Monday, September 04, 2006

உன்னால் முடியுமா?

"உன்னால் முடியுமா?"


திரு. ஸ்ரீதரன் அவர்கள் ஒரு விளையாட்டை, விளையாட்டாய் ஆரம்பிக்க, நானும் அதில் உள்ளே புகுந்து மற்றவர்கள் வந்து கை கொடுப்பார்கள் என எண்ணித் தொடர, யாரும் வராததால், வேறு வழியின்றி, முழு ஆட்டத்தையும் நான் ஒருவனே ஆடி முடிக்கும் பேறு பெற்றேன்!

அதற்காக ஸ்ரீதரனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்!

இது திருக்குறளின் 133 அதிகாரங்களையும் தெரிந்து, மனனம் செய்து, தெரிந்தவருடன் ஆடக் கூடிய ஒரு விளையாட்டு!

இதனைக் கற்க உங்களுக்குப் பொழுதில்லாவிடினும், உங்கள் குழந்தைகளுக்கு இதைக் கற்றுக் கொடுங்கள்!

நினைவாற்றல் அதிகம் உள்ள அவர்கள் இதனைச் சீக்கிரமே மனனம் செய்து விடுவார்கள்!

தமிழுக்கும், வள்ளுவனுக்கும், உங்கள் குடும்பத்தில் தமிழ் வளர்ப்பதற்கும் நீங்கள் ஆற்றிய தொண்டாக இது இருக்கும்.

இதனைக் காணும், மனம் படைத்த சக வலைப் பதிவாளர்கள், சிரமம் கருதாது, தங்கள் வலைப் பூவில் இதையும் ஒரு பதிவாக ஏற்றி, அவர்களுக்கு வரும் நண்பர்கள் நடுவில் இதைப் பரப்ப உதவினால், மிகவும் மனமகிழ்வேன்!

கட்டாயமில்லை.

நன்றி!
***********************************************************

ஆட்டத்தின் 14 - ஆம் ஓவரை வீச பந்து வீச்சாளர் தயாராகிக் கொண்டிருக்கிறார்!

இதோ முதல் பந்து!

சற்று அளவு குறைந்த பந்து!131. புலவி

இதையும் அடிக்க ஆளில்லை!

அடுத்த பந்து! சற்றே வேகமான பந்து!132. புலவி நுணுக்கம்.

ம்ஹூம்! இதுவும் அப்படியே!

அடுத்த பந்து!133. ஊடலுவகை.

சுழல் பந்தான இது விக்கெட்டின் மேல் படுகிறது!
விக்கெட் கீழே விழுகிறது!
மகிழ்ச்சியால் 'ஹௌஈஸ்ஸட்' எனக் கூவுகிறார் பந்து வீச்சாளர்!
ஆனால், .... அம்பையர் இருந்தால் தானே அவுட் கொடுப்பதற்கு!

மறுபடியும் பந்து வீசத் தயாராகும்போது....

ஆ! இதென்ன! ஆட்டம் முடிந்து விட்டதாக ஒரு அறிவிப்பு!

பந்தையும், வீழ்த்திய விக்கெட்டையும் கையில் எடுத்துக் கொண்டு, தனி ஆளாக வீரநடை போட்டு பெவிலியன் நோக்கித் திரும்பி நடக்கிறார் பந்து வீச்சாளர்!

இவ்வாட்டத்தை இதுவரை திறம்பட நடத்திய ஸ்ரீதரனுக்கும், கடைசி பார்வையாளராக வந்த கொத்தனாருக்கும் நன்றி!

இந்த வரலாற்றுப் புகழ் படைத்த ஆட்டத்தை இதுவரை காணாத அனைவருக்கும் இதோ ஆட்டத்தின் ஒரு குறுகிய 'ரீ-ப்ளே!

'1. கடவுள்வாழ்த்து, 2.வான் சிறப்பு, 3. நீத்தார் பெருமை, 4.அறன் வலியுறுத்தல், 5. இல்வாழ்க்கை, 6. வாழ்க்கைத் துணைநலம், 7. மக்கட்பேறு, 8. அன்புடைமை, 9. விருந்தோம்பல், 10. இனியவை கூறல்

11. செய்ந்நன்றி அறிதல், 12. நடுவு நிலைமை, 13. அடக்கமுடைமை, 14. ஒழுக்கமுடைமை, 15. பிறனில் விழையாமை, 16. பொறையுடைமை, 17. அழுக்காறாமை, 18. வெஃகாமை 19. புறங்கூறாமை, 20. பயனில சொல்லாமை

21. தீவினையச்சம், 22. ஒப்புரவறிதல், 23. ஈகை, 24. புகழ், 25. அருளுடைமை, 26. புலால் மறுத்தல், 27. தவம், 28. கூடா ஒழுக்கம், 29. கள்ளாமை, 30. வாய்மை.

31. வெகுளாமை, 32. இன்னா செய்யாமை, 33. கொல்லாமை, 34. நிலையாமை, 35. துறவு, 36. மெய்யுணர்தல், 37. அவா அறுத்தல், 38. ஊழ், [இதுவரை சொன்னது 'அறத்துப்பால். இனி வருவது, "பொருட்பால்".] 39. இறைமாட்சி, 40. கல்வி.

41.கல்லாமை, 42. கேள்வி, 43. அறிவுடைமை, 44. குற்றங்கடிதல், 45. பெரியாரைத் துணைக்கோடல், 46. சிற்றினம் சேராமை, 47. தெரிந்து செயல்வகை, 48. வலியறிதல், 49. காலம் அறிதல், 50. இடன் அறிதல்.

51. தெரிந்து தெளிதல், 52. தெரிந்து வினையாடல், 53. சுற்றந் தழால், 54. பொச்சாவாமை, 55. செங்கோன்மை, 56. கொடுங்கோன்மை, 57. வெருவந்த செய்யாமை, 58. கண்ணோட்டம், 59.ஒற்றாடல், 60. ஊக்கம் உடைமை.

61. மடி இன்மை, 62. ஆள்வினை உடைமை, 63. இடுக்கண் அழியாமை, 64. அமைச்சு, 65. சொல்வன்மை, 66. வினைத்தூய்மை, 67. வினைத்திட்பம், 68. வினை செயல்வகை 69. தூது, 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்.

71. குறிப்பறிதல், 72. அவை அறிதல், 73. அவை அஞ்சாமை, 74. நாடு, 75. அரண், 76. பொருள் செயல்வகை, 77. படை மாட்சி, 78. படைச் செருக்கு, 79. நட்பு. 80. நட்பாராய்தல்.

81. பழைமை, 82. தீ நட்பு, 83. கூடா நட்பு, 84. பேதைமை, 85. புல்லறிவாண்மை, 86. இகல், 87. பகை மாட்சி, 88. பகைத் திறந்தெரிதல், 89. உட்பகை, 90. பெரியாரைப் பிழையாமை.

91. பெண்வழிச் சேறல், 92. வரைவின் மகளிர், 93. கள்ளுண்ணாமை, 94. சூது, 95. மருந்து, 96. குடிமை, 97. மானம், 98. பெருமை, 99. சான்றாண்மை, 100. பண்புடைமை.

101. நன்றியில் செல்வம், 102. நாணுடைமை, 103. குடிசெயல் வகை, 104. உழவு, 105. நல்குரவு, 106. இரவு, 107. இரவச்சம், 108. கயமை,இனி, "இன்பத்துப்பால்" முனையில் இருந்து மீதி பந்துகள் வீசப்படும்!109. தகையணங்குறுதல், 110. குறிப்பறிதல்.

111. புணர்ச்சி மகிழ்தல், 112. நலம் புனைந்துரைத்தல், 113. காதற் சிறப்புரைத்தல், 114. நாணுந் துறவுரைத்தல், 115. அலர் அறிவுறுத்தல், 116. பிரிவாற்றாமை, 117. படர் மெலிந் திரங்கல், 118. கண் விதுப்பழிதல், 119. பசப்புறு பருவரல், 120. தனிப்படர் மிகுதி.

121. நினந்தவர் புலம்பல், 122. கனவு நிலை உரைத்தல், 123. பொழுது கண்டு இரங்கல், 124. உறுப்புநலன் அழிதல் [இதைப் பிரித்து உறுப்பு நலன் அழிதல் என்று போட்டால், அர்த்தம் அனர்த்தமாகி விடும்! ஐயன் வாழ்க!] 125. நெஞ்சொடு கிளைத்தல், 126. நிறையழிதல், 127. அவர்வயின் விதும்பல், 128. குறிப்பறிவுறுத்தல், 129. புணர்ச்சி விதும்பல், 130. நெஞ்சொடு புலத்தல்.

131. புலவி, 132. புலவி நுணுக்கம், 133. ஊடலுவகை.

****இந்த ஆட்டத்தால் என்ன பயன் எனக் கேட்பவருக்கு ஒரு வார்த்தை!

உங்களால் முடியாவிட்டாலும், உங்கள் குழந்தைகளுக்கு, வாரம் ஒரு பத்து என்ற கணக்கில் சொல்லிக் கொடுங்கள்!

உங்களை விட நினைவாற்றல் அதிகம் உள்ள வயதானதால் சீக்கிரம் பிடித்துக் கொள்வார்கள்!

இன்றில்லாவிடினும் நாளை நிச்சயம் உங்களைப் போற்றுவார்கள் இதற்காக!

தமிழுக்கும், வள்ளுவனுக்கும் நீங்கள் செய்யும் சிறு தொண்டாக இது இருந்து விட்டுப் போகட்டும்!

நன்றி!****

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP