Monday, July 07, 2008

"என்னைக் கவர்ந்த இரு படங்கள்" - 2

"என்னைக் கவர்ந்த இரு படங்கள்" - 2

நான் அடுத்த நாள் பார்த்த படம் "யங் அட் ஹார்ட்" [Young at Heart]
Add Image
ஆம்! "மனதில் இன்னும் இளமை"

இது ஒரு அபூர்வமான திரைப்படம்!

நம்புங்கள்! இதில் வரும் முக்கிய நடிகர்களின் சராசரி வயது 80-க்கும் மேல்!

இவர்களை மேய்க்கும் இயக்குநருக்கு மட்டும் வயது 60-க்குள்.




இசை மேலுள்ள ஆர்வத்தினால், குரல்வளம் சற்று குறைந்திருந்தாலும், முதியோர் இல்லங்களுக்குச் சென்று, தங்களது இசைத்திறமையைக் காட்டிவரும் ஒரு வயதான இசைக்குழு!

இந்தக் குழுவின் பெயர்தான் 'யங் அட் ஹார்ட்"!

இவர்கள் பெருமை ஊருக்குத் தெரியவர, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் வரை இவர்கள் புகழ் பரவுகிறது.

இப்போது ஒரு பெரிய வாய்ப்பு!

அமெரிக்காவில் ஒரு பெரிய, புகழ் பெற்ற இசை அரங்கில் இவர்களது இசை நிகழ்ச்சி நடத்தச் சொல்லி ஒரு வாய்ப்பு... அழைப்பு.

ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.

படத்தின் முதல் காட்சி, ஒரு பெரிய கரவொலியுடன் துவங்குகிறது.

'நான் பாடட்டுமா... வேண்டாமா' என்ற வரிகளுடன் ஒரு 90 வயது மூதாட்டி அருமையாகப் பாடுகிறார்!

அதில் தொடங்கி, இவர்கள் இதற்கு முன் சிறு அளவில், முதியோர் இல்லங்களில் இவர்கள் பாடிய நிகழ்ச்சிகள் காட்டப் படுகின்றன.

அங்கிருந்து பல ஊர்களுக்கு இவர்கள் பயணிக்கிறார்கள்!

அப்போதுதான் இந்த அரிய வாய்ப்பைப் பற்றி இவர்களின் இயக்குநர் கூறுகிறார்.

ஆரவாரத்தோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.

மொத்தம் ஒரு 7 அல்லது 8 பாடல்கள்.

'ஆம்! எங்களால் முடியும், முடியும், முடியும்,' என்ற வரிகள் அடங்கிய ஒரு கடினமான, பல்லை உடைக்கும் பாடலும் இதில் இருக்கிறது.

அவற்றுக்கான பயிற்சி தொடங்குகிறது.

இதில் இருவர் உயிருக்கு ஊசலாடுபவர்கள்.

துணிவுடன் இறங்குகிறார்கள்.

பயிற்சி அநேகமாக முடிந்த நிலையில் தங்கள் திறமையைப் பரிசோதனை செய்ய ஒரு களத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அது ஒரு சிறைச்சாலை!

ஆம்! கைதிகளின் முன்னால் தங்கள் திறமையைக் காட்ட முடிவு செய்து நாளும் குறிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் ஒரு சோகம்!

முக்கியப் பாடகர்களில் ஒருவர் இறந்து போகிறார்.

தளராமல், இந்த முதியவர்கள்..... 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.... சிறைச்சாலைக்கு வருகிறார்கள்.

நெகிழ வைக்கும் நிகழ்ச்சி அது!

கடைசிப் பாடலாக, இறந்த தங்கள் நண்பரைப் போற்றி ஒரு பாடலையும் பாட, மொத்த கைதிகளும் அழுகிறார்கள்.

நாமும் தான்!

பயிற்சி தொடர்கிறது.

இயக்குநர் எல்லாருக்கும் உறசாகமளிக்கிறார்.

இப்போது இன்னொரு சோகம் இவர்களைத் தாக்குகிறது.

இன்னொரு முக்கியப் பாடகரும் மரிக்கிறார்.

நிகழ்ச்சியை இனித் தொடர்வதில் அர்த்தமே இல்லை என இயக்குநர் அறிவிக்கிறார்.

நிகழ்ச்சியை ரத்து செய்தால், உன்னையே நீக்கி விடுவோம். நிகழ்ச்சி நடக்கும். 'யெஸ் வீ கேன் கேன்' [ஆம் எங்களால் முடியும், முடியும்] என இவர்கள் சொல்ல பயிற்சி தொடர்கிறது.

நிகழ்ச்சி நாள்!

கூட்டம் அலை மோதுகிறது.

எதற்கு வருகிறார்கள்?

இவர்கள் பாடப்போகும் பாடலை, இவர்களை விடச் சிறப்பாகப் பாடக்கூடிய நிகழ்ச்சிகளைக் கண்டவர்கள்தான் இவர்கள்!

இருந்தும் வருகிறார்கள்.

இந்த வயதிலும், மனதில் இளமையாக இருக்கும் இவர்களைப் போற்ற.... நாமும் இந்த உணர்வைப் பெற வேண்டும் என்னும் ஒரு உத்வேகத்தில்!

நிகழ்ச்சி ஆரம்பம் ஆகிறது.

ஒவ்வொருவராக வந்து பாடுகிறார்கள்.
கூட்டமாகவும் பாடுகிறார்கள்.
பல வரிகள் சொதப்பப் படுகின்றன.
ஆனால், தாளம் தவறவில்லை.

மக்கள் ஆரவாரிக்கிறார்கள்!
அழுகிறார்கள் சில வரிகளுக்கு.
நம்மையும் அழ வைக்கிறார்கள்!

கடைசிப் பாடலைப் பாட ஒரு மிகவும் வயதான முதியவர் வருகிறார்.
மூக்கில் செருகிய ஆக்ஸிஜன் குழாயுடனும், கையில் ஒரு ஆக்ஸிஜன் ஸிலிண்டருடனும்!!




'கண்டம் கண்டமாகச் சுற்றினேன், இந்தக் குழுவுடன்... இறுதியில் நான் என் சிறுநீரைத் தக்கவைக்க முடியாத வரையில்' எனச் சொல்லிச் சிரிக்கிறார். ["We went continent to continent until I became incontinent ..."]

அவர் பாடத் துவங்கும் பாடல் ஒரு ஆண்-பெண் ஜோடிப் பாடல்.
ஆனால் அவரே பாடுகிறார்.... இறந்த தன் நண்பர்களைப் போற்றி!

மீண்டும் ஒரு நெகிழ வைக்கும் காட்சி.

கூட்டம் எழுந்து நின்று இடைவிடாமல் கை தட்டுகிறது.

படம் பார்த்த பலரும் எழுந்து நின்று அதைச் செய்தது ஒரு மறக்க முடியாத நிகழ்வு!

மிக உன்னதமான இசை அனுபவம் இந்தப் படம்!

பாருங்கள் இந்தப் படத்தை!
மனித நேயம் என்னவெனத் தெரிய வேண்டுமெனில்!!

வாழ்வதற்கு,....தன்னால் மற்றவரை மகிழவைக்க வேண்டுமெனில்..... வயது ஒரு வரம்பல்ல எனச்சொல்லும் இப்படம் ஒரு நெகிழ வைக்கும் படம்!

இது ஒரு உண்மைக் கதை!!

http://www.moviefone.com/movie/young-heart/32265/photos/5?sortType=&timePeriod=


10 பின்னூட்டங்கள்:

VSK Tuesday, July 08, 2008 12:28:00 AM  

but don't escape this movie kothS~!:))

VSK Tuesday, July 08, 2008 12:29:00 AM  

முகப்புக்குக் கொண்டு வந்தமைக்கு உங்களுக்கும், கொத்ஸுக்கும் நன்றி, கோவியாரே!:)

கோவை விஜய் Tuesday, July 08, 2008 9:09:00 AM  

வயதுக்குத்தான் முதுமை

மனதுக்கு என்றும் இளமை.

இதை திரைப்படவடிவில் அதுவும் இசையின் ஆதிக்கத்தில்.
கல் நெஞ்சையும் கரைய வைக்கும் பதிவு.

தி.விஜய்.

http://pugaippezhai.blogspot.com

VSK Tuesday, July 08, 2008 10:51:00 AM  

நன்றி விஜய்!

படம் பார்த்தால் சொல்லுங்கள்

நானானி Wednesday, July 09, 2008 1:26:00 AM  

சாகும் வரை மனதை இளமையாக
வைத்துக்கொள்ள எவ்வளவு
உற்சாகம், உத்வேகம் தரும் படம் இது! கண்டிப்பாக பார்க்கவேண்டும்.

Vijay Wednesday, July 09, 2008 4:34:00 AM  

கண்டிப்பாகப் படத்தைப் பார்க்கிறேன். இது வேற விஜய் :)

VSK Thursday, July 10, 2008 11:14:00 PM  

எத்தனை நாளுக்குப் பிறகு நீங்க வந்திருக்கீங்க நானானி!
ரொம்ப சந்தோஷமா இருக்கு!
நன்றி!

VSK Thursday, July 10, 2008 11:15:00 PM  

//கண்டிப்பாகப் படத்தைப் பார்க்கிறேன். இது வேற விஜய் :)//

மன்னிச்சுங்க சாமி!
உங்க வரவுக்கும் கருத்துக்கும் நன்றி 'இன்னொரு' விஜய்!:))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP