Wednesday, August 27, 2008

"நான் ரசித்த இன்னுமொரு திரைப்படம்"

"நான் ரசித்த இன்னுமொரு திரைப்படம்"


"ஸோட்ஸி"

ஒரு இளைஞன்!

தந்தை தாயற்ற அநாதை!

தவறான கும்பலுடன் சேர்ந்து தனக்கென ஒரு தவறான வழியையும் தேர்ந்தெடுக்கிறான்.

இவன் பின்னாலும் ஒரு நாலு பேர்!

சின்னச் சின்னத் திருட்டுகள், அடிதடிகள் செய்து தானும் ஒரு 'தாதா'வெனப் பெயரெடுக்கிறான்!

ஒருமுறை ஒரு கொலை எதிபாராதவிதமாக நிகழ்ந்துவிடுகிறது.

ஸோட்ஸி இதை நியாயப்படுத்தி கொலைசெய்த நண்பனுக்காகப் பரிந்து பேசுகிறான்.

நண்பர்களுக்குள் இதில் வேறுபாடு ஏற்பட்டு, ஆத்திரத்தில், தன் முடிவை எதிர்த்த நண்பனை நையப்புடைக்கிறான்.

தன் செயலில் தானே நொந்து போய், தனியே கிளம்புகிறான்.

ஒரு தனித் திருட்டை நிகழ்த்துகிறான்.

தனியே இருக்கும் அந்த ஆளை அடித்துப் போட்டுவிட்டு கிடைத்த பொருளை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறான்.

வீட்டு வாசலில் கதவைத் திறக்கச் சொல்லி,அந்த வீட்டுக்காரரின் மனைவி ஒரு காரிலிருந்து இறங்கி, மணியை அழுத்திக் கொண்டிருக்கிறாள்.

அவளைத் துப்பாக்கி முனையில் தள்ளிவிட்டு, அவள் காரில் ஏறித் தப்பிக்கிறான்.

கொஞ்ச தூரம் சென்றதும், பின் இருக்கையில் இருந்து ஒரு சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறான்!.....

ஒரு குழந்தையின் அழுகை ஒலி!

திடுக்கிட்டு காரை நிறுத்திப் பார்க்கிறான்!

ஆம்!

ஒரு சின்னக் குழந்தை பின்னிருக்கையில்!

திகைத்துப்போய், உடனே தன் வீட்டுக்குச் செல்கிறான்.

அந்தக் குழந்தையை ஒரு செய்தித்தாளில் சுற்றி, படுக்கைக்கு அடியில் ஒளித்து வைக்கிறான்!

பசிக்கு அது அழும்போது என்ன செய்வதெனத் தெரியாமல், பாலை அதன் வாயில் ஊற்ற, அது அதைத் துப்ப, செய்வதறியாது திகைக்கிறான்.

கூடவே ஆயும் போய் அது அழுகிறது!

ஒரு செய்தித்தாளில் அதை வாங்கி சுருட்டி வைக்கிறான்!

வெளியே சென்று திரும்புகிறான்.

குழந்தை வீறிட்டு அழுதுகொண்டிருக்கிறது.

படுக்கையின் அடியில் வைத்திருந்த அந்தக் குழந்தையை வெளியே இழுத்துப் பார்த்தால்.....

குழந்தையைச் சுற்றி ஒரே எறும்புக்கூட்டம்!

தித்திப்புப் பாலுக்காக வந்த எறும்புகள் மொய்த்து குழந்தையைக் கடித்துக் கொண்டிருக்கின்றன.

பதறிப்போய், உடனே தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் வீட்டுக்குச் செல்கிறான்.

அவள் ஒரு குழந்தைக்குத் தாய் என்பதை கடைத்தெருவில் பார்த்திருக்கிறான் இவன்!

அவளிடம் விவரத்தைச் சொல்லி, குழந்தையை அவளிடம் விட்டுச் செல்கிறான்.

அவளும் இவன் [முரட்டுக்]குணமறிந்து அதைப் பராமரிக்க ஒப்புக்கொள்கிறாள்.

குழந்தையைப் பறிகொடுத்தவர் போலீஸில் புகார் கொடுக்கிறார். மனைவியோ ஒரு தள்ளுவண்டியில்!

குழந்தைக்காக மீண்டும் அந்தக் குழந்தையின் வீட்டுக்கே சென்று, அதற்குத் தேவையான பொருள்களைத் தன் நண்பர்களுடன் சென்று திருடுகிறான்.

அப்போது, குழந்தைக்குத் தேவையானதைத் தவிர, மேலும் சில பொருள்களைத் திருட முற்படும் தனது நண்பனையே ஒரு சண்டையில் கொன்றும் விடுகிறான்.

இவனது இந்த "திருந்திய" போக்கு பிடிக்காத இன்னொரு நண்பனும் விலகுகிறான், இவனை விட்டு!

ஒரு பெரும் தொகையை இந்தக் குழந்தையைப் பராமரிக்கும் அந்தப் பெண்ணிடம் கொடுக்க, அவள் அதை ஏற்க மறுத்து, குழந்தையையும் திருப்பிக் கொடுக்கிறாள்.

போலீஸ் கொடுத்த துப்பின் மூலம் உண்மை அறிந்த குழந்தையின் தாய், எடுத்த இடத்திலேயே ..... தன் வீட்டிலேயே குழந்தையை விட்டு விட்டு வந்தால் உன்னைக் காப்பாற்ற முயலுவேன் எனச் சொல்ல,
குழந்தையை எடுத்துக் கொண்டு அந்த வீட்டுக்குச் செல்கிறான்.


அதற்குள் போலீஸுக்கு விஷயம் தெரியவர, வீட்டைச் சூழ்கிறார்கள்.

'இவன் தன் தவறை ஒப்புக்கொண்டு குழந்தையைத் திரும்பவும் தந்துவிட்டான்' என அந்தத் தந்தை அலறிக்கொண்டு ஓடிவரும் வேளையில்,
ஸோட்ஸி போலீஸால் சுட்டுக் கொல்லப் படுகிறான்!


படம் முடிகிறது!

கலங்க வைக்கும் படம் இது!

சிறப்பான நடிப்பு, இயக்கம், காட்சித் தொகுப்பு, பின்னணி இசை!

மிகச் சிறந்த படங்களில் ஒன்று இது!

2005க்கான சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கார் விருதைத் தட்டிச் சென்ற படம் இது!

தென்னாப்பிரிக்கக் களம் இதன் இன்னுமொரு சிறப்பு!

தவறாமல் பாருங்கள்!


"ஸோட்ஸி!"

2 பின்னூட்டங்கள்:

Indy Thursday, August 28, 2008 1:07:00 AM  

Super Narration !! Will watch this movie somehow soon

துரை Thursday, August 28, 2008 2:18:00 AM  

நன்றி நல்ல தகவல், நேரம் கிடைத்தால் பார்க்கலாம்(படத்தை)

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP