Tuesday, January 20, 2009

"ஆனந்த ராமாயணம்" - 1

"ஆனந்த ராமாயணம்"


நான் தினந்தோறும் சொல்லிவரும் ஒரு இனிய தோத்திரப் பாடல் ஆனந்த ராமாயணம். எளிய தமிழில், ராமனையே நேரில் உட்காரவைத்து, அவனுக்கே அவன் கதையைச் சொல்லுவதாக அமைந்த பாடல் இது! இயற்றியவர் பெயர் தெரியவில்லை.

பதிவின் நீளம் கருதி, இரு பதிவுகளாக இதை இங்கு அளிக்கிறேன். இசைவடிவிலும் இதனை நாளை அளிக்க முயலுகிறேன்.

ஸ்ரீ ராமஜயம்!



"பால காண்டம்"


தேவர்குறை தீர்த்திடவே ராமா ராமா

மூவரோடு அவதரித்தாய் ராமா ராமா


தசரதர்க்குப் பாலகனாய் ராமா ராமா

புஜபலத்தோடே ஜனித்தாய் ராமா ராமா


கோசலைதன் கர்ப்பத்தில் ராமா ராமா

கூசாமல் நீ பிறந்தாய் ராமா ராமா


தவமுனிக்கு உதவிசெய்ய ராமா ராமா

கவனமுடன் பின்சென்றாய் ராமா ராமா


தாடகையைச் சங்கரித்தாய் ராமா ராமா

பாடபுகழ் தானடைந்தாய் ராமா ராமா


கல்லைப் பெண்ணாக்கி வைத்தாய் ராமா ராமா

வில்வளைக்க மிதிலை சென்றாய் ராமா ராமா


ஜனகன் வரலாறு கேட்ட ராமா ராமா

தனக்கு முனிவன் பதிலுரைக்க ராமா ராமா


தனுசைக் கையில் எடுத்தாய் ராமா ராமா

மனதில் கிலேசமற்றாய் ராமா ராமா


வில்முறிய சீதை கண்டு ராமா ராமா

நல்மணம் செய்துகொண்டாய் ராமா ராமா


மங்களங்கள் பாடவே ராமா ராமா

தங்கினீர் மிதிலை தன்னில் ராமா ராமா


பரசுராமன் வில் முறித்தீர் ராமா ராமா

கரிசனமாய் அயோத்தி சென்றீர் ராமா ராமா


சீதையுடன் வாழ்ந்திருந்தீர் ராமா ராமா

சிறக்கவே அயோத்தி நகர் ராமா ராமா

****************************************


"அயோத்தியா காண்டம்"


அயோத்திக்கு அரசனாக ராமா ராமா

அவனிதனில் தசரதரும் ராமா ராமா


உந்தனையே வேண்டிக் கொண்டார் ராமா ராமா

சிந்தை களித்திருந்தார் ராமா ராமா


சிற்றன்னை கைகேசியை ராமா ராமா

பற்றில்லாது கூனியுமே ராமா ராமா


பக்குவமாய் தான் கலைத்து ராமா ராமா

பரதர் முடி பெற்றிடவே ராமா ராமா


உத்தரவு கேளென்று ராமா ராமா

ஊக்கமுண்டாக்கி விட்டாள் ராமா ராமா


தாய்மொழி தவறாமலே ராமா ராமா

தவவேடம் தான் கொண்டாய் ராமா ராமா


தசரதரும் விசனம் கொள்ள ராமா ராமா

தான் நடந்தாய் கானகமும் ராமா ராமா


சீதையுடன் புறப்படவே ராமா ராமா

லக்ஷ்மணரும் கூட வந்தார் ராமா ராமா


பக்தரெல்லாம் புலம்பிடவே ராமா ராமா

பலநீதி சொல்லி தான் நகர்ந்தாய் ராமா ராமா


கங்கைக் கரை அடைந்தாய் ராமா ராமா

நங்கை சீதையுடன் ராமா ராமா


ஓடம்விட்ட குகனுடன் ராமா ராமா

உறவுகொண்டு அங்கிருக்க ராமா ராமா


சேனையுடன் பரதர் வர ராமா ராமா

சிறப்புடனே பாதுகைக்கு ராமா ராமா


பட்டம்கட்டி அரசுசெய்ய ராமா ராமா

பரதரும் திரும்பிச் சென்றார் ராமா ராமா

********************************************


"ஆரண்ய காண்டம்"


அத்திரி முனியைக் கண்டு ராமா ராமா

அப்புறம் தண்டகம் சேர்ந்தாய் ராமா ராமா


கொடிய விராதகனை ராமா ராமா

மடிய சங்காரம் செய்தாய் ராமா ராமா


தண்டகவனத்து ரிஷிகள் ராமா ராமா

அண்டவர காத்து நின்றீர் ராமா ராமா


பஞ்சவடி தீரம் சென்றாய் ராமா ராமா

பர்ணசாலை கட்டி நின்றீர் ராமா ராமா


சூர்ப்பனகையைக் கண்டீர் ராமா ராமா

தீர்ப்பான் தம்பி என்றீர் ராமா ராமா


தம்பியால் பங்கமடைந்தாள் ராமா ராமா

வெம்பி மனம் வாடினாள் ராமா ராமா


கரதூஷணாதியரை ராமா ராமா

வர முறையிட்டாள் ராமா ராமா


கோதண்டத்துக்கு இரையாக ராமா ராமா

கூக்குரலிட்டு ஓடிவந்தார் ராமா ராமா


சூர்ப்பனகை தூண்டுதலால் ராமா ராமா

ஆர்ப்பரித்தான் ராவணனும் ராமா ராமா


மாரீசனை மானாக வர ராமா ராமா

மருமகனும் வேண்டிக் கொண்டான் ராமா ராமா


மாரீசன் மறுத்ததற்கு ராமா ராமா

தாறுமாறாய்க் கூறிவிட்டான் ராமா ராமா


சீதை முன்னே மான் வரவே ராமா ராமா

அதைப் பிடிக்கப் பின்சென்றாய் ராமா ராமா


அம்புபட்டு விழுந்தது மான் ராமா ராமா

நம்பும்படி கூக்குரலிட ராமா ராமா


சிந்தை கலங்கிடவே ராமா ராமா

சீதை வருந்தினாளே ராமா ராமா


ராவண சந்யாசி வந்தான் ராமா ராமா

நிலத்தோடே சீதையை ராமா ராமா


தேரின்மேல் எடுத்துச் சென்றான் ராமா ராமா

தெரிந்தெதிர்த்த ஜடாயுவும் ராமா ராமா


சிறகொடிந்து நிலத்தில் விழ ராமா ராமா

சீதை வரம் தந்து சென்றாள் ராமா ராமா


தேடிவரும் வழியில் ராமா ராமா

தென்பட்ட ஜடாயுவுக்கு ராமா ராமா


நல்வரமும் தானளித்தாய் ராமா ராமா

செல்வழியில் கவந்தன் வர ராமா ராமா


சேர எமலோகம் தந்தீர் ராமா ராமா

சபரிக்கு முக்தி தந்தீர் ராமா ராமா

***************************************
[நாளை நிறைவுறும்!]

4 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Tuesday, January 20, 2009 9:43:00 PM  

ரொம்ப நாள் சென்று கடை போட்டு இருக்கிங்க, மொத போனி என்னுது!
:)

Subbiah Veerappan Tuesday, January 20, 2009 10:50:00 PM  

ஆனந்தமாய்ப் பாட வைத்தாய் ராமா ராமா!
அகமகிழ்வு கொள்ள வைத்தாய் ராமா ராமா!
விஎஸ்கேயைக் காண வைத்தாய் ராமா ராமா!
பதிவொன்றைப் போட வைத்தாய் ராமா ராமா!

VSK Wednesday, January 21, 2009 9:47:00 PM  

எனக்கென ஒரு உள்ளம் எப்போதும் இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது கோவியாரே!
மீண்டும் நன்றி!

VSK Wednesday, January 21, 2009 9:49:00 PM  

//ஆனந்தமாய்ப் பாட வைத்தாய் ராமா ராமா!
அகமகிழ்வு கொள்ள வைத்தாய் ராமா ராமா!
விஎஸ்கேயைக் காண வைத்தாய் ராமா ராமா!
பதிவொன்றைப் போட வைத்தாய் ராமா ராமா!//

என்னவென யான் சொல்வேன் ராமா ராமா
இங்கிவரைக் கொண்டுவந்தாய் ராமா ராமா
கந்தபுராணம் விரைவில் வரும் ராமா ராமா
நீயதற்கு அருள் செய்யணும் ராமா ராமா!

நன்றி ஆசானே!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP