Friday, October 17, 2008

ஈழத்தமிழனின் வேண்டல்!

ஈழத்தமிழனின் வேண்டல்!
பழநிமலை முருகா பழம் நீ திருக்குமரா என்னும் மெட்டில்!


கதிர்காம வேல்முருகா
காப்பதுமுன் பாரமப்பா
எம்துயரம் நீக்கிடுவாய் - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா

போரும் ஓயாதோ விடியலும் வாராதோ
இடமின்றித் தவிக்கின்ற அவலமும் தீராதோ
நிலைமை சீராக நிழலும் நிஜமாக
நிம்மதியை எங்களுக்குத் தா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

இதுநாள் யாம்பட்ட இடரிங்கு போதாதோ
இப்படியே எம்மக்கள் அழிவதும் சரியாமோ
கருணைத் திருவுள்ளம் மிகுந்தவன் நீயல்லவோ
கண்மலரை திறந்திடப்பா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

சூரனை மாய்த்திடவே வேற்படை நீகொண்டாய்
சூரர்கள் பலவிங்கு எமையழிக்க வருகின்றார்
கதிர்காமப் படைவீட்டில் பாங்குடனே நீயிருக்க
எமக்கிந்த நிலை முறையோ - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

இப்படிக்கு நீயிருந்தால் என்செய்வோம் சொல்லப்பா
ஏனின்னும் மௌனமிங்கு எழுந்து நீ வா அப்பா
அழுகின்ற எம்மக்கள் துயர்நீக்க வேலெடப்பா
பரிந்தெம்மைப் பாரப்பா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

12 பின்னூட்டங்கள்:

Anonymous,  Saturday, October 18, 2008 3:34:00 PM  

http://aaththigam.blogspot.com/2008/10/blog-post_17.html

Anonymous,  Saturday, October 18, 2008 6:03:00 PM  

நல்லதே நடக்கும்
நன்மையே கிடைக்கும்.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

VSK Saturday, October 18, 2008 7:37:00 PM  

நன்றி அனானியாரே!

SurveySan Saturday, October 18, 2008 9:19:00 PM  

my comment missing?

anyway, aathigathukku, 'Nari' template oththuvarala.

Machi Sunday, October 19, 2008 9:37:00 PM  

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

Anonymous,  Monday, October 20, 2008 8:15:00 AM  

இப்படி ஒரு சுகமான வழி இருக்கா?

Anonymous,  Monday, October 20, 2008 8:17:00 AM  

நன்றி

VSK Monday, October 20, 2008 10:26:00 AM  

எனக்கும் அதான் தோணுது! மாத்திறலாம் , சர்வேசன்!

VSK Monday, October 20, 2008 10:26:00 AM  

//வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!//

நன்றி, திரு. குறும்பன்!

VSK Monday, October 20, 2008 10:27:00 AM  

//இப்படி ஒரு சுகமான வழி இருக்கா?//

நிகழமுடியாத பல நிகழ்வுகள் வேண்டலின் மூலம் நிகழ்வதைக் கண்டதில்லையா அனானியாரே!

VSK Monday, October 20, 2008 10:28:00 AM  

வருகைக்கு நன்றி தூயா!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP