மன்மோஹன்சிங் மனம் வெதும்பட்டும்!
மன்மோஹன்சிங் மனம் வெதும்பட்டும்!
மிக, மிகக் கேவலமான அரசியல் நடத்துபவர்களில் முதலிடம் வகிப்பவர்கள் காங்கிரஸ்காரர்கள்!
அவர்களைத் தூக்கிச் சாப்பிடும் வண்ணம் அரசியல் நடத்தி காங்கிரஸுக்கே பாடம் போதித்தவர்கள் திமுகவினர்.
1967 முதல் நாம் கண்டுவரும் பாடம் இது.
துரதிர்ஷ்டவசமாக நாம் தமிழராய்ப் பிறந்து இதைக் கண்டு வருகிறோம்.
தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, சோனியா காந்தியின் ஆணைக்கிணங்கி, உலகிலேயே பெரிய ஜனநாயகநாடு எனப் பெருமை பீற்றிக்கொள்ளும் அரசின் பிரதமர் தன் மனச்சாட்சியை அடகு வைத்து தயாநிதி மாறனின் ராஜிநாமாவைப் பரிந்துரை செய்திருக்கிறார் ஜனாதிபதிக்கு..... ஒரு விளக்கம் கூடக் கேட்காமல்!
தனது மந்திரி ஒருவர் ராஜிநாமா செய்கிறார்.
தனது கட்சிக்கு எதிராக சதி செய்ததாக இந்தத் தாத்தா சொல்கிறார்.
அச்சடித்த உரையைக் கையில் அடக்கியடியபடி தாத்தா வருகிறர்ர்.
தான் நினைத்த முடிவினைத் தவறாது சொல்லித் தளர்கிறார்
தன் துறையில் இதுவரை ஒரு தவறும் செய்யாத அமைச்சரை நீக்க, தன் ஆட்சிக்கு உலை வைக்கக்கூடிய கட்சியின் ஆணைக்கு, பிரதமர் இணங்குகிறார்.
ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கிறார்.
நாட்டைப் பற்றிக் கவலைப்படவில்லை.
தன் பதவியைப் பற்றி மட்டுமே!
அதுவும் சோனியாவின் உத்தரவுக்கிணங்க பாரதப் பிரதமர் ஆடுவது வெட்கத்திலும் வெட்கம்!
மக்களே புரிந்து கொள்ளுங்கள்!
நீங்கள் முக்கியமில்லை மன்னர்களுக்கு!
ஆம்!
அவர்கள் இந்நாட்டு மன்னர்கள்!
நீங்கள் எந்நாளும் அடிமைகள்தாம்!
பிராமணர், வைசியர், க்ஷத்திரியர், சூத்திரர் என்ற பேதம் அரசியலில் இல்லை!
அதைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் அரசியல்வியாதிகளுக்குத்தான் அது!
இன்னமும் ஏமாந்து போகாமல், இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள், எம் தமிழர்களே!
மனம் பிறழ்ந்த மன்மோஹன்சிங்கே!
இனித் தூங்க முடியாது உம்மால்!