Sunday, September 21, 2008

"விநாயகர் அகவல்" -- 9

"விநாயகர் அகவல்" -- 9


முந்தைய பதிவு

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி [46]


செய்துவரும் பயிற்சியதும் மென்மேலும் முதிர்ந்துவர

ஆனந்தம் உள்ளினிலே அமுதமெனப் பொங்கிவரும்!

சூரியனும் சந்திரனும் இசைந்திருந்து இளகவைக்கும்

செயல்திறனைச் சூட்சுமமாய் ஔவையிங்கு சொல்லிநின்றாள்


[மேலிதனைச் சொல்லுதற்கு குருவினருள் எமக்குவேண்டும்!]

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் [48]


ஆதாரம் ஆறினிடை அமர்ந்திருந்து இயக்குகிற

பதினாறு கலைகளையே பாட்டியிங்கு சொல்லுகிறாள்

மேலிருக்கும்
ஸஹஸ்ராரம், ஆதாரம் ஆறு,

லலாடபிந்து, அர்த்த சந்திரன், ரோகிணி,

நாதம், நாதாந்தம், சக்தி, வியாபிகா,

சமனா, உன்மனா
என்னுமிந்தப் பதினாறு

நிலைகளையே கடந்தவரே உத்தமத் தவத்தோர்

ஆதாரச் சக்கரங்கள் ஓராறும்,

சூரிய சந்திரக் கலையிரன்டும்

சேர்ந்திங்கு உடற்சக்கரம் எட்டானது

உள்ளிருக்கும் சக்கரத்தை

உள்ளிருக்கும் கணபதிதான்

உள்ளபடி காட்டுகிறான்


சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப் [50]


உருவினைச் சமைக்க ஆறுமுகம் கொள்வர்

பருப்பொருள் இலக்கணம் அதுவே ஆகும்

வடிவம், உயரம், நீளம், அகலம்,

திண்மை, பருமை எனவும் சொல்வர்

நான்முகம் என்பது நுண்பொருள் இயல்பு

இயந்திரவடிவில் இதனை அமைப்பர்

இறையவன் உருவினை அறிந்திட உதவிடும்

பத்து குணங்களும் எண்ணிடச் செய்து

உள்ளில் காட்டும் யோகியர் நிலையினை

கணபதி காட்டித் தருவான் என்றாள்


புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் [52]


ஐம்புலன் ஐந்தும், மனம், புத்தி

அகங்காரம் எனும் மூன்றும் சேர்ந்த

சூக்கும உடலின் எட்டுநிலைகளும்,

உள்ளிருக்கும் ஆறு ஆதாரங்கள்

நிராதராம், மீதானம் எனும்

எட்டுநிலைகளாய் விரிந்திருக்கும்

அற்புதத்தை
எனக்குப் புரியவைத்தனையே

என ஔவையின் மகிழ்ச்சி அதிகமாகிறது!
******************************************

[தொடரும்]

அடுத்த பதிவு

2 பின்னூட்டங்கள்:

jeevagv Wednesday, September 24, 2008 11:09:00 PM  

எல்லாப் பகுதிகளையும் ஒருசேர ஆழ்ந்து படித்திட எண்ணம்! இப்போதைக்கு மேலோட்டமாக படித்து வருகிறேன் ஐயா.

VSK Wednesday, September 24, 2008 11:21:00 PM  

புரிகிறது என் இனிய நண்பரே!

நன்றி!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP