Tuesday, January 09, 2007

"பள்ளி எழுந்தருளாயே!" - 4 [24]

"பள்ளி எழுந்தருளாயே!" - 4 [24]

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

இனிய நாதம் ஒலிக்கும் வீணையும், யாழும்
ஏந்தி இன்னிசைக்கும் கூட்டம் ஒரு புறம்;

வேத மந்திரங்களுடன் பல்வேறு
துதிப்பாடல்களை ஓதிடும் கூட்டம் ஒரு புறம்;

நெருங்கித் தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை
கையில் ஏந்தி நின்றிடும் கூட்டம் ஒரு புறம்;

அன்பு மிகக்கொண்டு அழுது கண்ணீர்விடுபவரும்
மெய்மறந்து தள்ளாடுபவரும் கூட்டம் ஒரு புறம்;

இருகை கூப்பி தலை மேல் உயர்த்தி அரகரவென
அஞ்சலி செய்திடும் கூட்டம் ஒரு புறம்;

அருள்மிகு திருப்பெருந்துறையினில்
அழகுற வீற்றிருக்கும் சிவபெருமானே!

இவ்வண்ணம் பெருமை வாய்ந்த அடியவர்
உன் திருச்சந்நிதி முன் கூடியுள்ளார்!

தகுதி சிறிதேனும் இலாத நானும்
இவர்கள் நடுவே நின்றிருக்கிறேன்!

என்னையும் ஒரு பொருட்டாக அருள் செய்து
ஆட்கொண்ட எந்தன் பெருமானே!

பள்ளி எழுந்தருள்வாயே!

['தகுதி சிறிதும் இலாத நான்' எனச் சொல்லி, அதே கையோடு, இத்தனை தகுதி வாய்ந்தவரையும் புறந்தள்ளி, எனக்காக எழுந்திரு எனக் கேட்கும் உரிமை! இவனன்றோ 'எமக்கெளியன்!']

அருஞ்சொற்பொருள்:
துன்னிய - செறிந்த; சென்னி - தலை; அஞ்சலி - வணக்கம்.

12 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் [GK] Tuesday, January 09, 2007 7:38:00 PM  

சிவபெருமான் அதிகாலை வேலை எழுந்தருள வேண்டி அவருக்காக இசையும், பாடலும், மலர்மாலகளையும் வைத்துக் கொண்டு காத்திருப்பவர்களை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்ற பாடல். படிக்கும் போது அதிகாலை வேலை சந்நிதியில் கூடவே நின்று பார்பது பொன்று உணர்கிறேன்.

எஸ்கே ஐயா ! இனிய காலையை இந்த பாடலில் விழிக்க வைத்ததற்கு

பாராட்டுக்கள் !

VSK Tuesday, January 09, 2007 8:06:00 PM  

தகுதி இல்லா பலருக்கும் நடுவே, நானும் போடுகின்ற இப்பதிவுக்குத் தவறாது வந்து,

என்னையும் ஆதரிக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன், கோவியாரே!

உங்களைப் போன்றோரின் வரவே என்னையும் ஊக்குவிக்கிறது!!

மிக்க நன்றி!

கோவி.கண்ணன் [GK] Tuesday, January 09, 2007 8:13:00 PM  

//உங்களைப் போன்றோரின் வரவே என்னையும் ஊக்குவிக்கிறது!!

மிக்க நன்றி!//

எஸ்கே ஐயா,

காலை வேலையில் உங்கள் பதிவு இல்லையென்றால் வெறுமையாக இருக்கும்... ஏமாற்றமாக இருக்கும்... இவற்றை தவிர்க்க எழுதும் உங்களுக்கும் பாராட்டுக்கள் !

வடுவூர் குமார் Tuesday, January 09, 2007 8:16:00 PM  

நானும் வந்து படித்துவிட்டு போனேன் என்று "மட்டும் " எப்படி சொல்வது?
புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

VSK Tuesday, January 09, 2007 8:44:00 PM  

நீங்க ஒருத்தராவது இப்படி சொல்றீங்களே!

நெகிழ்ச்சியாய் இருக்கிறது!

VSK Tuesday, January 09, 2007 8:45:00 PM  

நீங்க ஒருத்தராவது இப்படி சொல்றீங்களே!

நெகிழ்ச்சியாய் இருக்கிறது!

VSK Tuesday, January 09, 2007 8:45:00 PM  

நீங்க ஒருத்தராவது இப்படி சொல்றீங்களே!

நெகிழ்ச்சியாய் இருக்கிறது!

VSK Tuesday, January 09, 2007 8:50:00 PM  

புரிந்து கொள்ள "முயற்சிக்க" வேண்டாம்!

அதுவே புரியும், திரு.குமார்!

சிவனே போற்றி!

ஞானவெட்டியான் Tuesday, January 09, 2007 9:05:00 PM  

அன்பு SK,

//தகுதி இல்லா பலருக்கும் நடுவே, நானும் போடுகின்ற இப்பதிவுக்குத் தவறாது வந்து,

என்னையும் ஆதரிக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்,//

தன்னடக்கம்தான் புலனடக்கத்தின் தொடக்கம்.

அடங்கியபின் மவுனம்தான்.
வாழ்க! வளர்க!!

VSK Tuesday, January 09, 2007 9:17:00 PM  

மௌனம் விரைவில் வர அருளுக வெட்டியானே!

SP.VR. SUBBIAH Wednesday, January 10, 2007 7:31:00 AM  

//தகுதி சிறிதேனும் இலாத நானும்
இவர்கள் நடுவே நின்றிருக்கிறேன்!
என்னையும் ஒரு பொருட்டாக அருள் செய்து
ஆட்கொண்ட எந்தன் பெருமானே!//

நெகிழ வைக்கும் விளக்கம்
மிக நன்றாக உள்ளது அய்யா!

VSK Wednesday, January 10, 2007 8:25:00 AM  

//நெகிழ வைக்கும் விளக்கம்
மிக நன்றாக உள்ளது அய்யா!//


நெகிழ்ந்தாரைக் கண்டு, நெகிழ்ந்து எழுதிய, நெகிழ்ந்தவரின் பாடலுக்கே இப்பெருமையெல்லாம் போய்ச் சேரும் ஆசானே!

நெகிழ்பவரான நீங்கள் நெகிழ்ந்ததில் வியப்பென்ன !

நெகிழச் செய்பவனே போற்றி!

மிக்க நன்றி!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP