"இதுதாண்டா தமிழ்நாடு-2"
"இதுதாண்டா தமிழ்நாடு-2"

இந்தப் பதிவைப் போடுவேன் எனக் கனவிலும் நான் எண்ணவில்லை.
எல்லாம் சரியாகப் பதித்து விட்டேன் என நான் நினைத்து அந்தப் பதிவைப் பதிந்தேன்.
இன்று மீண்டும் அது என் பார்வையில் வந்தது.
நான் சொல்ல மறந்த ஒன்று என் பார்வையில் பதிந்தது.
15 இடம்தான் என் கல்லூரியில் எனச் சொல்லிய அந்த முதல்வரைப் பார்த்து, அன்றைய தமிழக ஆளும் முதல்வர் கேட்ட ஒரு செய்தியை அதில் பதிய விட்டுவிட்டேன்!
'உங்க வீட்டுல 15 பேருக்குத்தான் சாப்பாடு சமைச்சிருக்கீங்க! ஆனா, ஒரு 20 பேரு சாப்பிட வந்திட்டாங்க! சாப்பாடு இல்லை! போடான்னு அவங்களைத் திருப்பி அனுப்பிடுவீங்களா?' என்றாராம் காமராசர்!
கல்லூரி முதல்வர் திகைத்தார்!
'அவங்களுக்கு எப்படி நாம பசியாத்தலாம்னு நினைக்கணும். அதான் நம்ம பண்பு' எனச் சொல்லி, கல்வியமைச்சரைக் கலந்து ஆலோசித்து, அதன் பின்னே மாலை நேரக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்ததாகச் செய்தி.
இதைத் தொடர்ந்து இன்னொரு நிகழ்வை நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான தமிழ்மணப் பதிவர், தமிழ்க்கடல் திரு. நெல்லை கண்ணன் அவர்கள் சொன்னார்கள்.
விளாத்திகுளம் எம்.எல்.ஏ.வின் மகன் மருத்துவ சீட் கிடைக்க விண்ணப்பிக்கிறான்.
எல்லாம் சரியாகப் பதித்து விட்டேன் என நான் நினைத்து அந்தப் பதிவைப் பதிந்தேன்.
இன்று மீண்டும் அது என் பார்வையில் வந்தது.
நான் சொல்ல மறந்த ஒன்று என் பார்வையில் பதிந்தது.
15 இடம்தான் என் கல்லூரியில் எனச் சொல்லிய அந்த முதல்வரைப் பார்த்து, அன்றைய தமிழக ஆளும் முதல்வர் கேட்ட ஒரு செய்தியை அதில் பதிய விட்டுவிட்டேன்!
'உங்க வீட்டுல 15 பேருக்குத்தான் சாப்பாடு சமைச்சிருக்கீங்க! ஆனா, ஒரு 20 பேரு சாப்பிட வந்திட்டாங்க! சாப்பாடு இல்லை! போடான்னு அவங்களைத் திருப்பி அனுப்பிடுவீங்களா?' என்றாராம் காமராசர்!
கல்லூரி முதல்வர் திகைத்தார்!
'அவங்களுக்கு எப்படி நாம பசியாத்தலாம்னு நினைக்கணும். அதான் நம்ம பண்பு' எனச் சொல்லி, கல்வியமைச்சரைக் கலந்து ஆலோசித்து, அதன் பின்னே மாலை நேரக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்ததாகச் செய்தி.
இதைத் தொடர்ந்து இன்னொரு நிகழ்வை நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான தமிழ்மணப் பதிவர், தமிழ்க்கடல் திரு. நெல்லை கண்ணன் அவர்கள் சொன்னார்கள்.
விளாத்திகுளம் எம்.எல்.ஏ.வின் மகன் மருத்துவ சீட் கிடைக்க விண்ணப்பிக்கிறான்.
கூடவே, தேசபக்தரும் தமிழக முதல்வரின் நண்பருமான, தன் தாத்தாவைப் போய் கேட்கிறான் பேரன்.
தாத்தாவும் பாசத்தின் காரணமாய்ப் பேரனைக் கூட்டிக் கொண்டு காமராசரைப் பார்க்கப் போகிறார்.
ஒரு அரை மணி நேரம் பேசிய பின், ரெட்டியார் கிளம்புகிறார்.
காமராசர் சிரித்தபடியே, 'என்ன ரெட்டியார், வந்த விஷயத்தைப் பேசாமலியே கிளம்பறீங்க போல!' என்கிறார்.
'அடக்களுதை! அதென்னங்க பெரிய விஷயம்! எம்பேரனுக்கு மெடிக்கல் சீட் வாங்கறதுக்காகவா நாம சுதந்திரப் போராட்டம் பண்ணினோம். திறமை இருந்தா அவனுக்குக் கிடைக்கப் போகுது. நான் வரட்டுமா' என விடை பெற்றார்.
அப்படி இருந்ததாம் அந்தக் காலத்தில்.!!!
தாத்தாவும் பாசத்தின் காரணமாய்ப் பேரனைக் கூட்டிக் கொண்டு காமராசரைப் பார்க்கப் போகிறார்.
ஒரு அரை மணி நேரம் பேசிய பின், ரெட்டியார் கிளம்புகிறார்.
காமராசர் சிரித்தபடியே, 'என்ன ரெட்டியார், வந்த விஷயத்தைப் பேசாமலியே கிளம்பறீங்க போல!' என்கிறார்.
'அடக்களுதை! அதென்னங்க பெரிய விஷயம்! எம்பேரனுக்கு மெடிக்கல் சீட் வாங்கறதுக்காகவா நாம சுதந்திரப் போராட்டம் பண்ணினோம். திறமை இருந்தா அவனுக்குக் கிடைக்கப் போகுது. நான் வரட்டுமா' என விடை பெற்றார்.
அப்படி இருந்ததாம் அந்தக் காலத்தில்.!!!