Friday, March 23, 2007

"நான் ஒரு வியர்டுங்க!"

"நான் ஒரு வியர்டுங்க!"

கோவியார் அழைத்திருந்தார்
கோக்குமாங்கு பதிவொன்று போடும்படி
மணிகண்டனும் மடலிட்டார்
மறைகழன்ற விதம் சொல்ல

வியர்டென்றால் என்னவென
அகராதியில் புரட்டிப் பார்த்தேன்
செய்யாதன செய்தல் இல்லாதென இருத்தல்
நடக்காதன நடத்தல், ஒவ்வாதன ஒவ்வுதல்

இவையே வியர்டாகும் எனவிருந்தது
சரி, இது வைத்தே சொல்லுவோம்
என்றிங்கு வந்து நான் என் வியர்டை
சொல்லுகிறேன் கேட்டிடுவீர்!

இதாங்க! இதுதான் என்னோட பெரிய வியர்ட்!

என்ன சொன்னாலும் உடனே அது ஒரு நாலு வரிக் கவிதையா [கொத்ஸ் இதைக் கவுஜ எனச் சொல்லுவார்!] சொல்றதுதான் என்னோட முதல் வியர்ட்னெஸ்!

இரண்டாவது வியர்ட்.... இருங்க! என் மனைவி என்னமோ சொல்றங்க! என்னது? ஆங்! சரி! சரி! சொல்லிடறேன் நீ போய்ப் படு!
ஒண்ணுமில்லீங்க

எந்தப் பாட்டைக் கேட்டாலும் சரி!
உடனே இது மாதிரி, இதே சாயல்ல இருக்கற ஒரு பழைய பாட்டை குடைஞ்சு, குடைஞ்சு கண்டு பிடிக்கற வரைக்கும், காதைப் பொத்திகிட்டு, அந்த ட்யூனை மனசுலியும், வாயாலியும் பாடிப் பாடி, எல்லாரையும் ஒரு வழியாக்கி, எரிச்சல் படுத்தி, உனக்குத் தெரியுதா, உனக்குத் தெரியுதான்னு தொளைச்சு, அது கண்டு பிடிக்கற வரைக்கும் ஓய மாட்டேன்!
கடைசியில் கண்டுபிடித்தவுடன் கிடைக்கும் ஆனந்தம் இருக்கே, அது குடும்பமெல்லாத்துக்கும் பரவும்!

அடுத்தது, மூணாவது,
எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும், அதுல முழு ஈடுபாட்டோட இறங்கி, அது முடியற வரைக்கும், சோறு, தண்ணி பாக்காம, குடும்பத்தைக் கவனிக்காம, பணத்தைப் பத்திக் கவலைப்படாம, குதிச்சிடுவேன்![உ-ம்: திருவாசகம் இன் ஸிம்ஃபொனி]
இதுல தோல்வியும் வரும்; ஜெயமும் வரும்!
தோல்வி வரும் போது தனியா அனுபவிப்பேன். எல்லார்கிட்டேயும்[ஈடுபடுத்தின அத்தனை பேருகிட்டேயும்] தனித்தனியா மன்னிப்பு கேட்பேன்.
வெற்றி பெற்று விட்டாலோ, அவ்வளவுதான்!
என்னைப் பிடிக்கவே முடியாது!
பெரிய்ய்ய்ய்ய்ய பார்ட்டிதான்!
பிரமாதப் படுத்திடுவேன்!!

நாலாவது!
கொஞ்ச நாளா, முடி கொட்டி வழுக்கை வர ஆரம்பித்தது!
க்ளோஸா கட் பண்ணி சமாளிச்சேன்.
போன வருஷம், இந்தியா போன போது, குலதெய்வம் கோயிலுக்குப் போன போது முடி இறக்கினேன்.
வீட்டுக்கு வந்து பார்த்த போது நல்லா இருந்த மாதிரி தெரிஞ்சுது!
சரின்னு, அப்படியே விட்டு விட்டேன்!
ஆமா!
இப்போ நானும் மைக்கேல் ஜோர்டான் ஸ்டைல்தான்!
மொட்டை!
பெர்மனென்ட் மொட்டை!
இது மாதிரி தடாலுன்னு முடிவெடுக்கறதுல நான் மன்னன்!

கடைசியா அஞ்சாவது!
இதுல கூட ந்நான் வியர்டுன்னு காட்டப் போறேன்!
ஆமாம்
அஞ்சு A, அஞ்சு B ன்னு ரெண்டு சொல்லப்போறேன்!

அஞ்சு A :
இன்னிக்கும் என்னோட முதல் காதலியின் பிறந்த நாளன்னிக்கு அவளை நினைச்சுப்பேன்!
இதை என் மனைவிகிட்ட இன்னிக்குத்தான் சொன்னேன்!
சரிதான் போடான்னு சொல்லிட்டு [நிஜமாவே!!]திரும்பிப் படுத்துத் தூங்கிட்டாங்க!
அஞ்சு B :
யார் என்ன சொன்னாலும் எனக்குக் கோபமே வராது! இதனால எனக்கும், என் மனைவிக்கும் எத்தனையோ சண்டை வந்திருக்கு! சொல்றது யாரு? நம்ம ஆளுதானேன்னு அவங்களை சமாதானப் படுத்தினாலும், கெட்ட பேரு என்னவோ எனக்குதான்!... ரெண்டு பக்கத்துலியும்!
அதைப் பத்திக் கவலைப்படாம காலத்தை ஓட்டிகிட்டு இருக்கேன்.

அவ்ளோதாங்க!

யாரையெல்லாம் கூப்பிட்டு இருக்காங்கன்னு தெரியாததால, இதோ எனக்குத் தெரிஞ்ச அஞ்சு பேரைக் கூப்பிடறேன்!

பத்மா அர்விந்த்

ஜெஸிலா

லிவிங் ஸ்மைல் வித்யா

செல்வநாயகி

குமரன்


இதையே அழைப்ப எடுத்துகிட்டு அஞ்சு பேரும் வந்து சொன்னா,, மகிழ்வேன்!

பாக்கறவங்களும் அவங்களுக்கு சொல்லிடுங்க!

அப்பாடா!
என் ராஜ்ஜியத்திலாவது 80% ஒதுக்கீடு கொடுத்து விட்டேன்!
சீக்கிரம் என்னை பிரதமர் ஆக்குங்கப்பா..ம்மா!!
:))
மீண்டும் கோவியாருக்கும், மணிகண்டனுக்கும் நன்றி!

இந்தியா நாளை ஸ்ரீலங்காவை வெல்ல வாழ்த்துகள்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP