Tuesday, July 01, 2008

"இது ஒரு கொலைக் கதை" - 7

"இது ஒரு கொலைக் கதை" - 7

[முன் பதிவு இங்கே]

'எனக்கென்னமோ அந்தக் கிழவி பொய்தான் சொல்றான்னு தோணுது' என்றார் ராஜேஷ். 'இப்ப என்ன பண்றது?' எனக் கையைப் பிசைந்தார்.

'அவ பொய் சொல்றான்னா, அவளுக்குத் தெரிஞ்சவங்களை விசாரிங்க. அது எப்படீன்னு நான் சொல்லியா தரணும்' எனச் சொல்லிச் சிரித்தார் ஜப்பார்.

'அட! இது சட்டுன்னு எனக்குத் தோணாம போயிருச்சே என ஒரு கணம் திகைத்த ராஜேஷ், 'என்ன இருந்தலும், புலனாய்வுத்துறைப் போலீஸ்னா தனி ட்ரெய்னிங்தான்' என மனதுக்குள் சிலாகித்தவாறே கிளம்பினார்.

வேற எதுனாச்சும் ரிப்போர்ட் வந்திருக்கா?' என 404-ஐ வினவினார் ஜப்பார்.

'வந்திருக்குங்க ஐயா! துப்பாக்கிக் குண்டு பத்தின ரிப்போர்ட்' என ஒரு தாளை நீட்டினார் 404.

வாங்கிப் படித்தார் ஜப்பார்.

'இந்தக் குண்டு ஒரு .35 மில்லிமீட்டர் துப்பாக்கியில் இருந்து சுடப்பட்டிருக்கிறது. இதில் இருக்கும் ஒருவித தனி அடையாளங்கள், கீறல்கள், இதற்கான துப்பாக்கி கிடைத்தால், அதனுடன் ஒப்பிட்டுச் சொல்லமுடியும்'

'சம்பவம் நடந்த இடத்துல, எதுனாச்சும் துப்பாக்கி கிடைச்சுதா?' எனக் கேட்டார் ஜப்பார்.

'இல்லீங்க ஐயா! அங்க எதுவும் அப்படி கிடைக்கலை' எனப் பதிலிறுத்தார் 404.

'அப்போ இன்னும் அது கிடைக்கலை. இந்தப் பசங்க மூணு பேருல யாராச்சும் துப்பாக்கி வைச்சிருந்தா, அது ஸ்டேஷன்ல பதிவு செஞ்சிருக்கணுமே. அப்படி ஏதாவது இருக்கான்னு பாருங்க' என ஆணையிட்டார்.

'சரீங்க ஐயா' எனச் சொல்லி ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிய 404, திடீரெனப் பிரகாசமானார்.

'இருக்குங்க! காசிப் பய ஒரு .35 துப்பாக்கியை பதிவு பண்ணி இருக்கான்' எனக் கூவினார்!

'சரி. காசியைக் கூப்பிட்டு விசாரிங்க. அது கிடைச்சா[!!] வாங்கி பரிசோதனைக்கு அனுப்புங்க' என உத்தரவிட்டார்.

'இதோ பண்றேன் ஐயா' என ஜரூரானார் 404.
*****************

'ஏம்மா! உங்களுக்கு சொர்ணத்தம்மாவை எவ்வளோ நாளாத் தெரியும்?' ராஜேஷ் அந்தப் பெண்மணியைப் பார்த்துக் கேட்டார்.

'ரொம்ப வருஷமாத் தெரியுமுங்க. எதுக்குக் கேக்கறீங்க?' என பவ்யமாக பதில் சொன்னார் அந்தப் பெண்மணி.

'அடிக்கடி பார்ப்பீங்களோ' எனத் தூண்டில் போட்டார்.

வாராவாரம் பார்ப்போமுங்க. இப்ப போன வெள்ளிக்கிழமை கூட பார்த்தேனே!' என்ற பெண்மணியை சற்று உற்சாகத்துடன் பார்த்தார் ராஜேஷ்.

'வழக்கம்போலக் காலையில்தானே!' என நோட்டம் விட்டார்.

'காலையிலியும் பார்த்தேனுங்க. ராத்திரி கூத்து கட்டறப்பவும் பார்த்தேனுங்க' என்றார் அந்தப் பெண்மணி.

'ஓ! ராத்திரி கூத்தும் நடந்துச்சா?' என அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார் ராஜேஷ்.

'விடிய விடிய நடந்துச்சுங்க. சொர்ணத்தம்மாவும் நானும் முழுக்க முச்சூடும் பார்த்தோமுங்க'

'அப்போ அவங்க பசங்களும் இருந்தாங்கதானே' என மீண்டும் கொக்கி போட்டார்.

'அந்தத் தறுதலைப் பசங்க எங்கங்க இங்கெல்லாம் வர்றாங்க. எம் பசங்களைப் பார்த்து எம்புட்டு நாளாச்சுன்னு சொர்ணம் கூட ரொம்பவே பொலம்பிச்சுங்க. ஏங்க ஏன் இதையெல்லாம் கேக்கறீங்க' என்ற பெண்மணியின் கேள்வியைப் பொருட்படுத்தாது, அவரது பெயர், விலசத்தைக் குறித்துக் கொண்டு கிளம்பினார் ராஜேஷ்.

நேராக ஜப்பாரிடம் சென்று தகவலைச் சொன்னார்.

ஜப்பாரின் முகம் பிரகாசமாகியது.

'அப்போ சொர்ணத்தம்மா எதையோ மறைக்கறாங்க. இல்லைன்னா யாருக்காகவோ பொய் சொல்றாங்க. முத்தண்ணன்கிட்டப் போயி, அந்த சிப்பி வித்த விஷயத்தை மறுபடியும் கேக்கணும்; அப்படியே, காசியோட துப்பாக்கியையும் விசாரிங்க' என்றார் ஜப்பார்.

'சரிங்க ஐயா!' என்றபடி அடுத்த உத்தரவுகளைப் பிறப்பித்தார் ராஜேஷ்.
*************

[தொடரும்]

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP