Wednesday, June 08, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 18

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 18

17.
வடை டீ சாப்பிட்டானதும், அடுத்த பாட்டை உடனே படித்தேன்.

யாமோ தியகல் வியுமெம் மறிவும்
தாமே பெறவே லவர்தந் ததனாற்
பூமேன் மயல்போ யறமெய்ப் புணர்வீர்
நாமே/னடவீர் நடவீ ரினியே.

யாமோதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல் போய் அறமெய்ப் புணர்வீர்
நாம் ஏன் நடவீர் நடவீர் இனியே.

"யாமோதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்"

படிக்கறது வேற ஓதறது வேற. படிக்கறதுன்னா, சும்மா மெலெளுந்தவாரியா கண்ணை ஓட்டறது. கவனமாப் புரிஞ்சுக்காம, வேணுங்கறதை மட்டும் அப்படியே படிச்சுகிட்டுப் போறது! பரிட்சைக்கு சிலபேர் படிப்பாங்களே, முக்கியமான கேள்விங்களுக்கான பதிலை மட்டும்... அதும்மாரின்னு வைச்சுக்கலாம். படிச்சதுல பாதிய மறந்திருவான்!

ஆனா, ஓதறதுன்னா, ஒ[உ]ணர்ந்து சொல்றது. ஒவ்வொரு வார்த்தையையும் அப்பிடியே நெஞ்சுல அடிச்சமாரி வாங்கிக்கினு சொல்றதுக்கு ஓதறதுன்னு பேரு. நம்ம தருமபுரம் சாமிநாதன் தேவாரம் பாடறப்ப கவனிச்சியானா, இந்த ஓதறதுன்னா இன்னான்னு ஒனக்குப் புரிஞ்சிரும்! அதுனாலத்தான், அவங்களையெல்லாம் 'ஓதுவார்'னு சொல்றோம்.

சரி, அப்பிடி நல்லா மனசுல வாங்கிக்கினு படிச்ச படிப்பும், அதுனால வந்த அறிவையும் கொடுத்தவன் முருகன். அவனோட அருள் இல்லாம இப்பிடிப் படிக்கவோ, படிச்சதைப் புரிஞ்சுக்கவோ, அறிவைப் பெருசாக்கவோ முடியாது! அப்பிடிக் கிடைச்ச படிப்பையும், அறிவையும் வைச்சுக்கினு இன்னா பண்ணனும்? மேகத்துலேர்ந்து ஊத்தற மளை[ழை] கடலுக்குப் போயி, திரும்பவும் மேகமா மாறுறமாரி, அவங்கிட்டேர்ந்து வந்தது, திரும்பவும் அவனுக்கே போறமாரி நடந்துக்கணும்!

அவர்கிட்டியே திருப்பித் தந்திறணும்னு சொல்றாரு. எப்பிடித் திருப்பித் தர்றது? அந்த அறிவை வைச்சு அவனை மட்டுமே பாடுன்றாரு. ஏன்னா, இது அவர் குடுத்தது! அவர்கிட்டியே அவருக்கு அலங்காரமாத் திருப்பிக் குடு! அதாங்காட்டிக்கு, மத்த எதுலியும் சிந்தனை போவாம, முருகன் மேலியே நெனைப்பாக் கெடக்கணும்!
இதான் இந்த ரெண்டு வரியுல சொல்றது!

"பூமேல் மயல் போய் அறமெய்ப் புணர்வீர் நாம் ஏன் நடவீர் நடவீர் இனியே"

அதுக்கான வளி[ழி]யை இப்ப சொல்லிக் காமிக்கிறாரு!
போன பாட்டுல சொன்னாரே, ஆசையை ஒளி[ழி]க்கணும்னு! அதுக்கும் இதுல வளி காமிக்கிறாரு!


இந்த ஒலகத்தும் மேல க்கீற ஆசையையெல்லாம் கெடுறத்துக்கு சதா சர்வ காலமும் அந்த முருகனைப் பத்தி மட்டுமே பேசறது, பாடறது, படிக்கறது, நெனைப்புல வைச்சுக்கறதுன்னு மாத்திக்கினியானா, தானா மத்ததுல்லாம் ஒன்னிய வுட்டுக் கள[ழ]ண்டுக்கும். எது உண்மையான சமாச்சாராம்னு புரிஞ்சு போயிறும்!

'பூ'ன்னா இந்த ஒலகம். இந்தப் 'பூ'வை வைச்சு இன்னோரு அர்த்தமும் சொல்லலாம். ஆனா, அது இப்ப வேணாம்! இந்த ஒலகத்தும் மேல ஒனக்கு இருக்கற அல்லா ஆசையும் அத்துப் போவணும்னா, நீ எது மெய்யுன்னு புரிஞ்சுக்கினு, அத்தோட போய்ச் சேரணும். அத்தோட மட்டுந்தான் சேரணும்!
அப்பிடிப் பண்ணினியானா, அப்பறம் இன்னாடா கவலை ஒனக்குன்றமாரி, 'நாம் ஏன்?'னு சொல்லி ஒரு 'டொக்கு வைக்கறாரு.


"நாம் ஏன்"னா நமக்கு இனிமே இன்னா பயம்னு அர்த்தம்!

அப்போ இன்னாத்துக்கு ரெண்டு தபா 'நடவீர் நடவீர்'னு போட்டிருக்காரு?
இதான் படிக்கறதுக்கும், ஓதறதுக்குமான வித்தியாசம்!


சாதாரணமாப் படிச்சியானா, 'நடவீர்; நடவீர்'னு அளு[ழு]த்திச் சொல்றாரோன்னு தோணும். ஆனா, அது அப்பிடி இல்லை!
அத்த நீ எப்பிடிப் படிக்கணும்னா, 'நடவீர்; நடவீர் இனியே'ன்னு!


மொதல்ல சொல்லியிருக்கற 'நடவீருக்கு' நடங்கப்பா, போங்கப்பா, அந்த உண்மையான கந்தனை தேடிக்கினு'ன்னு பொருளு.

ரெண்டாவது நடவீரை "இனியே"வோட சேர்த்துப் படிக்கணும்.
அப்பிடி நீ குமரனைத் தேடிப் போனியானா, இனிமே நீ பொ[பி]றவி எடுத்து இந்த ஒலகத்துல நடக்கவே மாட்டேன்னு அர்த்தம்!
வெளங்குதா?

முருகனைத் தேடிப் போ! ஆசையெல்லாம் அத்துறும்! அந்த மெய்யான தெய்வத்தைக் கண்டுபிடிச்சிட்டேன்னா, அங்கயிங்கன்னு அலையாம அவரையே கெட்டியாப் பிடிச்சுக்கினியானா, அவனே தொணையா கூடவருவான்; அதுக்கப்புறமா, இனிமே ஒனக்குப் பொறப்புன்றதே கெடையாதுன்னு இன்னோரு உண்மையைப் புட்டுவைக்கறாரு அருணகிரியாரு!

இத்தயே, இன்னொருவிதமாச் சொல்றதானா, 'நா மேல் நடவீர்; நடவீர் இனியே'ன்னும் பிரிச்சு அர்த்தம் சொல்லலாம்.


அதாங்காட்டிக்கு, அவர் குடுத்த கல்வியயும், அறிவையும் வைச்சுக்கினு, இந்த ஒலக ஆசையையெல்லாம் ஒளிச்சு அவரையே அடையணும்னா, "முருகா, நீ வந்து எப்பவும் என்னோட நாக்குமேலியே நடமாடணும்ப்பா! அத்த விட்டு வேற எங்கியும் போவாம என்னோட நாக்குலியே குடியிருக்கணும்ப்பா!... நான் எப்பவும் ஒன்னியே பாடறதுக்குத் தோதா'ன்னு முருகங்கிட்ட வேண்டறதாவும் புரிஞ்சுக்கலாம்!

அப்பிடியாப்பட்ட அந்த முருகனோட பெருமையைச் சொல்றதுதான் அடுத்த பாட்டு. அத்த நம்ம ஐயரு சொல்வாரு!' எனச் சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்!


சாம்பு சாஸ்திரிகள் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்!
*************

வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!

9 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் Wednesday, June 08, 2011 12:19:00 PM  

மன்னாரு...என்னமா சொல்லிகீறபா! படா ஆளாகீறபா. நன்றி.

Lalitha Mittal Wednesday, June 08, 2011 12:32:00 PM  

"நா மேல் நடவீர்;நடவீர் இனியே"விளக்கம் அருமை!!

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, June 08, 2011 12:48:00 PM  

அடிக்கடி உச்சரிக்கும் அநுபூதி வரிகள்!
யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்...என்பது அடிக்கடி என் தோழனும் நானும் சொல்லும் வரிகள்! :)

விளக்கங்கள் அருமை! நன்றி SK!

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, June 08, 2011 1:04:00 PM  

"நான்" ஓதிய கல்வி,
"என்" அறிவு-ன்னு
நாம அடிக்கடி நினைச்சிக்கிட்டாலும்..

அதெல்லாம் சொந்த அறிவு அல்ல!
தந்த அறிவு! = "தந்ததினால்"
கந்த அறிவு! = "வேலவர்"

"தாமே" பெற=எப்போ ஒரு விஷயம் தானே நடக்குது-ன்னு சொல்லுறோம்? நாம அதுக்கு எதுவும் மெனக்கெடறது இல்ல! சூரியன் தானே உதிக்குது! மழை தானே பெய்யுது! அது போல் எம் அறிவும் "தானே" வந்தது! எப்படி? வேலவன் தந்ததினால் "தாமே" வந்த கந்த அறிவு!

(A U B)' = A' n B'
-ன்னு எல்லாம் மெனக் கெட்டு படிப்பதால் வரும்!
ஆனால் முருகன் மீது காதலும் பக்தியும்? எந்த புக்கைப் படிச்சி, மெனக்கெட்டதால், என் சாமர்த்தியத்தால் வந்தது? ஒன்னுமில்லை! தாமே வந்தது, அவன் தர வந்தது! அதான் "தாமே" பெற வேலவன் தந்ததினால்...

VSK Wednesday, June 08, 2011 1:18:00 PM  

அல்லாமே அன்னைக்கு ஒருநாளு நீங்க சிங்கப்பூர்ல போட்ட சாப்பாட்டோட மகிமைதாங்க குமார்! :))

VSK Wednesday, June 08, 2011 1:20:00 PM  

//"நா மேல் நடவீர்;நடவீர் இனியே"விளக்கம் அருமை!!//


அதையே நீங்க வந்து சொல்றப்ப இன்னும் அருமையா இருக்கும்மா! வணக்கம்.

VSK Wednesday, June 08, 2011 1:26:00 PM  

படிச்சு வர்றதுக்கும், தானே வருவதற்கும் மிகச் சிறப்பா சொல்லிட்டீங்க ரவி! சூப்பர்!

சொந்தமெனக் கந்தனிவன் பந்தமுடன் வந்திருக்க
சிந்தையெலாம் கந்தனிவன் எந்தனுளே நிறைந்திருக்கான்!

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, June 08, 2011 1:49:00 PM  

மையல் = தையல் மேல் பையல்களுக்கும், பையல்கள் மேல் தையல்களுக்கும் தான் வரணும்-ன்னு இல்லை! எதன் மீதும் வரலாம்! அந்த மையலை மயிலால் தீர்த்துக் கொள்ள வேணும்!

இப்படித் தாமே வந்த கந்த அறிவு தான் இருக்கே!
அந்த அறிவினால் பூ மேல் மையல் போய் அற = உலகப் பேராசைகளில் மையல் அற..
மெய் புணர்வோம் = உண்மையைக் கைக்கொள்வோம்

நாம் ஏன் நடவீர்? = எதுக்குச் சும்மா கண்டதுக்கும் மெனக்கெட்டுக்கிட்டு? நடையா நடந்துக்கிட்டு?
நடவீர் இனியே! = அவன் நடத்துவான்! நடவீர் இனியே!

VSK Wednesday, June 08, 2011 3:24:00 PM  

அந்த்க் காலத்தில் மதுரை சோமு கச்சேரி செய்யும்போது, சக கலைஞர்கள் அருமையாக் வாசிக்கும்போது, தன் பாட்டை நிறுத்திவிட்டு, 'ம்ம்ம்..அப்பிடியே..அப்பிடியே' எனச் சொல்லி அவரைத் தொடரச் செய்வார்! நீங்க இத்தனை அருமையாச் சொல்றப்ப, எனக்கும் அப்படி ஓர் உணர்வே, ரவி!

அந்த 'நாம்' மட்டும் முந்தின வரியோட சேர்ந்தா, இன்னும் சிறப்பா இருக்கும்னு நினைக்கறேன். நாம் ஏன் நடவீர் என்பது கொஞ்சம் இடறுகிறது.... எனக்கு!:))

மத்தபடி அந்த மையல், தையல், பையல், மயில்லாம் சூப்பரோ சூப்பர்!
மு.மு.!!!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP