"குருமதி நாளினில் பணிமுகம் குருமுகம்."
"குருமதி நாளினில் பணிமுகம் குருமுகம்."
உருநின்று உள்ளாடும் ஓர்நினைவில் மகிழ்ந்திருக்க
திருமுகத்தின் வனப்பினையே மனமெண்ணிக் களித்திருக்க
பெருநதியாய்ப் பாய்ந்துவரும் பேரன்பில் கலந்திருக்க
குருவருளை நாடியே திருமுருகன் அடிபணிந்தேன்.
***********
ஒருமுகம் திருமுகம் எதிர்வரும் குருமுகம்
அருள்முகம் தருமுகம் நிறைமுகம் குருமுகம்
மருள்தனை நீக்கிடும் மாதவன் குருமுகம்
வருமுகம் நகைமுகம் அழகுறு குருமுகம்
என்முகம் பார்த்தெனை அருள்செயும் குருமுகம்
இன்முகம் காட்டியே இதம்தரும் குருமுகம்
விண்முகம் காட்டிடும் வகைசெயும் குருமுகம்
உள்முகம் நோக்கியே தினம்வரும் குருமுகம்
பெருமுகம் அருள்தனைத் தருமுகம் குருமுகம்
அறுமுகம் வினைகளை அறுமுகம் குருமுகம்
உருமுகம் உள்ளினுள் காட்டிடும் குருமுகம்
மறுமுகம் வேண்டா மலர்முகம் குருமுகம்
எழில்முகம் நினைவினில் திகழ்ந்திடும் குருமுகம்
அழகிது வெனவே நகைமுகம் குருமுகம்
பழகிட எளிதாய் ஒளிர்ந்திடும் குருமுகம்
மெழுகென வென்னை யுருக்கிடும் குருமுகம்
பிழைமுகம் காணப் பொறுக்கா குருமுகம்
மழைமுகி லெனவே பொழிந்திடும் குருமுகம்
குழைந்திடக் குழைந்திடும் குழந்தைக் குருமுகம்
வழியெனக் கெனவே வந்தவோர் குருமுகம்
நனிமுகம் கனிமுகம் பனிமுகம் குருமுகம்
இனியெனைக் காத்திட அருளிடும் குருமுகம்
பனிமல ரிரவில் பொழிமுகம் குருமுகம்
பூரண நிலவாய் மலர்ந்திடும் குருமுகம்
ஓமெனும் மறையின் பொருள்முகம் குருமுகம்
'ஓம்'எனச்சொல்லி வரந்தரும் குருமுகம்
போமெனத் துயரைப் போக்கிடும் குருமுகம்
'ஊம்'எனும் குறிப்பால் கதிதரும் குருமுகம்
அடிமலர் தொழுதிட அருள்செயும் குருமுகம்
மடியினில் வைத்து மகிழ்ந்திடும் குருமுகம்
வடிவழ கெல்லாம் காட்டிடும் குருமுகம்
வடிவேல் தாங்கிடும் முருகனின் குருமுகம்
அருள்முகம் நினைமுகம் வழிசெயும் குருமுகம்
திருமுகம் கண்டிட வினையழி குருமுகம்
இருள்முகம் நீக்கிடும் குமரனின் குருமுகம்
குருமதி நாளினில் பணிமுகம் குருமுகம்.
குருவடி சரணம்! குருவே சரணம்!
**********************************************