Tuesday, April 03, 2007

"அன்புத்தோழிக்காக என் அடுத்த ஆறுமுகம்!"

"அன்புத்தோழிக்காக என் அடுத்த ஆறுமுகம்!"

யாரென்றும் தெரியாது
எனக்கென்றும் பதியாது
இருந்தாலும் அன்போடு
அழைத்திட்டார் அன்புத்தோழி!

முன்னமே பதிந்தாலும்
எண்ணமெலாம் உரைத்தாலும்
அன்புத்தோழி அழைத்ததால்
மீண்டும் பதிகிறேன் வியர்டு!!

சுருக்கமாகச் சொல்லுகிறேன்
இறுக்கத்தை இன்று விட்டு
விருப்பமான வியர்டுகளை
பொறுத்திருந்து கேட்டிடுவீர்!

பெண்களின் பாதம் பார்க்கப் பிடிக்கும்
கண்களின் காதல் தெரியத் துடிக்கும்
நண்பரின் நலம் பேணப் பிடிக்கும்
துன்பத்தில் துவளா மனம் பிடிக்கும்
இன்பமாய் என்றும் இருந்திடப் பிடிக்கும்
அன்புத்தோழியின் மனம் பிடிக்கும்!

இதுவே எனது இன்னொரு வியர்டு ஆறு!
பொதுவாகச் சொல்லி விட்டேன்
பதமாக விரித்துரைக்க மனமில்லை
இதமான அன்புத்தோழிக்கென இந்தப் பதிவில்!

நன்றி!
வணக்கம்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP