு! அதுதான் பெரிய ‘பேறு’ன்னும் சொல்றாரு!

பேறுன்னா பெரிய பாக்கியம்னு அர்த்தம்!

அது எனக்கு எப்பிடிக் கிடைக்கும் முருகா? அதுக்கு எதுனாச்சும் வளி[ழி] க்கீதான்னு,… ‘பெரும் ஆறு உளதோ?ன்னு கதர்றாரு அருணகிரியாரு!

ஆறுன்னா வளி[ழி].

நீ சொன்னதப் பிடிச்சுக்கினு, வூடு, சொந்தம், பந்தம், நெனைப்பு, ஆசை, மயக்கம் அல்லாத்தியும் வுட்டுட்டேன் முருகா! நீயே கெதின்னு ஒங்காலையும் புடிச்சுக்கினேன் கந்தா! அப்பவும் நீ எனக்குத் தெரியலியே! நான் இன்னாதான் பண்ணணும்னு நீ சொல்றே! இதுக்கு இன்னாதான் வளி[ழி]ன்னு சொல்லு கொ[கு]மரான்னு கெஞ்சறாரு!

இதான்,… இந்த டெக்னிக்குத்தான் அருணகிரியாரு நமக்கெல்லாம் சொல்லிக் காட்டற ரூட்டு!

தனக்குக் கெடைச்சத, தன்னோட வைச்சுக்கினு மறைக்காம, இத்தத் தேடறவங்களுக்காகவும் சொல்லித் தர்ற நல்ல மனசு! ‘கரவே’ இல்லாத மனசு!

நேத்துக்கூட ஆரோ ‘தனக்குக் கிடைச்ச நல்லத்தயெல்லாம் மத்தவங்களுக்கும் கெடைக்கட்டுமே’ன்னு சொல்றாருன்னு எங்கையுல வந்து சொன்னியே’ அந்த நல்ல மனசு!

தேடறவங்களுக்குக் கெடைக்கும்! புரியறவங்களுக்குப் புரியும்…. புரியட்டும்னு இப்பிடி சொல்றாரு!

முப்பத்தாறியும் கடந்து போனீன்னா, ஒரு பெரிய அனுபவம் ஒனக்காகக் காத்துக்கினு க்கீதுன்றத எவ்ளோ தெளிவா,,…. அதே சமயத்துல பூடகமா.. சொல்லித் தராரு பாரு!

‘ஒரு பத்து நிமிசம்…. தெனமும் ஒரு பத்து நிமிசத்துக்கு காலைலியும், ராத்திரிலியும் ஒனக்குப் பிடிச்ச சாமிய மனசுல நெனைச்சுக்கினு தியானம் பண்ணுன்னு ஒங்காளு சொன்னாருன்னு அன்னைக்கு சொன்னியே! அதுதான் இதுவும்! செய்யிறியோ நீ? .....இல்ல! .....அதான் இப்பிடி இன்னமும் முளி[ழி]ச்சுக்கினு க்கீறே!’ என ஒரு விதமான பரிவுடன் என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!

ஏதோ ஒரு அணுகுண்டு வந்து என் தலையில் விழுந்தது போன்ற திகிலுடன் அவனை ஏறிட்டு நோக்கினேன்!

என்னைப் பொருட்படுத்தாமல் மேலே தொடர்ந்தான் மயிலை மன்னார்!

‘இப்ப நான் சொன்னது அத்தினியையும் வுட்டுட்டு, இதுக்கும் அடுத்த ரெண்டு வரிக்கும் இன்னா சம்மந்தம்னுதான் நீ கேக்கப்போறே! ஏன்னா, நீ இன்னும் பொஸ்தக அறிவாலியே அல்லாத்தியும் சமாளிச்சிரலாம்னு நெனைக்கறே! தெரிஞ்சுக்க நெனைக்கறது நல்லதுதான்!
ஆனா, நாப்பத்தேளு[ழு]க்கு வந்தாச்சு! இப்பவாவுது புரிஞ்சுக்க ‘ட்ரை’ ப்பண்ணு. இன்னா நான் சொல்றது?’ எனச் சிரித்தான் மன்னார்.

எனது கண்களும் தானாக மூடிக்கொண்டன! காதுகள் மட்டும் மன்னார் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தன.

[அடுத்த பகுதி நாளை வரும்!]
**************
[தொடரும்]

தொடர்ந்து படித்து ஆசிகூறும் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Thursday, February 23, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 50 [46]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 50


46.

எந்தாயு மெனக் கருள்தந் தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே.

என் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனை ஆள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே.

மயிலை மன்னார் வந்து உட்கார்ந்தவுடனேயே, மடமடவெனப் பாடலைப் படித்து, அவனைக் கட்டிக் கொண்டேன்.

‘பரவாயில்லியே! இதுவரைக்கும் சொன்னதுக்கு ஒரு பலன் இருக்கு போலிருக்கே!’ எனத் தன்னையறியா ஒரு மகிழ்ச்சியுடன் என்னை அணைத்துக் கொண்டான் மன்னார்!

‘சரி, இப்ப பாட்டைப் பார்க்கலாம். மொத வரியுலியே ஒரு பெரிய விசயத்தைச் சொல்றாரு அருணையாரு.

'என் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ'

ஆத்தாகிட்ட எப்பவுமே ஒரு தனியான உரிமை வந்திரும்! எனக்கு ஒரு நல்லது பண்றதத் தவிர வேற வேலையே இவளுக்குக் கெடையாதுன்னு ஒரு நம்பிக்கை நமக்குள்ள வந்திருது. மத்தவங்களுக்கெல்லாம் குடுக்கற மரியாதையைக் குடுக்காம, 'ஏ ஆத்தா'ன்னு நேரடியாச் சொல்லிருவோம். அன்பு ஜாஸ்தியினால வர்ற வார்த்தை அது! அத்தயேதான் இதுலியும் சொல்றாரு அருணகிரியாரு…… என் தாயின்னு.

அத்தயே நைனாகிட்ட வர்றப்ப பாத்தியானா, ஒரு கூடுதல் மரியாதை தானா வந்திரும். அன்பு செலுத்தற அம்மாகிட்ட உரிமை! அதே அப்பான்னு வர்றப்ப, அருள் பண்ற தந்தையேன்னு பணிவா சொல்றாரு.
இந்த ரெண்டு வார்த்தைக்குள்ளியே பெத்தவங்களை எப்பிடி மதிக்கணும், எப்பிடி அவங்ககிட்ட போவணும்ன்றதக் கோடிகாட்டிச் சொல்லியிருக்காரு பாரு!

எங்கிட்ட அன்பு காட்டறவணும் நீதான்! எனக்கு அருள் பண்றவனும் நீதான்! அதுனால, நீதான் எனக்கு ஆத்தாவும், நைனாவுமா க்கீறேன்னு பாசமாக் கூப்புடறாரு அருணையாரு.

இப்ப அவருக்கு ஒரு பெரிய கவலை புடிச்சு ஆட்டுது! இந்த ஒலகத்துல க்கீற மக்களெல்லாம் இப்பிடி தறிகெட்டுப் போயி அலையுறாங்களே; அல்லாத்தியுமே தன்னோட அறிவுனால சமாளிச்சிரலாம்னு கெர்வம் புடிச்சுத் திரியறாங்களே! அந்த எமன் பாசக் கவுத்த எடுத்துக்கினு தன்னோட மீசையை முறுக்கிக்கினு, 'கெளம்புறா மவனே'ன்னு வரக்கொள்ள, இந்த பாளா[ழா]ப்போன அறிவா வந்து காப்பாத்தப்போவுது? இத்தப் புரிஞ்சுக்காம இப்பிடி தலைக்கனம் பிடிச்சு மயங்கறாங்களே!'ன்ற கவலைதான் அது!

அதப் பத்தி யோசனை பண்னிப் பண்ணி இவரு மனசு கெனத்துப் போயிருது! அதத்தான் 'சிந்தாகுலம்'னு சொல்றாரு! முன்னாடி ஒரு தபா சொல்லியிருக்கேன்ல, ஆகுலம்னா கவலைன்னு. இப்ப சிந்தை ஆகுலம்... அதாங்காட்டிக்கு.... மனக்கவலை வந்து வாட்டுது இவரை!
இந்தக் கவலையைத் தீர்த்து என்னை ஆட்கொள்ளுப்பான்னு கெஞ்சறாரு இந்த வரியுல, “ சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனை ஆள்”.
இன்னுமொரு விசயம் இதுல நீ கெவனிக்கணும்! சிந்தாகுலம் தீர்த்து என்னிய ஆளுன்னு சொல்லலை! சிந்தாகுலம் ஆனவைன்னு சொல்லிருக்காரு!

அதென்னா ‘ஆனவை’?ன்னு நீ கேப்பே! இந்த அறிவு குடுக்கற ஆணவத்தால இன்னான்னால்லாம் வருதுன்றதப் பட்டியல் போடற வார்த்தைதான் அந்த ‘ஆனவை’.

ஆசை, பேராசை, கோவம், ஆத்தரம், காமம், லோபம், வெறுப்புன்னு பலதையும் இந்த அறிவு நமக்குக் காட்டிக் குடுக்கும்! அதும் போக்குல போயி நாமளும் கண்டதியும் பண்ணிருவோம். அத்தயெல்லாம் சேத்துத்தான், சிந்தாகுலம் ஆனவை அல்லாத்தியுமே நீ தீத்து என்னைக் காப்பாத்துப்பான்னு சொல்றாரு!

இத்தயெல்லாம் நமக்காவத்தான் சொல்றாருன்றதப் புரிஞ்சுக்கோ!
நம்ம மேல வைச்ச அக்கறையால!’ எனப் பாசமாகச் சிரித்தான் மயிலை மன்னார்!

அதெல்லாம் சரி, மன்னார்! இப்ப அதுக்கும் அடுத்தாப்புல வர்ற வரிக்கும் என்ன சம்பந்தம்?’ எனக் கேட்டேன் நான்.

‘‘அருணகிரியாரு ரொம்ப ரொம்பப் பெரிய ஆளு! அவரை அப்பிடி ஆக்கினது அந்த முருகன்! அப்பனா அருள் பண்ணி, ஆத்தாவா அன்பு பண்ணி இவருக்குத் தாயும், தந்தையுமா இருந்த முருகன்!
அத்தச் சொன்ன அருணகிரியாரு ச்சும்மா வெறுமினியா அடுத்த வரியைப் போட்டிருப்பாரு! சரியான ‘குடாக்’குடா நீ!’ எனச் சிரித்தான் மன்னார்!

பொங்கிவந்த சிரிப்பைத் தன் மேல்துண்டால் மறைத்தபடி சிரித்தார் சாஸ்திரிகள்!

ஒரே ஒருமுறை தன் கண்ணைத் திறந்து என்னைப் பார்த்துவிட்டு, தன் ‘ஓம் சரவணபவ’ உச்சாடனத்தைத் தொடர்ந்தான் நாயர்!

எனக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது! மன்னாரைப் பரிதாபமாகப் பார்த்தேன்!

சொல்லமுடியாத அன்புடன் என்னைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் பேசத் தொடங்கினான் மயிலை மன்னார்!

‘அடுத்த ரெண்டு வரியை நல்லாக் கெவனி!

‘கந்தா, கதிர்வேலவனே, உமையாள் மைந்தா, குமரா, மறை நாயகனே ‘

கந்தான்னு மொதல் வார்த்தை!

கந்தன்னா ஆரு?
சிவனோட புள்ளை. அது மட்டுமில்ல! இன்னோரு அர்த்தமும் க்கீது!

தன்னோட புலனையெல்லாம் அடக்கின அருகன்னும் ஒரு பொருள் சொல்லுவாங்க!

இவருக்கு என்னல்லாம், எதுனாலல்லாம் மனக்கவலை வந்துச்சோ, அத்தயெல்லாம் அடக்கினவனைக் கூப்பிடறாரு!

அடுத்தாப்புல, கதிர்வேலவனேன்றாரு!

வேலு ஞானத்தோட அடையாளம்!
கதிர்வேலுன்னா சூரியனோட கதிர்மாரி ஞானத்தக் கூராக்கி வைச்சிருக்கறது.
அத்தக் கையுல வைச்சுக்கினுக்கீற ஆளுதான் நம்ம கந்தன்!

ம்ம்ம்.. அடுத்து இன்னா?
‘உமையாள் மைந்தா’

இந்த ஒரு வார்த்தையுல ஆத்தான்றவளோட அத்தினி அன்பையும் அப்பிடியே பிளி[ழி]ஞ்சு தந்திட்டாரு நம்ம அருணகிரியாரு!

முருகன் பொறந்தது சிவனோட நெத்திக் கண்ணுலேர்ந்து!

வளந்தது ஒரு கொளத்துல!

பால் குடுத்ததோ ஒரு ஆறு பொண்ணுங்க!

இந்தம்மா, உமையா,… பண்ணினதெல்லாம் அந்த ஆறு கொளந்தையையும் ஒண்ணாச் சேத்தது மட்டுந்தான்!

அது ஒண்ணே போதும்னு அல்லா சொந்தபந்தத்தியும் வுட்டுட்டு, ‘ஒமையாள் மைந்தா’ன்னு உரிமையாக் கூப்பிடறாரு அருணையாரு!

அதான் அம்மாவோட பெருமை! வேற ஆருக்கும் கிடைக்காது அந்தப் பெருமை!

குமரான்னு அடுத்தாப்பல! அப்பனுக்கும் கொமரன்! ஆத்தாவுக்கும் இவந்தான் கொமரன்!

மறைநாயகனேன்னு ஒண்ணை ஸ்பெசலா போடறாரு இப்ப!

இதுக்கு முன்னாடியே எத்தினியோ தபா இந்தக் கதையை சொல்லிக்கீறேன்!
ஓம்முன்றதுக்கு முருகன் பொருள் சொன்ன கதையை!

பெத்த அப்பனை மருவாதியாக் கூப்பிடறது அல்லாரும் செய்யறது!
ஆனாக்காண்டிக்கு, இந்த எடத்துல மட்டுந்தான், பெத்தவனே மண்டியிட்டுக் கேட்ட கதை!

பெக்காதவளே ஆத்தா! பெத்தவனே மண்டியிட்டுக் கேட்டான்!

அப்பிடியாப்பட்ட பெருமை இந்த முருகனுக்கு க்கீது!

இப்பிடியாப்பட்டவனைப் பாத்து, நீதான் எனக்கு ஆத்தாவும், அப்பனும்!
நீதான் என்னோட மனக்கவலையைத் தீத்து வைக்கணும்னு இவரு கேக்கறதுல இன்னா தப்பு? இவரு பண்ணாத வேற ஆரால பண்ணமுடியும்?
இப்பப் புரியுதா?’ என என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!

என்னையறியாமலேயே, என் வாயினின்றும், ‘ஓம் சரவணபவ’ மந்திரம் தானே வெளிப்பட்டது!
கபாலி கோயில் மணியும் அதை ஆமோதிப்பதுபோல அப்போது ஒலித்தது!
மீண்டும் ஒருமுறை தன் கண்ணைத் திறந்து என்னைப் பார்த்துவிட்டு, தன் ஓம் சரவணபவ உச்சாடனத்தைத் தொடர்ந்தான் நாயர்!
**************
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, February 20, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 49

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 49


45.

‘நம்மகிட்ட எந்த ஒளிவு மறைவுமில்லைப்பா! நம்மகிட்ட இருக்கற சரக்கை நம்ம சிஸ்யப் புள்ளைங்ககிட்ட அல்லாத்தியும் சொல்லிக் குடுத்திருவேன். அதான் நம்மளோட ஸ்பெசலு’ என்றவாறே வந்து அமர்ந்தான் மயிலை மன்னார்.


‘அது சரி, இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்றே மன்னார்?’ என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

'பின்ன இன்னா ஐயரே! இந்தக் கோவாலுப் பய நேத்து நம்ம வூட்டாண்டை வந்து அளுதுக்கினே நிக்கறான். இன்னாடா சமாச்சாரம்னு கேட்டா, ‘அண்ணே! எனக்கு ஒன்னிய வுட்டா ஆருமேயில்ல. எனக்கு ஒரு தொளி[ழி]ல் கத்துக்கொடு’ன்னு கெஞ்சறான். எங்கிட்ட வந்தவனுக்கு இதுவரைக்கும் எதுனாச்சும் மறுப்பு சொல்லிருக்கேனா? சரி, வாடான்னு சேத்துக்கினேன்’ எனச் சிரித்தவாறே சொன்னான் மயிலை மன்னார்.


‘அதான் எனக்கு நல்லாவே தெரியுமே மன்னார்! நான் எப்ப வந்து எதைக் கேட்டாலும், உனக்குத் தெரிஞ்சதைத் தயங்காம எனக்கு சொல்லிகிட்டே இருக்கியே! இன்னிக்கு நேத்துப் பழக்கமா நம்மளுது? உன்னோட குணம்தான் எனக்கும் தெரியுமே’ என்றேன் நான்.


அன்புடன் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே, ‘இப்ப வரப்போற பாட்டும், இதைத்தான் சொல்லுது. எங்கே நீ பாட்டைப் படி’ என்றான் மன்னார்.

‘ஓ! அதுக்குத்தான் இப்படி ஒரு பீடிகையா!’ என மனதுக்குள் சிலாகித்தபடியே பாட்டைப் படித்தேன்.

கரவா கியகல் வியுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோ கதயா பரனே.


கரவாகிய கல்வியுளார் கடை சென்று
இரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே.


“கரவாகிய கல்வியுளார் கடை சென்று இரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ?”

இதுவரைக்கும் வந்த பாட்டுங்களைப் புரிஞ்சுக்கிட்ட ஒர்த்தன், நாயமா இன்னா பண்ணுவான்?


இந்த முருகன்றது ஆரு? அவன் எப்பிடியாப்பட்டவன்? அவனை பக்தி பண்றது எப்பிடி?ன்னு தேடுவான்.


இதுவரைக்கும் சொன்னாப்பல, ஒரு குருவைத் தேடி, அவர் கையுல்லேர்ந்து, ஒரு ஞானத்தை அடையறதுக்கு, அவரோட வூட்டாண்டை போயி நிப்பான்!


ஆனாக்காண்டிக்கு, இந்த வரியுல ஒரு முக்கியமான சமாச்சாரத்தை அருணகிரியாரு சொல்லிக் காமிக்கறாரு.


நாம தேடிப் போயி அடையுற அல்லாக் குருமாரும், நமக்கு அல்லாத்தியும் சொல்லிக் குடுக்க மாட்டாங்களாம்!


தனக்குத் தெரிஞ்ச அல்லாத்தியும், தன்னோட சிஸ்யனுக்குச் சொல்லித் தர்ற குருமாருங்க ரொம்பவே கம்மி!


எங்கே அல்லாத்தியும் தெரிஞ்சுக்கினு, இவன் நமக்கும் மேலியும் போயிருவானோன்னு, ஒரு கிலி பிடிச்சு, உள்ளத மறைச்சுச் சொல்ற குருமாருங்கதான் பெரும்பாலுமா இருக்காங்களாம்.


‘கரவு’ன்னா, உள்ளத மறைக்கறதுன்னு பொருளு!


நீகூட கேட்டிருப்பியே, காக்கா கரவுதுன்னு! அதுக்கு இன்னா அர்த்தம்?


ஒரு பண்டம் திங்கறதுக்குக் கிடைச்சிருச்சுன்னா, ஒரு காக்கா இன்னா பண்ணும்?
‘கா..கா’ன்னு கத்தி தன்னோட கூட்டத்தியே கூட்டிரும்.


‘காக்கா – நரி’ கதையுல கூட இன்னா ஆச்சு?
தன்னோட கூட்டம் இல்லேன்னு தெரிஞ்சுங்கூட, ஒரு நரி ‘கா…கா’ன்னு கத்தினதும் வடையைக் கீளே[ழே] போட்டிருச்சு!


ரொம்பப் பேரு சொல்லுவாங்க காக்கா ஏமாந்து போயிருச்சுன்னு!
ஆனா, அது அப்பிடி இல்ல!
தங்கிட்ட இருக்கறத மறைக்க நெனைச்சாலுங்கூட, அதால முடியாது. அதோட கொரலு காட்டிக் கொடுத்திரும். அதான் காக்காவோட கொணம்!


இந்தக் காலத்துல, இதும்மாரி இருக்கற குருமாருங்க ரொம்பவே கம்மியாப் பூட்டாங்க!
அதுமாரி க்கீற ஆளுங்களப் பத்திதான் இந்த வரியுல சொல்றாரு அருணையாரு.


‘கரவாகிய கல்வியுளார்’னா, தனக்குத் தெரிஞ்சத, புரிஞ்சத, அறிஞ்சத, மத்தவங்க முளு[ழு]சாத் தெரிஞ்சுக்கக் கூடாதுன்னு பயப்படறவங்க!


அதுக்கு இன்னா வோணும்னாலும் காரணம் அவங்களுக்குள்ள இருக்கலாம்.
இவன் இதுக்குத் தகுதியானவானா, இவன் இத்தத் தெரிஞ்சுக்கினு இன்னா பண்ணுவானோ, இவன் வேற ஏதோ நம்பிக்கையுல இருக்கறவனாச்சே, இவனுக்கு இத்தச் சொல்லலாமான்னு இன்னான்னாமோ காரணம்லாம் இருக்கலாம்.
ஆனாக்காண்டிக்கு, இவங்க அல்லாருமே ‘கரவாகிய கல்வியுளார்’தான்னு நமக்குக் காமிச்சுக் குடுக்கறாரு அருணகிரியாரு.


இவங்க வூட்டு வாசல்ல, அதான் ‘கடை’ …. கடைன்னா வூட்டு வாசல்னு அர்த்தம்…. போயி நிக்காம, எனக்குச் சொல்லிக் குடுப்பான்னு கெஞ்சாம… ‘இரவா’ன்னா, கெஞ்சறது….. எனக்கு ஒரு உண்மைய ஒன்னோட பிச்சையா எனக்குப் போடுவியா… ‘ஈகுவையோ’ன்னு… இந்த வரியுல புட்டுப் புட்டு வைக்கறாரு அந்த மகாப் பெரியவரு.


நீயும் எத்தினியோ ஆளுங்ககிட்ட போயிருப்பே!
இவர்தான் என்னோட குருன்னு அவர் சொல்ற வார்த்தையுல நம்பி மயங்கியிருப்பே.


ஆனாக்காண்டிக்கு, இத்தயெல்லாம் வுட்டு, நீ எப்பவும் நம்பற முருகனையே வேண்டினியானா, அவரே ஒனக்கு அல்லாத்தியும் புரிய வைப்பாருன்றத இதுல சொல்றாரு.


அதுக்காவ, நீ பாக்கற அல்லாக் குருமாருங்களயுமே தப்பு சொல்றேன்னு நெனைச்சுக்காத!


ஒம்மேல அன்பு வைச்சு, ஒனக்கு அல்லாத்தியும் சொல்ற அல்லாருமே முருகந்தான்! அப்பிடியாப் பட்டவங்களும் நெறையவே க்கீறாங்க.
அந்த முருகன் தான் இவங்க ரூபத்துல வந்து, ஒனக்கு ஒரு நல்ல வளி[ழி]யைக் காட்டித் தரான்
அத்த நல்லாப் புரிஞ்சுக்கோ!!~ சரியா!’ என்று நிறுத்தி என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்.


‘அப்போ, அந்த அடுத்த இரண்டு வரி? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், மன்னார்?’ என்றேன் நான் வெள்ளந்தியாக.

“குரவா குமரா குலிசாயுத குஞ்சரவா சிவயோக தயாபரனே.”

‘இதானே அடுத்த ரெண்டு வரி?
ஒண்ணொண்ணித்தியும் பொறுக்கிப் பொறுக்கிப் போட்டிருக்காரு அந்த ஞானி!


‘குரவா’ன்னா மகாப் பெரிய குருவேன்னு அர்த்தம்!


இது வரைக்கும் ஒரு ஒரு குருவோட தகுதியைப் பத்திச் சொன்னவரு மொத மொதலாப் போட்டது, இந்த வார்த்தை!


பிரம்மனைப் பார்த்து ‘ஓம்’முன்றதுக்கு அர்த்தம் சொல்லிக் கேட்டு, அவருக்குத் தெரியலைன்னதும், அவரைத் தலையுல நல்லாக் குட்டி, ஜெயில்ல தள்ளினதும், நைனா கபாலி வந்து கேக்கக் கொள்ள, ‘எனக்கு அதோட அர்த்தம் தெரியும்! ஒனக்கு வோணும்னா, ஒளுங்கு மரியாதியா வந்து கேட்டாச் சொல்வேன்’னு சொன்னதோட நிக்காம, தன்னோட வூட்டு வாசல்ல.. சாமிமலைல…. வந்து கேட்ட சிவனுக்கு அதோட அர்த்தத்தச் சொன்னவரு நம்ம கந்தன்!


தனக்குத் தெரிஞ்சத மறைக்காமச் சொன்னவரு இவரு!
அதைத்தான், ‘குரவா’ன்னு மொத வார்த்தையாப் போடறாரு’

‘இப்ப நான் ஒண்ணு சொல்லியே ஆகணும்!’ என மறித்தார் சாம்பு சாஸ்திரிகள்.
நாயர் கடை மசால் வடையைக் கடித்தபடியே, ‘சொல்லுங்க சாமி’ என டீயை உறிஞ்சினான் மயிலை மன்னார்.


‘அந்தக் குரு சிவபெருமானுக்கு பிரணவப் பொருளை விளக்கினதால சிவகுரு ஆனார். அது மட்டுமில்லாம, அகஸ்தியருக்கும், நந்திதேவருக்கும், தசரத ராமனுக்கும், வாமதேவ முனிவருக்கும், நாரதருக்கும், பராசர முனிவரோட புத்திரர்கள் ஆறு பேருக்கும் கூட குருவா வந்து உபதேசம் பண்ணினதால, ‘பரமகுரு’ன்னும் ஒரு பேரு இவருக்கு உண்டு’என்றார் சாஸ்திரிகள்.

‘அட! ‘குரவா’ன்றதுக்கு இத்தினி அர்த்தம் இருக்கே! ரொம்ப நல்லாச் சொன்னீங்க சாமி!’ எனத் தொடர்ந்தான் மயிலை மன்னார்.


‘அடுத்த வார்த்தை ‘குமரா’


இத்த அந்த மொத வார்த்தையோட சேத்துப் பாத்தீன்னா, 'குமரகுரவா’ன்னு புரியும்!
அதாவுது, சின்னப் பையனா இருக்கறப்பவே, இத்தையெல்லாம் பண்ணி, பரமகுருவா ஆனவன்னு அர்த்தம்.


இதுல இன்னா சொல்றாருன்றதக் கெவனி!
ஒரு ஆளோட வயசை வைச்சு, இவரு என்னிய விட சின்னவராச்சே. இவுரு எப்பிடி எனக்கு குருவாக முடியும்னு மயங்காதே!
வயசுக்கும், ஞானத்துக்கும் சம்பந்தமில்ல.
புரிஞ்சுக்கோ!


‘குலிசாயுத குஞ்சரவா’ன்னு அடுத்த வார்த்தை!


‘குலிசாயுதம்’னா இன்னா?
இந்திரன் கையுல வைச்சுக்கினு க்கீற வச்சிராயுதம்!
ரெண்டாயிரம் நுனி க்கீதாம் அதுக்கு! வைரத்தால ஆயுதம் இந்த வச்சிராயுதம்!


அந்த இந்திரனுக்கு ஒரு ஆனை!
அயிராவதம்னு பேரு அதுக்கு.


அது வளத்த பொண்ணுதான் தேவசேனையம்மா.
அதான் தெய்வானை.


சூரனை அளி[ழி]ச்சு தேவருங்களையெல்லாம் காப்பாத்தினதால, இந்திரன் தன்னோட மகளான தெய்வயானையை முருகனுக்குக் கண்ணாலம் பண்ணி வைச்சாரு.
அதுனல, 'குலிசாயுத குஞ்சரவா’ன்னு பாடறாரு’ என்றான் மன்னார்.

‘இப்போழ் இதுக்கும் இந்தப் பாட்டுக்கும் எந்தா சம்பந்தம்?’ எனக் கேட்டான் நாயர்!

‘சரியாக் கேட்டே நாயரே! சொல்றேன் கேளு!


வள்ளி இச்சா சக்தி, தேவானையம்மா கிரியா சக்தின்னு முன்னாடியே சொன்னேன்ல.
நாமல்லாம் இச்சா சக்திங்க! இந்த அனுபவம் புரியணும்னு ஒரு இச்சையுல அலையறவங்க! ஆனா, அத்த நடத்திக் குடுக்க ஒரு கிரியா சக்தி வோணும்!
எந்த ஒரு ஆசையையுமே நடத்தறதுக்கு ஒரு கிரியா சக்தியோட தொணை வோணும்!
நாம அந்த முருகன் வூட்டு வாசல்ல போயி ஏதோ ஒரு ஆசையோட நிக்கறச்ச, அத்த நடத்திக் கொடுக்கறவந்தான் முருகன்! ஏன்னா, அவன் இச்சா, கிரியான்னு ரெண்டையுமே தன்னோட வைச்சுக்கினு க்கீறான்!


அதுக்காவத்தான், இதுவரைக்கும் வள்ளியைப் பத்தியே சொல்லிக்கினு வந்த அருணகிரியாரு, இப்ப தேவானையம்மாவை இந்தப் பாட்டுல மொத மொதலாக் கொண்டு வர்றாரு.


இப்ப கடைசி வார்த்தையைக் கெவனி!


‘சிவயோக தயாபரனே’


இந்த ஒலகத்துக்கே ஆதியானவன் அந்த சிவந்தான்!
ஆரு இன்னா பண்ணினாலும், அந்த சிவயோகம் வர்றதுதான் ரொம்ப முக்கியம்.
அது கிடைக்கறதுக்கு கருணை பண்றவந்தான்… “தயாபரந்தான்”…. நம்ம கந்தக் கொ[கு]மரன்!


அவனே நமக்குல்லாம் குருவா வந்து, எத்தயும் ஒளிச்சு மறைக்காம, அல்லாத்தியும் சொல்லிக் குடுத்து, நம்மளக் கரையேத்தணும்னு நமக்காவ வேண்டிக்கறாரு அருணகிரியாரு!


அனுபூதின்னா இன்னா, அது வரணும்ன்னா, நாம எத்தயெல்லாம் விட்டொளி[ழி]க்கணும், அதுக்காவ, ஆருகிட்ட வேண்டணும், ஆரு காலைப் பிடிக்கணும்னு இதுவரைக்கும் சொன்னவரு, இந்தப் பாட்டுல, ஆரு குருவா வரணும், அத்துக்கு அந்தக் குருவுக்கு இன்னாத் தகுதி இருக்கணும்னும் சொல்லிக் காட்டியிருக்காரு!


ஆகக்கூடி, இந்தப் பாட்டை, தான் ஒரு குருன்னு நெனைச்சுக்கினுக் க்கீற அல்லாக் குருமாருமே ஒரு தபா தன்னை ஒரு சுயவிமரிசனம் பண்ணிக்கணும்ன்றதியும் பூடகமாச் சொல்லிருக்காரு அருணையாரு’ என முடித்தான் மயிலை மன்னார்!

‘ரொம்ப நன்னாச் சொன்னேடா மன்னார்! தேடறவனுக்கு மட்டுமில்லாம, தேடறவனுக்குக் குருவா வர்றவருக்கும் என்ன தகுதி இருக்கணும்னு இந்தப் பாட்டுல அருணகிரியார் சொல்லியிருக்கார்!


இப்பிடி, ஒளிச்சு மறைச்சு சொல்லிக் கொடுக்கறவாளுக்கு என்ன நடக்கும்னு அப்பர் ஸ்வாமிகள் ஒரு பாட்டுல ரொம்பத் தெளிவாச் சொல்லியிருக்கார்!


‘இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்’


கேட்டவனுக்கெல்லாம் கொடுக்க வைச்சாராம். கொடுக்கறவனுக்கெல்லாம், அப்பிடிக் கொடுக்கறதுக்கான அருளைக் கொடுத்தாராம்; அப்பிடிக் கொடுக்காம ஒளிச்சு, மறைச்சு வைச்சவனுக்கெல்லாம், கொடுமையான நரகங்களை வைச்சாராம். ஒண்ணு ரெண்டு இல்லை, நரகங்கள்னு எண்ணிக்கையே இல்லாமச் சொல்லியிருக்கார் அப்பரடிகள்.


இதைப் புரிஞ்சுண்டு, தனக்குத் தெரிஞ்சதெல்லாம், லோக க்ஷேமத்துக்குத்தான்னு பாகுபாடில்லாம, அள்ளியள்ளிக் கொடுக்கறவாதான் குருன்னு இதுல ரொம்பத் தெளிவா சொல்லியிருக்கார்டா!’ என்றார் சாம்பு சாஸ்திரிகள் .


‘ஓம்’ என்பதுபோல், கபாலி கோயில் மணியோசை ஒலித்தது!
நாயரின் ‘ஓம் சரவணபவ’ தொடர்ந்தது!

[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Friday, February 17, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 48” [44]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 48”


44.

சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே


சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ
வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்
காடும் புனமும் கமழும் கழலே

‘’இனிமே கொஞ்சம் சீரியஸாக் கவனிக்கணும்! இனி வரப்போறப் பாட்டுங்கள்லாம் ரொம்பவே நுணுக்கமான விசயங்களைச் சொல்ற பாட்டுங்க! இதுவரைக்கும் சொன்ன சங்கதிங்க அத்தனையையும் சேத்துவைச்சு முத்து முத்தா சொல்லிருக்காரு அருணகிரியாரு. கவனமாக் கேளு!’ என்றபடி தொடங்கினான் மயிலை மன்னார்.

அவனே அப்படிச் சொன்னதும், அந்தத் திண்ணையே கொஞ்சம் பரபரப்பானது!

‘நான் முன்னாடியே சொன்னதுபோல, கொத்துக்கொத்தப் பாட்டுங்களை அமைச்சுப் பாடியிருக்காரு இந்த அநுபூதியுல!

அதுலியும், இந்தப் பாட்டு க்கீதே….ரொம்பவே அருமையான பாட்டு!
மொத வரியெ ரொம்ப ரொம்ப அம்சமாப் போட்டுருக்காரு!

‘சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லுமதோ?’

கேள்வி கேக்கறமாரி, ஒரு கொக்கியைப் போட்டு, அப்பிடியே பூடகமா, தனக்கு இன்னா நடந்திச்சுன்றத சொல்லாமச் சொல்லி நமக்கெல்லாம் புரியவைக்கறாரு இதுல!

இந்த வரிக்கு பலவிதமா அர்த்தம் பண்ணிக்கலாம்! அதுல ஒரு ஒண்ணு ரெண்டை மட்டும் இப்பப் பாக்கலாம்!

மனசைப் பாத்து ஒரு கேள்வி கேட்டு, ‘நீ இதும்மாரி என்னிய கஸ்டப்படுத்தலாமா? ஒனக்கு இன்னாதான் வோணும்? ஏன் இப்பிடில்லாம் இம்சைப் படுத்தறே?’ன்னு கோவிச்சுகிட்டு, அதுக்கப்பறமா, அந்த மனசையே பாத்து, ‘நீ இன்னின்னமாரி நடந்துக்கினா ஒனக்கும், எனக்கும் எம்மாம் பெரிய பரிசு காத்திருக்கு’ன்னு ஆசை காட்டி, கொஞ்சங்கொஞ்சமா அத்தத் தன்னோட வளி[ழி]க்குக் இஸ்த்துக்கினு வந்து, ‘தோ பாரு, நீ கொஞ்சம் கட்டுப்பாடோட இருந்தியானா, எனக்கும் ஒனக்கும் இந்த ஆசைன்றதே அத்துப் பூடும், அப்பா, அம்மா, பொண்டாட்டி, புள்ளை, குட்டி, சொத்து, சொகம்ன்ற எல்லாத்தும் பின்னாடியும் அலையாம, அந்த முருகன் காலடியுலியே வுளுந்து கெடக்கலாம். அவனாப் பாத்து, நம்ம நெலையக் கண்டு மனசு எ[இ]ளகிப்போயி, நமக்கு அருள் பண்ணுவான். அவன் ரொம்ப ரொம்ப நல்லவன்! தங்கிட்ட வந்தவங்களை அவன் காப்பாத்தாம வுடமாட்டான்னு நைஸு பண்ணி, நைஸு பண்ணி தன்னோட மனசை இம்மாந் தூரத்துக்கு இட்டாந்திட்டாரு!


இதுக்குப் பரிசா அவருக்குக் கெடைச்சது இன்னான்றத இப்பச் சொல்றாரு … இந்தக் கேள்வி மூலமா? நல்லாக் கெவனி!


‘சாடும்’னா அளி[ழி]க்கறதுன்னு பொருளு!

'தனிவேலு'ன்னா, தனக்கு சமமே இல்லாத ஒசந்த வேலுன்னு சொல்லலாம்!

அது எத்த சாடிச்சு?..அளி[ழி]ச்சுது?
சூரனை! அவனோட கூட்ட வந்த அசுரப் படைங்களை!!

அதுவாவா சாடிச்சு?
நம்ம முருகனோட கருணையினால மட்டுமே, எதுத்து வந்த அல்லாரையுமே அந்தத் தனிவேலு அளிச்சுது!

அப்பிடியாப்பட்ட தீரனான கந்தக் கடவுளு. தன்னோட திருப்பாதங்களை எடுத்து, இவரோட தலை மேல வைச்சு ‘இந்தா! இத்த ஒன்னோட தலையுல பூ மாரி வைச்சுக்கோ! சூடிக்கோன்னு தந்தாராம்!

இத்தனியும் சொல்லிட்டு, ஒண்ணுமே தெரியாத பச்சைப் பாப்பா மாரி, இத்தப் போயி, நான் இன்னான்னு சொல்றதுன்னு அப்பாவியாக் கேக்கறாராம்!

இது ஒரு அர்த்தம்!


இப்ப இத்தயே இன்னோரு விதமாப் பாப்பம்!

‘சரணம்‘னா பெருமையையெல்லாம் சொல்லிப் பாடறதுன்னும் சொல்லலாம்!

நீகூட ‘சாமியே சரணம் ஐயப்பா’ன்னு அடிக்கடி சொல்லிப் பாடுவியே, அதும்மாரின்னு வைச்சுக்க!

வாள்[ழ்]க்கையே வெறுத்துப்போயி, கோபுரத்தும் மேல ஏறி நின்னுக்கினு, அங்கேர்ந்து குதிச்சுச் சாவலாம்னு வுளுந்தவரை, தன்னோட ரெண்டு கையுலியுமாத் தாங்கிக்கினு, இனிமே நீ என்னியப் பத்தி மட்டும் பாடு’ன்னு சொல்லிட்டு, ‘நான் இன்னான்னு பாடுவேன்?ன்னு முளிச்சவருக்கு, ‘முத்தைத்தரு’ன்னு ஒரு அடியும் சரணமா எடுத்துக் குடுத்தாரு நம்ம குமரன்!

அதுக்காப்பல, இவரு வரிசையா பாடிக்கினே முருகன் மேல ஒரு பாமாலையே சூடிட்டாரு!

இப்பிடி ஒரு கருணையை எனக்குப் பண்ணினியே முருகா! இந்தக் கருணையை நான் இன்னான்னு சொல்றது’ன்னு கதற்ரமாரியும் எடுத்துக்கலாம்!

இதுல வர்ற இந்த அடுத்த ரெண்டு வரி க்கீதே, அது சொல்ற பெருமை இன்னான்னு இப்பப் பாக்கலாமா?

‘வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்காடும் புனமும் கமழும் கழலே!’

தன்னோட தலையுல சூடிக்கறதுக்காவ, இந்த முருகன் குடுத்த அந்தக் காலடிங்களைப் பத்தி, அத்தோட பெருமையைப் பத்தி இதுல சொல்ல வராரு அருணகிரியாரு!

‘கமளு[ழு]ம் கள[ழ]லே’ன்னா மணக்கற, வாசனையா க்கீற காலடிங்களே’ன்னு அர்த்தம்!

அது இன்னா மணம்…. அப்பிடியாப்பட்ட வாசனை?

‘வீடு’ன்னு மொத வார்த்தை!
‘மோட்சம், முக்தின்னு அர்த்தம்!
தன்னை வேண்டற அடியாருங்களுக்குல்லாம் முருகனோட ரெண்டு திருவடிங்களும், மோட்சத்தக் குடுக்குது!

அடுத்தாப்பல, ‘சுரர் மாமுடி’!
சூரனால அடிமையாக் கெடந்து கஸ்டப்பட்ட தேவருங்களைல்லாம், விடுதலை பண்ணின முருகனோட காலடியுல, இவங்கள்லாம் போயி, சரணாகதி பண்றாங்க! அவங்க தலை மேலெல்லாம் இவரோட பாதம் படுது! அதுனால, அதுங்களும் மணக்குதாம்!

இப்ப ‘வேதமும்’னு சொல்றாரு!
இந்த விசயத்த இந்த அநுபூதிப் பாட்டுங்கள்ல பல தபா சொல்லிருக்காரு அருணையாரு.

பிரம்மா – சிவன் கதைதான்!

நாலு வேதம் க்கீது! ரிக்கு, யஜுரு, சாமம், அதர்வணம்னு.
அந்த நாலுத்துக்குமே ஆதாரம் ‘ஓம்’முன்ற சொல்லுதான்!
அதுக்கே அர்த்தம் சொன்னவரு முருகன்!

அவரால இப்ப இந்த நாலுத்துக்குமே ஒரு பெருமை வந்திரிச்சாம்!
இந்த நாலு வேதத்துக்குமே ஆதாரமா நிக்கறவருதான் சாமிநாதன்!

நிக்கறாருன்னா, அப்ப அதுங்க மேலெல்லாம் படறது?.... இந்தத் திருவடிங்கதானே!
அதுங்களுக்கும் ஒரு ‘ஸ்பெசல்’ வாசனை வந்துருச்சு!

இப்பக் கடைசியா மிச்சமிருக்கறது, ‘வெங்காடும், புனமும்’!

சூரனை கெலிச்சதுக்காவ, இந்திரன் தானா வந்து, தேவானையம்மாவை, கிரியா சக்தியை,…. இவருக்குக் கண்ணாலம் கட்டி வைச்சாரு.

ஆனாக்காண்டிக்கு, வள்ளியம்மா கதை அப்பிடி இல்ல!

இவராத் தேடிப்போயி, காடு, மேடெல்லாம் சுத்தியலைஞ்சு, படாத பாடெல்லாம் பட்டு, கொதிக்கற வெய்யில்ல காட்டுல க்கீற கல்லு, முள்ளு மேலெல்லாம் தன்னோட காலடி நோவ, நடந்தாருன்னு நீ கூட முன்னாடி பாடியிருக்கியே, அதான், இந்த வெங்காடு!

அந்தம்மா காவல் காத்துக்கினு நின்னாங்களே, அந்தத் தெனைப்புனத்துக்கும் போயி, அந்தம்மா குடுத்த ஏச்சுப் பேச்சையெல்லாம் மறுபேச்சுப் பேசாம வாங்கிக்கினாரே, அந்தக் கதையைத்தான், இந்தப் ‘புனம்’ன்ற வார்த்தையுல சொல்லிக்காட்டறாரு!

இச்சாசக்திக்காவ, இவரோட பாதங்கள்லாம் பட்டு, அந்த வெங்காடும், புனமும் இப்பவும் மணக்குதாம்!

இப்பிடியாப்பட்ட பெருமையான முருகனோட சரணங்க ரெண்டும் இவரோட தலையுலியும் பட்டதும், இப்ப அருணகிரியாரோட திருப்புகளு[ழு]ம் மணக்குதுன்றத, இந்த வரியுல சொல்லிப் புரிய வைக்கறாரு.’எனச் சொல்லி முடித்தான் மயிலை மன்னார்.

‘சொல்லுமதோ’ன்னு இவர் சொன்னது ரொம்பவே விசேஷமான பிரயோகம்டா!! “கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்”னு சொல்லுவாளே! அதுமாதிரி, அந்த ஆனந்த அனுபவத்தை, இப்போ என்னால விளக்கமாச் சொல்லமுடியலியே’ன்னு திகைச்சுப்போய் நிக்கறார் இந்த ஒரு வார்த்தைல!

அப்பறம், ‘கமழும் கழலே’ன்றதைக்கூட, ‘கழலே கமழும்’ன்னும் அர்த்தம் பண்ணிக்கலாம்னு தோண்றது’என்றார் சாம்பு சாஸ்திரிகள்!

‘அதான் சொன்னேனே சாமி! இந்தப் பாட்டுக்குப் பலவிதமா அர்த்தம் சொல்லலாம்னு’ எனச் சொல்லி விகல்பமின்றிச் சிரித்தான் மன்னார்.

‘ஆமாண்டா! வேற எந்தச் சிந்தனையும் இல்லாம, நம்ம நாயர் சொல்லிண்டிருக்கானே, அதுமாதிரி, ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை மட்டும் விடாம சொல்லிண்டிருதாலே போறுண்டா! அவனோட அருள் தானா வந்துசேரும்’ எனக் கை கூப்பினார் சாஸ்திரிகள்!

ஓம் சரவணபவ!
**************
[தொடரும்]
தொடர்ந்து படித்து ஆதரிக்கும் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, February 13, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 47” [43]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 47”


43.

தூசா மணியுந் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகளந் துகளா யினபின்
பேசா அநுபூ திபிறந் ததுவே.

தூசு ஆம் மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசாநிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.

‘முன்னாடியே சொன்னேன்ல? இந்த அநுபூதிப் பாட்டுங்கள்லாம் ஒரு கொத்து கொத்தாப் பாடியிருக்கருன்னு! இதுக்கு முந்திவந்த ரெண்டு பாட்டோட இத்தயும் சேத்துப் படிச்சீன்னா, ஒரு ஒத்துமை ஒனக்குப் புரியும்!
அநுபூதின்னா இன்னா? அது எப்பிடி இருக்கும்? அது வந்துச்சின்னா இன்னான்னால்லாம் செய்யும்னு சொல்லிட்டு, இந்தப் பாட்டுல, அருணகிரியாரு, இந்த அநுபூதி எப்பிடி, எதுனால வந்திச்சுன்னு வெளக்கமாச் சொல்றாரு!

இந்தப் பாட்டைப் பார்த்தியானா, ஒரே வரியை ஒடைச்சுப் போட்டு, நாலு வரியுல ஒரு பெரிய உண்மையைச் சொல்றாருன்னு புரியும்! , அதாங்காட்டிக்கு,,

‘தூசாமணியும் துகிலும் புனைவாள் நேசா! முருகா! நினது அன்பருளால் ஆசாநிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே.’

இதுவரைக்கும், முருகனோட அருள் கிடைக்கணும்னா, நாம எத்தெல்லாம் பண்ணணும்? எத்தெல்லாம் வுடணும்? என்னெல்லாம் செய்யணும்னு வெலாவாரியா சொல்லிக்கினே வந்த அருணகிரியாரு, இனி வரப்போற கடைசி பாட்டுங்கள்ல, நேரா விசயத்துக்கு வராரு!

நிகளம்’னா வெலங்கு! நம்மையெல்லாம் பிடிச்சிருக்கற வெலங்கு! வெ[வி]லங்குன்னா ரெண்டு அர்த்தம்!

ஒண்ணு போலீஸ்காரன் மாட்டற வெலங்கு!
இன்னோண்ணு, மிருகம்!

இந்த ஆசைன்றது க்கீதே, அது இந்த ரெண்டு மாதிரியும் காரியம் பண்ணும்!

நம்மள பூட்டியும் வைக்கும்! மிருகமாவும் ஆக்கிறும்!

இந்த வெலங்கு ஒடைபடணும்! ஒடையணும்!
இது ஒடைஞ்சாத்தான், அநுபூதி பொறக்கும்!

இத்த ரொம்பத் தெளிவாச் சொல்லிடுறாரு இதுல!

‘ஆசாநிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே.’ன்னு!

சூட்சுமமா இதுக்குள்ள, ஒரு சங்கிதியும் சொல்றாரு!

அநுபூதின்னா அது ஒரு பேசா நிலைன்னு!

அதாவுது, இது வந்திருச்சின்னா, பேச்சு நின்னிறும்!
அதுக்கப்பால, வேற பேச்சே வராது!
அதான், ‘பேசா அநுபூதி!!’.... ஒரு மாதிரியான மோன நிலை!

இத்து இன்னா தானா வந்திருமா?
நீயும், நானும் நெனைச்சவொடனே அப்பிடியே பொறந்திருமா இன்னா?

அதுக்கும் ஒரு அருள் வேணும்!

அதுவும் சாதாரணமான அருளுல்லாம் போறாது!
அன்போட கூடின அருளு வேணும்!

அத்தயும் குடுக்கறவந்தான் குடுக்க முடியும்!

அதான், அவந்தான் முருகன்!

நினது அன்பருளாலத்தான் இந்த வெலங்கை ஒடைக்கணும் முருகான்னு அவர்கிட்டயே வேண்டறாரு அருணையாரு!

இரு, இரு! இப்ப நீ இன்னா கேக்க வரேன்னு புரியுது!
இதுக்கும், மொதவரிக்கும் இன்னா சம்மந்தம்னுதானே கேக்க வரே!?? சொல்றேன்! அவசரப்படாதே!’ எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

ரொம்ப ரொம்ப அருமையா இந்த வார்த்தைங்களப் போட்டிருக்காரு அந்த பெரிய மனுசன்!

இதுவரைக்கும் வந்த பாட்டுங்கள்ல அடிக்கடி சொன்ன ஒரு விசயத்துக்கான காரணத்த, இந்தப் பாட்டுல நாயப் [நியாயப்] படுத்தறாரு அருணகிரியாரு!

இச்சா சக்தியான வள்ளியம்மா காலுல சதா சர்வ காலமும் வுளுந்து கெடக்கற முருகான்னு எப்பப் பாத்தாலும் சொல்லிக்கினே வருவாரு இவுரு!

அப்பிடி இன்னா 'ஸ்பெசலு' இந்த வள்ளியம்மான்னு ஒனக்கு ஒரு ‘டவுட்டு’ வரும்! …. வரணும்! அதான் நாயம்!

இந்தப் பாட்டோட மொத வரியுலியே அதுக்குல்லாம் ஒரு ‘ஆன்ஸர்’ குடுத்திடறாரு!

‘தூசா மணியும், தூசா துகிலும் புனைவாள் நேசா! முருகா!’ன்னு!

அந்தம்மா போட்டுக்கினு க்கீற முத்து மாலையும் சரி, உடுத்திக்கினு க்கீற சேலையும் சரி, துளிக்கூட அளு[ழு]க்கே இல்லாத, வெள்ளை வெளேர்னு மின்னுதாம்!

அப்பிடியாப்பட்ட வள்ளியம்மாவோட நேசா! என்னோட முருகா’ன்னு மொத வரியுல கொஞ்சறாரு அருணகிரியாரு!

இன்னாத்துக்காவ இத்தச் சொன்னார்ன்னு கொஞ்சம் யோசிக்கணும்!

எனக்குள்ளாற ஆசை இருக்கு முருகா! அத்த,… அந்த வெலங்கை நீதான் அறுக்கணும்னு சும்மானாச்சிக்கும் வேண்டினா மட்டும் போறாது!

அந்த வள்ளியம்மா......., கொறக் குலத்துல பொறந்தாக்கூட,... கொஞ்சங்கூட அளு[ழு]க்கே இல்லாம இருக்கறதாலத்தான், அந்தம்மா காலடியுல நம்ம கந்தன் வுளுந்து கெடக்கறாரு!

அதும்மாரி, நமக்குள்ள எத்தினி ஆசைங்க இருந்தாக்கூட, அதெல்லாம் சுத்தமானதா இருக்கணும்! அப்பத்தான், முருகனும் அத்த ஏத்துக்கினு, ஒனக்கு அருள் பண்ணுவான்றத பூடகமா இந்த வரியுல சொல்லி க்கீறாரு அருணையாரு! இன்னாங்க சாமி நான் சொல்றது?’ என சாம்பு சாஸ்திரிகளைப் பார்த்தான் மயிலை மன்னார்!

‘இதுக்கப்பறம் நான் சொல்றதுக்கு என்னடா இருக்கு? இருந்தாக்கூட, சொல்லணும்னு தோண்றது!

‘பொறந்தது’ன்னு சொன்னாரே! அதுலியே, இது தனக்குத்தான் பொறந்ததுன்னு நிஸ்சயமாச் சொல்லிக் காண்பிச்சுட்டார்னு எனக்குப் படறது!

‘காலவழுவமைதி’ன்னு இலக்கணத்துல ஒண்ணு இருக்கு!

‘பிறந்தது’ன்னா இறந்தகாலம்!

ஆனாக்க, இதுல அப்பிடி இல்லாம, இந்தப் ‘பிறந்தது’ன்றது, முக்காலத்துக்கும்,...... இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்னு....... மூணுத்துக்குமே பொருந்தி வரும்!

வந்துது, வந்திருக்கு, வரும்னு எல்லாத்தையுமே சொல்ற அற்புதமான வார்த்தையை அருணகிரிநாதர் ரொம்ப அழகாப் போட்டுருக்கார்! இது 'வழா அமைதி'!!

இன்னொரு ‘சித்தியார்’ பாடல்தான் இப்ப ஞாபகத்துக்கு வருது!

‘விச்சையி னிராகந்தோன்றி வினைவழி போகத்தின்கண்
இச்சையைப் பண்ணிநிற்குந் தொழிலறி விச்சை மூன்றும்
வைச்சபோ திச்சாஞானக் கிரியைமுன் மருவியான்மா
நிச்சயம் புருடனாகிப் பொதுமையி னிற்பனன்றே.'

இந்த லோக வாழ்வுல நாம எப்பிடி மாட்டிக்கறோம்ன்றதை இந்தப் பாட்டுல சித்தியார் ‘சுபக்கம்’ 56ல ரொம்ப நன்னா சொல்லியிருக்கார்!

‘வித்தை'’ன்னு ஒண்ணு இருக்கு. அதுல ‘அராகம்’ன்ற அவா தோணி, இந்த லோக வாழ்க்கையுல நமக்குல்லாம் ஒரு ஆசையை உண்டு பண்ணும்!

இச்சை, அறிவு, செயல்னு வந்து ஆன்மாவுல பதிக்குமாம்!

இந்தக் ‘காலம், நியதி, கலை, அராகம், வித்தை’ன்ற அஞ்சும் ஆன்மாவோட சேர்றப்ப, அதைப் ‘புருடன்’ன்னு சொல்லுவா!

இந்த ‘புருடன்’றவந்தான் இத்தனை இம்சையும் இங்கே பண்றவன்!

இவந்தான் நமக்கெல்லாம், இந்த பொண்டாட்டி, புருஷன், புள்ளை, பொண்ணு, பேத்தி, பேரன்னு ஒரு விலங்கைப் பூட்டி, நம்மளையெல்லாம் இந்த பந்தத்துல மாட்டி வைச்சு ஆனந்தப் படறான்!

இந்த விலங்கை அவனோட.... அந்தக் கந்தக் கடவுளோட... அன்பும், அருளும் மட்டுமே உடைக்கமுடியும்ன்றதை, ரொம்பவே அருமையா இந்தப் பாட்டுல அருணகிரிநாதர் சொல்லி அருளியிருக்கார்! அதுக்கு நாமளல்லாம் தயாராகறணும்னா, இந்தத் தூய்மைன்ற ஒண்ணு நம்மகிட்டே இருக்கணும்! இதைத்தான் இந்தப் பாட்டுல சொல்லிக் காமிக்கறார்! என்னோட பரிபூர்ணமான நமஸ்காரத்தை அந்த மஹானுபாவனுக்கு சொல்லிக்கறதைத் தவிர வேற என்ன நான் பண்ண முடியும்’ எனக் கண் கலங்கினார் சாம்பு சாஸ்திரிகள்!

‘ஓம் சரவணபவ’ எனச் சொல்லமுடியுமே! என்பது போல நாயரின் உச்சாடனம் தொடர்ந்தது!
*****************
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Thursday, February 09, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 46”

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 46”




42. [இரண்டாம் பகுதி] [அருள்கூர்ந்து முதல் பகுதியைப் படித்தபின்னர் இதனைப் படிக்கவும். வணக்கம்.]


குறியைக் குறியா துகுறித் தறியும்
நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையுமற் றதுவே.


குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்
செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே.

"செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவற்று அறியாமையும் அற்றதுவே."

மொதல் ரெண்டு வரிக்கும், அடுத்த ரெண்டு வரிக்கும் ஒரு சம்பந்தத்தை வைச்சே பாடினவரு இதுலியும் அத்தயேதான் பண்ணியிருக்காரு..... இன்னா ... கொஞ்சம் மாறுதலா! அவ்ளோதான்!

இதுவரைக்கும் சொன்னது அல்லாத்தியுமே நெனைச்சுப் பார்த்தியானா, அப்பப்ப நடுவுல நடுவுல இதுக்கான 'குறி'யைக் கொடுத்துக்கினே வந்திருக்காருன்றது புரியும்! அது இன்னான்னு சொல்றேன் கேளு!

'செறிவு'ன்னா இன்னா?
அது 'அத்து'ப்போறதுன்னா இன்னா?

'செறிவு'ன்னா கலப்பு.

இது ரொம்பவே பெரிய விசயம்.
சைவ சித்தாந்தத்துல இதுக்கு ஒரு பெரிய வெளக்கமே க்கீது!

இந்த உடம்புல உசிரு வந்து கலந்தவொடனியே, மனசுன்னு ஒண்ணு வந்திருது.

அதுனால வர்றது வாக்கு!

ஒடம்புன்னா காயம்!

இந்த மனசு, வாக்கு, காயம் இதெல்லாமே ஒரு மாயையால உசிரை... ஆத்மாவை.... வந்து பிடிச்சுக்குது!

இத்தப் பாரு, கேளு, ரசின்னு மனசு சொல்லுது.
அதுக்கு வாக்கு கொஞ்சம் தூபம் போடுது.
இத்தக் கேட்டு இந்த ஒடம்பு..காயம்.. கண்டபடிக்கும் ஆடுது!
இத்தயெல்லாம் மாயைன்ற ஒண்ணுதான் ஆட்டிவைச்சு நம்மளை அல்லாட வைக்குது.
இந்த மூணோட கலப்புனாலத்தான் நாம இத்தனை ஆட்டம் போடறோம்.

இதான் செறிவுன்றது!

இப்பிடி, மனசு, வாக்கு, காயம்,ன்னு நமக்கு, ... இந்த ஒடம்புக்கு.... இருக்கற கலப்பைப் புரிஞ்சுக்கினு, அதெல்லாமே இல்லாமப் போறதுதான்,
'செறிவத்து'ன்னு அருணகிரியாரு சொல்றாரு.

அத்தினிக் கலப்பும் அத்துப் போயிருச்சாம்!... முருகனைப் பாத்ததுமே!

அடுத்தாப்பல வர்றது, 'உலகோடு உரை சிந்தையும் அற்று'.

இந்த ஒடம்போட இருக்கற சிந்தனை இல்லாமப் போச்சுன்னா, நீ ஆரு, நான் ஆருன்றதே இல்லாமப் போயிறும். ஒடம்பைப் பத்தின சிந்தனை இல்லைன்னா, இந்த ஒலகத்தப் பத்தின சிந்தனையுந்தானே இல்லாமப் போயிறும்?


நான் இருக்கேன்றது தெரியுது.

ஆனாக்காண்டிக்கு, நான் எங்கே இருக்கேன்ற நெனைப்பே இல்லாமப் போயிருச்சாம் அருணகிரியாருக்கு, இந்த முருகனோட காலைப் பிடிச்சு, அவருகிட்டேர்ந்து அந்த அநுபூதி கெடைச்சதும்!


அதத்தான் இந்த 'உலகோடு உரை சிந்தையும் அற்று'ன்றதுல சொல்லிக் காட்றாரு.

சரி, இதெல்லாம் இந்த உடலுக்குன்னு வந்தது.

உடலு மட்டும் இன்னா பண்ண முடியும்?
அதுக்குள்ள உசிருன்னு ஒண்ணு வந்ததாலத்தானே இத்தினியும் நடக்குது!

அந்த உசிருக்குன்னு ஒரு ரெண்டு கொணம் க்கீது!

அறிவு, அறியாமைன்னு!
அதத்தான் அடுத்த வார்த்தை சொல்லுது!

"அறிவற்று அறியாமையும் அற்றதுவே"

இதான் இதுன்னு தெரிய வைக்கறது அறிவு.
இதான் இதுன்னு தெரிய வைக்காம நம்மளை மயங்க வைக்கறது அறியாமை!

ஒரு ஒதாரணம் சொல்றேன் கேளு!

சாமிதான்... ஒன்னோட முருகந்தான்... சத்தியமான பொருளுன்னு ஒனக்குத் தெரியும்.
இது அறிவு!
அதே சமயத்துல கண்டதையும் பார்த்து மயங்கிப்போயி, அவங்க சொல்ற ஆசை வார்த்தையுல மயங்கி, அவங்க பின்னாடி சுத்தி, அவங்க காரியம் ஆனவொடனே ஒன்னியக் கள[ழ]ட்டி வுட்டுட்டு, நீ, 'நாம இன்னா பண்ணினோம்னு இப்பிடி ஆயிருச்சு'ன்னு மயங்கறது ஒன்னோட அறியாமை.

சரி, போ, நாம செய்ய வேண்டியத, செய்யவேண்டிய நேரத்துல செய்யவேண்டியவங்களுக்கு சரியா செஞ்சோம்னு நெனைச்சு, நீ மேல நடந்தியானா அது அறிவு!
அதில்லாம, ஏன் இப்பிடி எனக்கு ஆச்சுன்னு அவங்க பின்னாடியே போயி அலைஞ்சியானா அது அறியாமை!
சரியா?

இந்த அநுபூதி நெலை வந்ததுமே, அருணகிரியாருக்கு இந்த ரெண்டுமே இல்லாமப் போயிருச்சாம்! முருகன் ஒர்த்தனே கதின்னு அவனைக் கெட்டியாப் பிடிச்சுக்கினாரு. அதுனால அநுபூதி கெடைச்சதும், இந்த அறிவு, அறியாமை ரெண்டுமே தொலைஞ்சிருச்சு அவருக்கு!

ஒண்ணைப் புரிஞ்சுக்கணும் நீ தெளிவா!
அவரு பண்ணின புண்யத்துனால, இன்னான்னமோ தப்பு பண்ணியிருந்தாலும், அருணகிரியாரைத் தாங்கிப் பிடிச்சான் முருகன்!
அப்போ அநுபூதி கொடுக்கலை அந்த முருகன்!

'முத்தைத்தரு'ன்னு ஒரு வார்த்தையைக் குடுத்து, 'இத்த வைச்சுக்கினு என்னியப் பத்திப் பாடு'ன்னு சொல்லிட்டுப் பூட்டான் அவன்!

அதுக்கப்புறமா, இவரு ஊரூராத் திரிஞ்சு, அல்லாக் கோவிலுக்கும் போயி, முருகன்மேல ஆயிரமாயிரமாப் பாட்டுப் பாடி, அதுக்கப்பறந்தான் இவருக்கே அநுபூதி கெடைச்சதுன்னு கதை சொல்லுது!

இதுலேர்ந்து இன்னா தெரியுது?

ஒரு குரு வந்து ஒங்கிட்ட ஒண்ணைச் சொன்னாருன்னா அத்தக் 'கப்'புன்னு புடிச்சுக்கினு அப்பிடியே பண்ண ஆரம்பிக்கணும்!

அப்பிடிப் பண்ணினியான்னா, ஒனக்கு மேலே மேலே நல்லதே நடக்கும்!
அதுக்கு நடுவுல நீ இன்னான்னமோ தப்புத்தண்டால்லாம் கூடப் பண்ணுவே!

ஆனா, அதையே நெனைச்சு மருகாம, அதுவா ஒன்னிய வுட்டு வெலகறப்ப, நீ அதும்பின்னாடியே போயி அலையாம, சரி, இது இத்தோட வுட்டுதுன்ற மனசாந்தியோட, ஒன்னோட வளி[ழி]யுலியே....ஒனக்குன்னு வந்து சொன்ன குரு காட்டின நெறியுலியே நடந்தியானா,... ஒனக்கும் ஒரு நல்லத்த அந்த முருகனே வந்து நடத்திக் குடுப்பான்றதத்தான் இதுல சொல்லாம சொல்லிக் காட்டியிருக்காரு அருணகிரியாரு.

அப்பிடி வர்ற அந்த அநுபூதி நெலை எப்பிடி இருக்குன்றதியும் சொல்லிட்டாரு.

இதுக்கும்மேல புரிஞ்சுக்கறதும், அதும்படிக்கா நடக்கறதும் அவங்கவங்க விதிப்படி நடக்கும். அவ்ளோதான் நான் சொல்லுவேன்' எனச் சொல்லி முடித்தான் மயிலை மன்னார்.

கண்களை மூடியபடியே அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த சாம்பு சாஸ்திரிகள்,

'இதே மாதிரி ஒரு 'சித்தியார்' பாட்டை எப்பவோ படிச்சிருக்கேன். இப்பவும் நெனைப்புல இருக்கு. அதைச் சொல்றேன் கேளு' எனப் பாடினார்.

'அறியாமை அறிவு அகற்றி அறிவினுள்ளே
அறிவுதனை அருளினால் அறியாதே அறிந்து

குறியாதே குறித்து அந்தக் கரணங்களோடும்
கூடாதே வாடாதே குழைந்து இருப்பையாகில்

பிரியாத சிவன் தானே பிரிந்து தோன்றிப்
பிரபஞ்ச பேதமெல்லாம் தானாய்த் தோன்றி

நெறியாலே இவையெல்லாம் அல்லன் ஆகி
நின்று என்றும் தோன்றிடுவன் நிராதரனாயே'

'அப்பிடியே சொல்லிட்டீங்களே சாமி! இங்க சிவன், அங்கே அருணையாருக்கு முருகன்! இன்னோர்த்தருக்கு பெருமாளு!
சாமிங்கள்ல பேதமில்லை! எத்தப் பத்திக்கிறியோ, அதுவே ஒனக்கு ஒரு வளி[ழி] காட்டும்! அதான் முக்கியம்' என்றான் மயிலை மன்னார்!

நாயர் தீவிரமாக தனது 'ஓம் சரவணபவ' மந்திர உச்சாடனத்தைத் தொடர ஆரம்பித்தான்!

குறியைக் குறியாது குறித்து அறியும்


நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்


செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவற்று அறியாமையும் அற்றதுவே. [42]


********
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, February 06, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 45”

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 45”


42. [முதல் பகுதி]


சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையில் மீண்டும் சபை நிறைந்திருந்தது.
மயிலை மன்னார் பேசத் தொடங்கினான்.

'போன பாட்டுல அநுபூதின்ற ஒண்ணு வந்துச்சுன்னா இன்னா நெலைக்கு போவோம்ன்றதைக் கோடி காமிச்சவரு இந்தப் பாட்டுல, அத்தயே இன்னும் வெலாவாரியா சொல்ல வராரு.

கந்தனோட காலைக் கெட்டியாப் பிடிச்சுக்கினா, அநுபூதி நெலை தானா வந்திரும்னு சொன்னவரு, அந்த நெலையுல இன்னான்னால்லாம் நடக்கும்ன்றத வெளக்கமாச் சொல்றாரு. பாட்டைப் படி' என்றான்.

குறியைக் குறியா துகுறித் தறியும்
நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையுமற் றதுவே.


குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்
செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே.

'ரொம்பவுமே கஸ்டமான பாட்டு இது! ஒர்த்தொர்த்தருக்கு ஒவ்வொருமாரி புரியும். அதும்படிக்கா அவங்க வெளக்கம் சொல்லுவாங்க. அவங்கவங்க நெலைக்கு தக்கமாரி அது இருக்கும். அல்லாமே சரிதான். அதுனால, அதுவா, இதுவான்ற ஆராய்ச்சியை வுட்டுட்டு, இப்ப சொல்றதக் கவனி. கொஞ்சம் புரியறமாரி,.... எனக்குப் புரிஞ்சமாரின்னும் வைச்சுக்கோயேன்....சொல்லப் பாக்கறேன் சரியா கெவனமாக் கேளு.

'குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்'

இதான் மொத ரெண்டு வரி.
அதென்னாது ''குறியைக் குறியாது குறித்து அறியும் நெறி'?


மொதல்ல 'குறி'ன்னா இன்னா?
அத்த எப்பிடி குறியாத குறிக்கறது?
எப்பிடி அத்த அறியறது?
இதெல்லாம் புரிஞ்சாத்தான் அந்த 'நெறி'ன்னா இன்னன்னு புரியும்.
ஒண்ணொண்ணாப் பாப்பம்!


இப்ப முருகன் மேல பக்தி பண்ணணும்னு ஒனக்கு ஆசை வந்திருக்குன்னு வைச்சுக்க!
அதுக்கு மொத வேலையா இன்னா பண்ணுவே?
முருகன்னா ஆரு? அவரு எப்பிடி இருப்பாரு? அவரோட வடிவை எப்பிடிக் காட்டிச் சொல்லிக்கீறங்கன்னு மனசு தேடும்.


அப்பிடி ஒரு உருவத்த, அள[ழ]கா, செவப்பா, ஒரு சின்னப் பையனா, கையுல வேலோட, காலுல சலங்கையோட, நல்லா பளபளன்னு ஒரு வேட்டி கட்டிக்கினு, தலையுல கிரீடம் வைச்சுக்கினு, மயிலு ஒண்ணு பக்கத்துல 'ரெடி'யா எப்பவும் நிக்கறமாரி ஒரு காட்சியை மனசுல பதிச்சுக்கினு, இவரையே 'குறி'யா வைச்சுக்கினு நீ, பாட்டு படிக்கறது, அவரைப் பத்தி நெனைக்கறது, பூஜை பண்றதுன்னு ஆரம்பிப்பே!


அது இல்லேன்னா, ஆண்டியாவோ, இல்லைன்னா வள்ளி தெய்வானையோடவோக் கூட இருக்கறமாரி, ஏதோ ஒண்ணைப் பிடிச்சுக்குவே. சரியா?
இப்பிடி மொதமொதலா ஒரு உருவத்த குறியா வைச்சு தொடங்கறதுக்குத்தான் 'குறி'ன்னு பேரு.


அடுத்தாப்புல, 'குறியைக் குறியாது குறித்து'ன்னா இன்னான்னு பாப்பம்.


இந்த 'குறி'...அடையாளம்... ஒரு உருவம்... இப்ப கிடைச்சிருச்சு. அது ஒரு படமாவோ, சிலையாவோ, வீட்டுலியோ, இல்லாட்டி கோவில்லியோ ஒனக்குத் தெரியும். அது ஃப்ரேம் போட்டு மாட்டியோ, இல்லாட்டி ஒரு பீடத்துல நிக்கவைச்சோ இருக்கலாம். மண்ணாலியோ, இல்லாட்டிக் கல்லாலியோ, இல்லேன்னா எதுனாச்சும் உலோகத்தாலியோ செஞ்சிருக்கலாம்.

ஆனாங்காட்டிக்கு, ஒனக்கு அத்த எப்பிடிப் பார்த்தாலும், அது இன்னான்னு புரியும்? ஒன்னோட முருகனே அங்க நேரா ஒம்முன்னாடி நிக்கறமாரித்தானே இருக்கும்? சாமியாப் பாக்கறச்சே, ஒனக்கு இந்த கல்லு, மண்ணு, பொம்மை, சிலைன்ற நெனைப்பே வராது! இதுவரைக்கும் புரிஞ்சுதா?


இதான் இந்தக் குறியை அது இன்னான்னு குறிக்காம, ஆனாக்காண்டிக்கு அதே நேரத்துல நீ நெனைச்ச சாமியைக் கும்பிடற ஞானம்! குறியைக் குறியாது குறித்து! வெளங்கிச்சா.?


இப்ப ஒரு சின்னச் சமாச்சாரம் சொல்றேன். உன்னிப்பாக் கேளு!


இதேமாரி ஒலகத்துல க்கீற ஏதோ ஒரு பொருளைக் கூட நீ ஆசையா நெனைக்க முடியும். எவ்ளோ வயசானாலும் பொண்டாட்டி எளமையா க்கீறமாரி நெனைச்சுக்கினு அலையலாம். இல்லேன்னா, ஒனக்கு சமமா வளந்தப்பறமுங் கூட,  புள்ளைங்களை நீ சின்ன வயசுல பாத்த அதே நெலையுல வைச்சுக்கினு, அவங்களைக் குடையலாம். இதேமாரி பலதும் சொல்லலாம். ஆன, இதெல்லாம் ஒனக்கு வேதனையைத்தான், கஸ்டத்தைத்தான் கொடுக்குமே தவிர, மனசுக்கு அமைதியைக் கொடுக்காது!


அத்தக் கொடுக்கற ஒரே ஆளு ஒன்னோட முருகந்தான்!


இத்தப் புரிஞ்சுக்கினு, அவன் ஒர்த்தந்தான் மெய்யி; மத்ததெல்லாம் பொய்யின்றதப் புரிஞ்சுக்கினியானா, அதான் ஞானம்!
மத்ததெல்லாம் அஞ்ஞானந்தான்!


'காயமே இது பொய்யடா! வெறும் காத்தடைச்ச பையடா'ன்னு ஒரு சித்தரு பாடினாரே, அத்தப் புரிஞ்சுக்கினு, அப்பப்ப மாறிப்போற, மாறிப்பேசற இந்த ஒலகத்து ஆளுங்க மேல க்கீற ஆசையை வுட்டுட்டு, அந்தப் பரம்பொருளு ஒண்ணுத்த மட்டுமே மெய்யா நம்பிப் புடிச்சுக்கறதுதான் 'குறியைக் குறியாது குறித்தறியும்' ஞானம்!


இது, இந்த ஞானம் வர்றதுன்றது, அப்பிடி ஒண்ணும் சுளுவில்லை! ரொம்பப் பாடுபடணும் இதுக்காவ! சரியான வளி[ழி]யைக் காமிக்கறதுக்குன்னு ஒரு குரு வந்து சொல்லுவாரு. எப்ப? நீ அதுக்குன்னே காத்துக் கெடக்கறப்ப!


எப்ப்டி காத்துக் கெடக்கறது?
அதுக்குன்னு ஒருசில முறை இருக்குன்னு பெரியவங்க சொல்லிக்கீறாங்க!


நீகூட சொல்லுவியே அடிக்கடி நீ கும்புடற அந்தப் பெரியவரு சொன்னாருன்னு, அதும்போல, தெனம் ஒரு பத்து நிமிசம் காலைலியும், ராத்திரியும் தியானம் பண்ணி, "அப்பனே முருகா! நான் பார்க்கலைன்னாலும், நீ இருக்கேன்றத நான் நிச்சியமா நம்பறேன். ஏன்னா நான் மதிக்கற, கும்புடற பெரியவங்க அப்பிடிச் சொல்லிக்கீறாங்க. அத்த நான் நம்பறதால நானும் ஒன்னிய நிச்சியமா நம்பறேன். நான் பண்ற அல்லாக் காரியத்துக்கும் நீதான் தொணையா இருந்து நடத்திக் கொடுக்கணும் கந்தப்பா'ன்னு வேண்டணும். இது மொத வளி[ழி]. ரொம்ப ரொம்ப சுளுவான வளி[ழி]யுங்கூட!


இத்தப் பண்ண ஆரம்பிச்சியானா, அடுத்தடுத்து ஒனக்கு நல்லதே நடக்கும்.


இதும்மாரிப் பண்றதத்தான் 'நெறி'ன்னு சொல்றாரு அருணகிரியாரு.


இதுக்கும் மேல இன்னான்றத ஒன்னோட குரு ஒனக்கு சொல்லித் தருவாரு. அது ஒர்த்தொர்த்தருக்கும் வெவ்வேறயா இருக்கும்ன்றதால அத்தப் பத்தி இப்பப் பேசவேணாம்.
ஆனா, அந்த மொதப் படியை மட்டும் நல்லாப் புரிஞ்சுக்கோ' என நிறுத்தினான்.

'அந்தப் பாட்டை இன்னொருதரம் சொல்லுடாப்பா' என சாஸ்திரிகள் கேட்க, மகிழ்வுடன் பாடிக் காட்டினேன்.


'இறையவன் உண்டு கண்டவர் சொன்னார்
மறைநூற் பொருளின் சாரம் இதுவே
நம்பிடும் நல்லவர் சொல்லிய சொல்லால்
நானும் நம்பினேன் நீவரு வாயென.

இன்றையப் பொழுதின் செயல்கள் யாவினும்
நின்னரு ளோங்கி நித்தமும் துலங்க
இறையவா நீயே என்னுடனிருக்கும்
ஒருவரம் கேட்பேன் உடனே யருள்வாய்!'


'திவ்யமா இருக்குடா!' எனச் சிலாகித்தார் சாஸ்திரிகள்.
மன்னார் மேலே தொடர்ந்தான்.

இந்த 'நெறி'யத்தான் எப்பிடி, ஆரு வந்து காமிச்சாருன்றத அடுத்த வார்த்தையாப் போட்டிருக்காரு....."தனி வேலை நிகழ்த்திடலும்'னு!


அதென்னா 'தனி வேலை'?
எதுனாச்சும் ஸ்பெசல் வேலையா?
அப்பிடி அர்த்தம் பண்ணிக்கக் கூடாது.


"தனி வேல் ஐ"ன்னு பிரிச்சுப் பார்க்கணும்.


தனி வேலுன்னா, இதுக்கு நிகரு எதுவுமே இல்லாத வேலுன்னு அர்த்தம்.
அத்தக் கையுல வைச்சிருக்கற சாமிதான் முருகன்!
'ஐ'ன்னா தெய்வம், சாமின்னு பொருளு.


இதும்மாரி ஒரு தனிவேலைக் கையுல வைச்சுக்கினு முருகனே வந்து இவருக்கு நடத்திக் காட்டினாராம் அந்த நெறியை!


இந்த வரியுலியே இன்னொண்ணும் சொல்லாமச் சொல்லிருக்காரு அருணையாரு.
வந்தவன் தனி ஆளாத்தான் வந்தான். கையுல வேலோட வந்தான்னு ஒரு சங்கதியும் சொல்றாரு!


ஆரோ ஒரு குரு வரலை! அந்தக் கந்தனே நேரா வந்து தானே குருவா நின்னு இவருக்கு ஒரு நெறியைக் காட்டினாருன்ற சமாச்சாரம் இதுலேர்ந்து வெளங்குதா?' என்றான் மயிலை மன்னார்.

புரிந்ததுபோலத் தலையாட்டினேன். நாயர் மௌனமாகவே இருந்தான். சாம்பு சாஸ்திரிகள் கன்னத்தில் போட்டுக் கொண்டார்!

இதும்மாரி ஆனதுனால இவருக்குள்ளாற இன்னான்னால்லாம் நடந்திச்சுன்றதத்தான், அடுத்த ரெண்டுவரி சொல்லுது' என நிறுத்தினான் மயிலை மன்னார்.

'ஓம் சரவணபவ!'
********
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Wednesday, February 01, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 44

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 44”


41.

அடுத்த பாட்டைக் கேட்பதற்காக் கூடியிருந்தோம். மன்னார் என்ன சொல்லப் போகிறான் என எல்லாருக்குள்ளும் ஒரு ஆவல்!


அந்த நேரத்தில் வேக வேகமாக ஒருவன் ஓடிவந்து நேரே மன்னாரின் கால்களில் விழுந்தான்!
அனைவரும் பதறிப் போனோம்.


இன்னாடா கேசவா? இன்னாச் சமாச்சாரம்? ' என அவனை அன்புடன் தூக்கி நிறுத்தினான்.

'அண்ணே, நீதாண்ணே என்னியக் காப்பாத்தணும்! நொச்சிக்குப்பம் ஆளுங்க ரவுண்டு கட்டி அடிக்க வர்றாங்கண்ணே! இத்தினிக்கும் நான் ஒண்ணுமே பண்ணலை! நம்ம ராசுப் பயலுக்கு 'எல்ப்' பண்ணப்போயி இப்பிடி ஒரு தாவு வந்திரிச்சுண்ணே!' என அழத் துவங்கினான் கேசவன்.

'சரி, சரி, அளு[ழு]வாத! அதான் எங்கையுல வந்து சொல்லிட்டல்ல! இன்னா ஏதுன்னு வெசாரிக்கறேன். நொச்சிக்குப்பம் பீட்டரு நம்மகிட்ட இருந்தவந்தான்1 ஒண்ணும் கவலைப்படாதே! பொட்டப் புள்ளமாரி அளறான் பாரு!' என்று அவனைத் தேற்றினான் மயிலை மன்னார்!

எங்களைப் பார்த்து, "இப்ப இந்தக் கேசவன் வந்தானே, அதேம்மாரித்தான் இப்ப சொல்லப்போற பாட்டும். அதுக்குன்றமாரியே இப்ப இங்கியும் ஒரு சீன் ஆயிப்போச்சு' எனச் சிரித்தபடியே என்னைப் பார்க்க, உடனே அடுத்த பாடலைப் படித்துக் காட்டினேன்!

சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னோபதே சிகனே

சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகம் செயும் நாள்
வாகா முருகா மயில்வாகனனே
யோகா சிவஞான உபதேசிகனே

இதுக்கு முன்னாடியே ஒரு ரெண்டு மூணு பாட்டுல இதே போலச் சொல்லியிருக்காரு அருணையாரு. இந்தப் பாட்டை எப்பிடிப் படிக்கணும்னா,

"நமனார் கலகம் செயும் நாள் சாகாது எனையே சரணங்களிலே கா கா!"

நமன்னா எமன்! அவரைக் கொஞ்சம் மரியாதையா, நமனார்னு சொல்றாரு!
மாமன், மாமனார் மாரின்னு வைச்சுக்கோயேன்.

இவரோட வேலை இன்னான்னு நமக்கல்லாம் நல்லாவே தெரியும்.

எப்ப நம்ம டைம் முடியப்போறதுன்னு இவரு ஒரு கணக்கு வைச்சுக்கினு, கரீட்டா போயி நின்னுடுவாரு காவு வாங்கறதுக்கு!

அதுவும் சும்மால்லாம் போவ மாட்டாரு.
பெரிய கடாமீசையைத் திருகிக்கினு, எருமைக்கெடா மேல குந்திக்கினு கையுல ஒரு கவுத்த வீசிக்கினே ஒரு தோரணையோடதான் வருவாரு இந்தாளு!

'ம்ம்..கெளம்பு, கெளம்பு நேரமாச்சு'ன்னு அதட்டுவாராம்!
அதைத்தான் கலகம் பண்றதுன்னு கொஞ்சம் பயத்தோடயே சொல்லிக் காட்றாரு.

முந்தி ஒரு பாட்டுல சொன்னேனே, பெரிய மந்திரி வந்தா, மத்த மந்திரிங்கள்லாம் எளு[ழு]ந்து நிப்பாங்கன்னு!

அதப்போல, இந்த எமனார் பண்ற கலாட்டாவை எப்பிடி நிறுத்தறதுன்னு கொஞ்சம் யோசிக்கறாரு. ஆருகிட்ட போனா, நாம தப்பிக்கலாம்னு நெனைச்சுப் பாக்கறாரு.

இருக்கறதுலியே ரொம்பப் பெரிய ஆளா இருக்கணும். அவருக்கு மேல பெரிய சாமியே கெடையாதுன்றமாரி இருக்கணும். அப்பிடியாப்பட்ட சாமிகிட்ட போயி, அவரோட காலைப் பிடிச்சுக் கதறினா, அவரு கருணை பண்ணுவாருன்னு ஒரு ஐடியா வருது!

ஒடனேயே, அது ஆருன்னும் புரிஞ்சிருது!

'முருகா! நீதான் கதி! ஒன்னோட பாதமே எனக்கு சரணாகதி! நீதான் காப்பாத்தணும்! ஒடனே வந்து நான் செத்துப் போவாம காப்பாத்துப்பா'ன்னு கதர்றாரு.

இந்த விசயம் கொஞ்சம் லேசா ஒதைக்கும்!

அதெப்பிடி சாவாம காப்பாத்த முடியும்னு ஒரு 'டவுட்டு' கெளம்பும்!

அதுலதான் இந்த அனுபூதி சமாச்சாரம் ஒளிஞ்சுக்கினு க்கீது!

சாதாரணமா ஒர்த்தர் செத்துப்போனாக்க, எமன் வந்து உசிரை எடுத்துக்கினுபோயி, அவரோட பாவ, புண்ணியக் கணக்கைப் பாத்து, எங்க போவணுமோ அங்க அனுப்பி வைச்சு, அந்தக் காலம் முடிஞ்சதும், சொர்க்கமோ, நரகமோ, அங்கேருந்து மறுபடியும் இன்னொரு பொறவி கொடுத்து கீளே[ழே] பூமிக்கு வந்திர்றதுதான் வள[ழ]க்கமா நடக்கற சமாச்சாரம்.

ஆனாக்காண்டிக்கு, முருகனோட காலுல போயி விளுந்துட்டா, அவரோட கருணை கெடைச்சிருச்சுன்னா,...அதுக்கப்புறமா, இந்த சாவுன்றதே கெடையாது! எப்பவும் அவர்கூடவே தன்னை வைச்சிக்கிருவாராம்!
அது தெரிஞ்சதாலத்தான், கா, கான்னு ரெண்டு தபா தன்னைக் காப்பாத்தச் சொல்லிக் கேக்கறாரு அருணகிரியாரு. அவ்ளோ அவசரம்!

சரி, சரி, புரியுது, இப்ப இன்னா கேக்கப்போறேன்னு!
இதுக்கும் அடுத்த ரெண்டு வரிக்கும் இன்னா சம்பந்தம்னுதானே ஆர்வமா காத்துக்கினு க்கீறே?

இருக்கறதுலியே பெரியா சாமியாப் பாத்துத் தேடினாருன்னு சொன்னேன்ல?
அதத்தான் இந்த ரெண்டு வரியுலியும் சொல்லிக் காட்றாரு!

"வாகா முருகா மயில்வாகனனே யோகா சிவஞான உபதேசிகனே!"ன்னு!

'வாகா'ன்னு மொத வார்த்தை!
இதுக்கு பலமாதிரியா அர்த்தம் சொல்லலாம்!

'சீக்கிரமா வாப்பா, வந்து காப்பாத்துப்பா'ன்னு ஒரு பொருளு.

வாகான்னா, அள[ழ]கான வாகனத்துல வர்றவனேன்னும் சொல்லலாம்.

வாகுன்னா அள[ழ]குன்னே ஒரு அர்த்தமும் க்கீது! அதும்படிக்காப் பாத்தா, ரொம்ப அளகானவனேன்னும் புரியும்.

அடுத்தாப்பல 'முருகா'!
இதுக்கு அர்த்தம் நான் சொல்லவே வேணாம்.
பேரை கேட்டதுமே ஒடம்புல்லாம் அப்பிடியே புல்லரிச்சிரும்! அப்பிடி ஒரு சொல்லு இந்த முருகான்றது!

எமன் வர்ற அந்த சங்கடமான நேரத்துல ஒடனே வர்ற சாமியாவும் இருக்கணுமே!
அதுக்குத்தான் அடுத்ததா, 'மயில் வாகனனே'ன்னு செல்லமாக் கூப்பிட்டு, முருகனுக்கே அத்த நெனைப்புல குடுக்கறாரு!

பெருச்சாளி, மாடு அது இதுன்னு மெதுவா வர்ற சாமிங்களை விட, இந்த மயில் மேல வர்ற சாமி கொஞ்சம் ஒசத்தியாப் படுது இவருக்கு!

பள[ழ]ம் வேணும்னு ஒலகத்தயே ஒரு செகண்ட்ல சுத்தி வந்த பறவை ஆச்சே!
அதுனால இத்தப் புடிச்சுக்கினாரு!

கெருடன் மேல வர்ற சாமிகூட, ஆனை வந்து 'ஆதிமூலமே'ன்னு கத்தினப்ப, அந்தக் கெருடனை விட்டுட்டு அவரே நேரா வந்தாருன்னு ஒரு கதை படிச்சிருக்காரு!
அதுனால, இந்த மயிலை செலெக்ட் பண்ணிட்டாரு!

'யோகா'! இந்த யோக சக்திங்கல்லாம் க்கீதே, இத்த நல்லாவே தெரிஞ்சு வைச்சுக்கினு, அல்லாருக்கும் குடுக்கற சாமியும் முருகந்தான்னு நெனைச்சு, யோகான்னு கூப்புடறாரு.

இப்பத்தான் கொஞ்சம் கொள[ழ]ப்பமாப் பூடுது அருணகிரியாருக்கு!
இவரே இத்தினி ஒசத்தின்னா, இவரோட நயினா, அதான் நம்ம கபாலி,... அவரு இவரை விடவும் பெரிய ஆளு இல்லியான்னு!

இவரு கையுல க்கீற அத்தினி சமாச்சாரமும் அவரு கையுலியும் க்கீது!
அப்ப ஆரைக் கூப்புடறதுன்னு யோசனை பண்றாரு!

ஏன்னா, எமனை கெலிக்கறதுக்கு வர்ற சாமி ரொம்பவே ஒசந்ததா இருக்கணும்ல!
அதான்!

அப்பத்தான், 'டக்'குன்னு நெத்திப் பொட்டுல பட்டமாரி ஒரு விசயம் நெனைப்புல வருது!

அட! அந்த பரமசிவனே இவருகிட்ட மண்டி போட்டு பாடம் கேட்டவராச்சே!
அப்போ, ஆரு ஒசத்தியா இருக்க முடியும்!

மெய்யாலுமே, நம்ம முருகன் தான்னு முடிவு பண்ணிட்டு, 'சிவஞான ஒ[உ]பதேசிகனே'ன்னு அடக்கவொடுக்கமா, பயபக்தியா, கையைக் கட்டிக்கினு கெஞ்சிக் கேக்கறாரு!

நீ மட்டும் வந்து ஒன்னோட ரெண்டு காலையும் காட்டி, எனக்கு கருணை பண்ணினேன்னா, நான் அதுக்கப்பால, சாவே இல்லாத ஒரு நெலைக்குப் போயிருவேனே! ஒடனே வந்து காப்பாத்துப்பான்னு இந்தப் பாட்டுல சொல்றாரு!

அனுபூதின்ற ஒண்ணு வந்திருச்சுன்னா, இன்னா நெலைக்கு நாம போவோம்ன்றத சொல்லாம சொல்லி ஒனக்கும், எனக்கும் புரிய வைக்கறாரு அருணகிரிநாதரு!' எனச் சொல்லிவிட்டு,

'சரி, நீ வா கேசவா! இன்னா சமாச்சாரம்னு விசாரிப்போம்' என அவனை அழைத்துக்கொண்டு அந்தப் பக்கமாக வந்த ஒரு ஆட்டோவில் ஏறிக் கிளம்பினான் மயிலை மன்னார்!

'ஓம் சரவணபவ!'
********
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP