மண்ணுநீதி!
"மண்ணுநீதி"!

கடல்நீரைக் குழிநிறுத்தி
அதில் சிக்கும் மீன் பிடிக்க
வலைவீசும் மனிதனே!- உன்
உலகத்தில் இவ்வண்ணம்
குழிகட்டி இனம்பிரித்து
அழிக்கின்ற மானுடரை -- நீ
தளை களைந்து தலை நிமிர்ந்து
தன்மானக் குரல் கொண்டு
தட்டுவதுமே எக்காலம்? -- சொல்!
நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை!!!
அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை!!!!
வல்லமை தாராயோ! - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
© Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008
Back to TOP