Thursday, September 07, 2006

என்னுயிர்க் கண்ணம்மா!

""என்னுயிர்க் கண்ணம்மா!""


சோம்பல் முறித்துக் காலையில் எழுந்தேன்!

மாலை திரும்பி வருகையில்

வாங்க வேண்டிய சாமான்களின் பட்டியல்

என்னைப் பார்த்துச் சிரித்தது!

அலுத்துக் கொண்டே எழுந்து

அவசர அவசரமாய்க்

காப்பி போட்டுக் குடித்து

கிடைத்ததை எடுத்து

ஒரு பாக்ஸில் அடைத்து

அலுவலகம் போனதும்

மறக்காமல் தொலை பேசியது!

அழைத்தது என் மனையாள்!

வரும்போது அப்படியே

பொண்ணையும் கூட்டிகிட்டு வ்ந்துருங்க!

அன்பான அதிகாரக் குரலில்

ஆணையிட்டு மறைந்தாள்!

மாலையில் வந்து,

மகளைக் கூட்டி வந்து,

மறந்துபோன சாமான்களை

மறுபடி வாங்கி வந்து

மூச்சிறைக்க வந்தவனை,

மலர்ச்சியுடன் வரவேற்று,

இப்படி எல்லாம் நீங்க

செய்வதுதான் எனக்கு

உங்களிடம் மிகப் பிடித்த ஒன்று என

ஆசையுடன் யாரும் பாராத வேளையில்

இச்சென்று முத்தமிட்டாள்

என்னுயிர்க் கண்ணம்மா!

இதோ நான் அடுத்த நாள்

வேதாளமாக ரெடி!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP