Saturday, May 13, 2006

"நலம் வாழ நான் பாடுவேன்!"

"நலம் வாழ நான் பாடுவேன்!"


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொலவார்கள்!

அப்படித்தான் அரங்கேறியிருக்கிறது, தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றக் காட்சிகள்!

முதல் அர்ச்சனையே, மக்கள் தேர்ந்தெடுத்த மன்றப் பிரதிநிதிகளை 'விஷப்பாம்புகள்' என வர்ணித்த அவலம்!

அடுத்து நடந்தது, பதவியேற்பு நிகழ்ச்சிகளின் போது காவலரை அடித்து ஓட்டிய திமுக தொண்டர்களின் கண்ணியமற்ற செயல்!

திருவொற்றியூரில், பயந்தவாறே, எம் எல் ஏ/அமைச்சரின் தம்பியின் வெறிச்செயல்கள்!
[ஊர்மக்களில் பலர் வீட்டைப் பூட்டிவிட்டு ஓடி விட்டார்களாமே!]

மரபை மீறி, பதவியேற்பு நிகழ்ச்சியின் போதே அரசு ஆணைகளில் கையெழுத்திட்ட 'மலிவு விளம்பரம்'!

முன்னாள் முதலமைச்சர் ஒரு காரணமுமின்றி சட்டசபைக்கு வர மாட்டேன் என சொல்லியிருக்கும் கேவலம்!

மரபை மறுபடியும் மீறி, அதிமுக பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாத கோழை/பேடித்தனம்!

அருதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், சின்னஞ்சிறு பாண்டியில் தனி ஆட்சி செய்ய வேண்டி, பெரிய தமிழகத்தை விட்டுக் கொடுத்த காங்கிரஸின் பொறுப்பற்ற
குருட்டுதனம்!

இளங்கோவனின் வாக்கு பொய்க்க வேண்டுமென மட்டுமே தமிழகத்தைத் தாரை வார்த்த வாசனின் சுயநலம்!

மத்தியில் மட்டும் 12 மந்திரிகள் வேண்டும்; ஆனால் மாநிலத்தில் அதே நிலையில், "தான் மட்டுமே அரசு அமைக்க வேண்டும்" என்ற அரிப்பில் உள்ள 82 வயது தலைவரின் அராஜகத்திற்கு அடிபோகும் கழக அடிவருடிகள், கூட்டணிக் கேவலங்கள்[தலைவர்கள் எனச் சொல்ல மனம் வர மாட்டேன் என்கிறது!] இவர்களை நினைக்க மனம் குமுறுகிறது!


"மத்தியில் கூட்டாட்சி: மாநிலத்தில் நிபந்தனை அற்ற மற்ற கட்சிகளின் ஆதரவில் ஆட்சி" என்பதற்குத் துணை போன அனைவரையும் பார்த்துக் கேட்கிறேன்!...
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனத்தைப் போல,..........!

இதெல்லாம் நடக்குமெனச் சொல்லி மாற்றம் கொடுங்கள் எனக் கேட்ட தமிழனுக்கு வாய்ப்பளிக்காத தமிழகமே!

மாற்றம் வேன்டுமென மனதார நினைத்தாலும்
மாறி மாறி இலவச அறிவுப்புகளை நம்பியே
முன்னேற்றக் கழகங்களுக்கு வாக்களித்து
ஏமாந்த தமிழகமே!

மீண்டும் ஒருமுறை
உன்னை நீ எண்ணிப்பார்!
இனியாவது வாழ,.......
சுயமரியாதையுடன் வாழ.....
நினை!

உனக்காக நான் இறைவனிடம் வேண்டுவேன்!
நலம் வாழ நான் பாடுவேன்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP