Sunday, May 28, 2006

"ஜெயலலிதாவின் தப்பாட்டம்"

"ஜெயலலிதாவின் தப்பாட்டம்"



தேர்தலிலே தெரிவு செய்த மக்களைப் பாராட்டி
மன்றத்தில் பேசியதால் மனமகிழும் தொண்டர்களே!

அக்கறையாய்ச் சபைக்கு வந்து
வக்கணையாய்க் கேள்விகள் கேட்டு
முக்கால் மணி நேரம் பேசியதால்
முறுவலிக்கும் கண்மணிகளே!

முதல் நாளே முறையின்றிச் சண்டையிட்டு
முழுவதுமாய் வெளியேற்றப்பட்டு இன்று
முன்னாள் முதல்வரை மன்றத்தில் வரச் செய்து
முனைப்பாகப் பேசியதால் முகம் மலர்ந்தீர் நீவிர் இன்று!

தவறான திட்டங்களை
தவறான நேரங்களில்
தவறாக அறிவித்து- இன்று
தவறான "முடிவைத்" தந்தவர்
தங்கமான உங்கள் தலைவி!

தோல்வியினைச் சரியாக நேர்கொள்ள மனமின்றி
துவண்டிருக்கும் தொண்டரையும் நினைவில் கொள்ளாமல்
துவக்க நாள் முதலே வரமாட்டேன் என்றே
துச்சமாய் அறிவித்த நும் தலைவி
தம்மக்கள் இன்று, தவறான நடத்தையினால்
தம் தொகுதி சார்பதனை மன்றத்தில் காட்டாமல்
தள்ளி வைக்கப்பட்ட நிலையினைக் கண்டவுடன்
"தளராத மனத்துடனே வேதாளம் வருதற்போலே"
தன்னிகரில்லாத் தலைவியும் சபைக்கு வர மனமிசைந்தார்!

வந்தவரைக் கண்ணியமாய்ப் பேசவிட்டு
"சொந்தமெல்லாம் இல்லாமல் தனியாக நின்றவரை"
நிந்தனைகள் செய்யாமல் ஆளுகின்ற முதல்வருமே
பாந்தமாகவே பதிலிறுத்தார்! அவருக்கு நன்றி!

பேசுகின்ற நேரத்தில்
ஏசுகின்ற குணம் விட்டு
காசு பணம் பார்க்காத
மாசற்ற நம் மக்கள்
குறை கேட்கும் குணமின்றி
நேசமாகப் பேசிடாமல்
கண்ணியமற்று நடந்திட்டார்
முன்னாள் முதல்வருமே!

முதல்வர் வருகின்ற போதினிலும்
முதல்வர் பதிலிறுக்கும் போதினிலும்
மற்றவர்கள் அமர்ந்திருக்க வேண்டுமென்பது
மற்றவருக்கு வேண்டுமெனில் மற்ந்திருக்கக் கூடும்
முன்னாள் முதல்வருக்கும் கூடுமோ?

தன் பேச்சு முடிந்தவுடன்
தன் வழியே போகாமல்
'மார்ஷல்' வந்து வெருட்டும் வரை
முறையற்ற இடத்தினிலே
தன் கருத்தை முன் வைத்து
தனிப்பேட்டி கொடுத்ததுவும்
முறை சொன்ன 'மார்ஷலையும்'
முறையின்றிப் பேசியதுவும்
முன்னாள் முதல்வர்க்கு அழகாமோ?

முன்னாள் முதல்வர்கள்
கண்ணியம் காத்தவர்கள்,

[நான் கருணாநிதியையும்,
பன்னீர்செல்வத்தையும்
சொல்லவில்லை!!

காமராஜரையும்,
ராஜாஜியையும்,
ஓமந்தூராரையும்
பக்தவத்சலத்தையும்,
அண்ணாத்துரையையும்
சொல்லுகின்றேன்!]

முன்னாள் முதல்வர்கள்
கண்ணியம் காத்தவர்கள்
முகம் சுளிக்க செய்தீரே!

மீண்டும் நீவிர் சட்டசபைக்கு
வருவதாகப் பேசுகிறார்!
அதுபோல நடந்திடவே
நானும் விரும்புகிறேன்!
கண்ணியம் காத்து
கடமையை ஆற்றிட
கவலையோடு என் வேண்டுதல்கள்!

"ஆடாதீர் தப்பாட்டம்!"

நன்றி!
வணக்கம்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP