Thursday, June 08, 2006

"அனுபவி ராசா அனுபவி!"

"அனுபவி ராசா அனுபவி!"

ஒரு தத்துவவாதியின் உளறல்கள்!!

கே: இந்த இருதய சம்பந்தமான பயிற்சிகள் வாழ்நாளை அதிகரிக்க உதவும் என்கிறார்களே? உண்மையா?

ப: இப்ப, ஒவ்வொருத்தரோட இதயத்துக்கும், இவ்வளவு துடிப்புதான்னு ஒரு கணக்கு பண்ணி இருக்குது! அவ்ளோதான்! சும்மனாச்சிக்கும், பயிற்சி, அது. இதுன்னு டைமை வேஸ்டு பண்ணாதே! அல்லாம் ஒரு நாளைக்குத் தேஞ்சுதான் பூடும்!
வெரசபடுத்தறேன்னு எக்ஸைஸ் பண்றது ஒண்ணும் வேலைக்கு ஆவாது!
இது எப்ப்டி இருக்குன்னா, என்னோட காரோட லைஃபை, வேகமா ஓட்றதால, ஜாஸ்தி பண்றேங்கற மாதிரித்தான்!

நெறைய நாளு உசுரோட இருக்கணுமா.... போய் நல்லாத் தூங்கு!

கே: இந்தக் கவிச்சிய வுட்டுட்டு, நெறய பழம், காய்கறில்லாம் சாப்பிடலாமா?

ப: நீ கொஞ்சம் நெதானமா யோசிக்கக் கத்துக்கணும்! இப்ப, ஒரு மாடு இன்னா சாப்டுது? புல்லும், தவிடும் , வைக்கோலும்! இதெல்லாம் இன்னா? காய்கறி! அப்ப்டீன்னா, மாட்டுக்கறின்றது, இந்தக் காய்கறிங்களை ஒரு ஸ்பெஷலான மொறையில, ஒன் ஒடம்புக்குள்ளே அனுப்பற ஒரு வித்தை. அவ்ளோதான்!

காய்கறி வேணாம்; தானியம்தான் வேணுமா? கோழிக்கறி சாப்பிடு!

கே: இந்தத் 'தண்ணீ' எல்லாம் கொறைக்கணும்னு சொல்றாங்களே.....?

ப: கூடவே கூடாது! ஒயினு பளத்துலேர்ந்து தயாராவுது! ப்ராந்தி, ஒயினை வடிகட்டி வர்றது! அதாவது, ஒயின்ல இருக்கற தண்ணியைக் கூட எடுத்துட்டு சுத்தமாக் கொடுக்கறாங்க! பியர் கூட என்ன? பார்லிலேந்து பண்றது!

குடி மகனே... குடி!

கே: என்னோட ஒடம்பு/கொளுப்பு விகிதத்தை எப்படி கணக்கு போடறது?

ப: நல்லா கவனி! ஒடம்புன்னு ஒண்ணு இருந்தா, கொயுப்புன்னு ஒண்ணு இருந்தே தீரும்! அப்போ, ஒன்னொட விகிதம் ஒண்ணுக்கு ஒண்ணு! .....சரியா! ரெண்டு ஒடம்பா இருந்தா, ரெண்டுக்கு ஒண்ணு!

புரிஞ்சுக்கினியா?!!

கே: எண்ணையில பொரிச்சது ஒடம்புக்குக் கெடுதல்னு சொல்றாங்களே... அதப்பத்தி உங்க கருத்து?

ப: இவ்ளோ நேரம் நான் சொன்னதை நீ கேட்டுக்கினு இருந்தியா, இல்லை எங்கியாவது தூங்கப் பூட்டியா? எதுல பொரிக்கிறாங்க அல்லாத்தையும்? வெஜிடபிள் ஆயில்லதானே? இன்னும் கொஞ்சம் வெஜிடபிள் சேந்தா நீ கொறஞ்சா பூடுவே?

கே: நீச்சல் பளகினா, ஒடம்பு வாகா இருக்கும்னு சொல்றங்களே...?

ப: நீச்சல்னாலே ஒடம்பு வாகாயிடும்னா, போயி திமிங்கலத்தை பாரு! அப்பால வந்து சொல்லு, நீச்சல் நல்லதா, கெட்டதான்னு! வேலயப் பாத்துக்கினு போவியா!

வந்துட்டான்... பெருசா!

நல்லா நெனப்புல வெச்சுக்கொ!
இந்த ஒடம்பு ஒரு நா கல்லறைக்குப் போகப்போவுது! அப்டி போறச்சே, நல்லா கட்டுமஸ்தா கொண்டுபோயி இன்னா லாபம்? நல்லா அனுபவி, இந்த பாடியை நல்லா யூஸ் பண்ணு! போகும்போது, 'ஐய்ய்ய்யா... இன்னா சொகமா இருந்துச்சுப்பா'ன்னு செம சவுண்டு வுட்டுக்கினு போய்ச் சேரு!

நா வர்ட்டா!

அப்பால, எதுனாச்சும் டவுட்டு இருந்தா வந்து கேளு!

சரியா!!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP