Sunday, October 12, 2008

"அன்னைக்கு ஒரு கடிதம்"

"அன்னைக்கு ஒரு கடிதம்"
மதிப்பிற்குரிய சோனியா அன்னையாருக்கு,

வணக்கம்.

இந்தியாவின் முடிசூடா மஹாராணியாக தற்போது இருப்பவர் நீங்கள்.

தன் நாட்டை விட்டு எங்கள் மண்ணுக்கு மருமகளாக வந்து, இப்போது அனைவராலும் 'அன்னை' எனப் போற்றப்படும் அளவுக்கு உயர்ந்தது உங்கள் பெருமை.

இந்த நாட்டுக்காக நீங்கள் இழந்தது கொஞ்சம் அதிகமே!

சொந்தக் கணவனையே இந்நாட்டுக்காகப் பறி கொடுத்த உங்கள் சோகமும், அதனைத் தொடர்ந்து, நேரு குடும்ப வாரிசுகளை உருவாக்க நீங்கள் செய்த தியாகமும் எப்போதும் எங்கள் நன்றியை உங்கள் பால் காட்டி, உங்களை 'அன்னை' எனவே மதிக்கும் அளவுக்கு வந்திருப்பவர் நீங்கள்.

பொருளாதாரம், பாதுகாப்பு, அடுத்த தேர்தல் என பல விஷயங்கள் உங்கள் கவனத்தில் தற்போது இருப்பினும், ஒரு வேண்டுகோளை உங்கள் முன் கொண்டுவரவே இக்கடிதம் எழுதத் துணிந்தேன்.

இலங்கையில் தமிழர்கள் படும் அல்லல்!

சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்படும் அவலம்!

இருக்க இடம் இல்லாது, அப்பாவி மக்கள் படும் துயரம் உங்கள் பார்வைக்கும் வராமல் போயிருக்க வாய்ப்பில்லை.

இது ஏதோ ஒரு தனிப்பட்ட இயக்கத்துக்கு, அதன் சில தவறுகளால் நிகழ்ந்த , நிகழ்கிற சம்பவம் என அலட்சியப் படுத்தாதீர்கள்.

உங்களுக்கு இதில் தனிப்பட்ட முறையிலும் பாதிப்பு இருப்பதையும் உணர்வேன்.

அதை மனதில் கொள்ளாமல், ஒட்டுமொத்த தமிழினமே அங்கு அழிக்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்து, உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, நிலைமையை ஒரு சீருக்குக் கொண்டுவர முன்வாருங்கள்.

சொந்த நாட்டிலேயே மூன்றாந்தர அகதிகள் போல் நடத்தப்படும் தமிழ் மக்களின் அவலத்தைப் போக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் நினைத்தால் இது முடியும்.

விரும்பினால், தமிழீழமே கூடப் பெற்றுத் தரமுடியும்.

இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரம் என இதனைத் தள்ளிவிட வேண்டாம்.

பங்களா தேஷில் அன்று இந்தியா எடுத்த பொறுப்பான செயலைத் தங்கள் கவனத்துக்கு இப்போது கொண்டுவர விரும்புகிறேன்.

இதைச் செய்தால் பல கோடி தமிழ் மக்கள் தங்களை நன்றியுடன் நினைவு கூருவார்கள்.

'இன்னா செய்தரை ஒறுத்தல்' எனும் வள்ளுவனின் மொழிக்கு உருக் கொடுத்த பெருமை வரலாற்றில் உங்களை வந்து சேரும்!

செய்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி. வணக்கம்.
****************************
[நாளை.... 'கேப்டனுக்கு ஒரு கடிதம்']

Read more...

Saturday, October 11, 2008

"அம்மாவுக்கு ஒரு கடிதம்"

"அம்மாவுக்கு ஒரு கடிதம்"


அன்புள்ள ஜெயலலிதா அம்மா!

தமிழகத்தின் முதலமைச்சராக இருமுறை இருந்தவர் நீங்கள்!

இப்போதும் ஒரு வலுவான எதிர்க் கட்சியாக இருப்பவரும் நீங்கள்!

தமிழகத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் உங்கள் கருத்தைத் தமிழகம் ஆவலுடன் எதிபார்க்கிறது.

உங்களுக்கும், கலைஞருக்கும் இருக்கும் பகைமை உணர்வு அனைவரும் அறிந்ததே!

அவர் எடுக்கும் அனைத்தையுமே எதிர்ப்பதுதான் ஒரு எதிர்க் கட்சித் தலைமையின் அழகு என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.

ஆனால், இப்போது நிகழ்வது அதுவல்ல!

ஈழம் பற்றி எரிகிறது அம்மா!

கண்ணில் கண்ட தமிழரெல்லாம் புலிகள் எனச் சுட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப் படுகின்றார்கள்!

பெண்கள் மானபங்கப் படுத்தப் படுகிறார்கள்.

சிறு குழந்தைகள் அழிக்கப் படுகின்றார்கள்.

எங்கேயோ ஒரு அயல்நாட்டில் இருக்கும் எனக்குத் தெரிந்த இந்தச் செய்திகள் உங்களுக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை.

இப்போது கலைஞர்... தமிழக முதல்வர் ....... ஒரு சர்வ கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அழைப்பு விடுத்திருக்கிறார்.

இதைக் கூட்டாமலேயே, மத்திய அரசில் தன் பலத்தைக் காட்டியே அவர் ஒரு தீர்வு கண்டிருக்கலாம் என்னும் உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.

ஆனால், இது ஒன்றைக் காரணம் காட்டி. இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் உங்கள் முடிவை முழுதுமாக எதிர்க்கிறேன்.

நீயா நானா எனப் பலப்பரிட்சை செய்யும் நேரம் இது அல்ல!

ஒட்டு மொத்தமாக ஒரு இனம் முறையாக அழிக்கப் படுகிறது உங்கள் கண்ணில் படவில்லையா!

கலைஞர் உங்கள் எதிரி!

தெரியும் எனக்கு!

ஆனால், அவர் தான் இப்போது தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் ஒரு முதல்வர்!

அவர் விடுக்கும் அழைப்பைப் புறக்கணிப்பதின் மூலம் ஒரு பெரும் தவறு செய்கிறீர்கள் நீங்கள்!

நம் தமிழர் படும் அவலத்தை உணர்ந்து, உடனடியாக உங்கள் முடிவை மாற்றி, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, நீங்களும் ஒரு தமிழர் தான் என நிரூபியுங்கள்!

தமிழர் நலனைக் காப்பதுதான் என் தலைமை என தரணிக்குச் சொல்லுங்கள்!

வரலாறு உங்களைப் பேசும்!

******************

நாளை "அன்னை"க்குஒரு கடிதம்!

Read more...

Friday, October 10, 2008

"கலைஞருக்கு ஒரு கடிதம்"

"கலைஞருக்கு ஒரு கடிதம்"



அன்புள்ள ஐயா!
தமிழர் தலைவர் எனச் சொல்லிக் கொள்ள உங்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது என்பதை உறுதியாய் நம்புபவன் என்கிற முறையில் இந்த மடலை வரைகிறேன்.

தமிழுக்கும், தமிழருக்கு பல நல்ல செயல்களைச் செய்யும் மனமும் உங்களுக்கு இன்னமும் இருப்பதை நான் உணர்கிறேன்.

ஆனால், தமிழர் என்பவர் தமிழகம் தாண்டியும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்துபோய் விட்டீர்களோ என் ஒரு சந்தேகம்.

ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுகிறர்கள் ஐயா!

உங்களுக்கும் தெரியும்தானே!?

கண்ணில் பட்ட எல்லாரும் குண்டுக்கு இரை ஆகிறார்கள்.

சாகாமல் பிழைத்தவர் அல்லல் படுகிறார்கள்.

ஒரு சாதாரண தமிழனான எனக்கு, அதுவும் ஒரு அயல்நாட்டில் இருக்கும் எனக்கே தெரியும்போது, உங்களுக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை.

என்ன செய்யப் போகிறீர்கள்?

ஆட்சியில் இருக்கிறீர்கள்.

அதுவும் தமிழக முதல்வராக!

அது மட்டுமல்ல!

40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, மத்திய அரசையே நடுங்க வைக்கும் பலம் கொண்டவராகவும் இருக்கிறீர்காள்.

ஒரு சில துறைகள் தங்கள் கட்சிக்குக் கிடைக்க வேண்டும் என அரசை வற்புறுத்தி, அதையும் பெற்றவர் நீங்கள்!

இவ்வளவு வலுவான நிலையில் இருக்கும் நீங்கள் இப்போது செய்யும் நிகழ்வுகள் உங்களது தலைமையையே சந்தேகப் பட வைக்கிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

குறைந்த பட்சமாக, பாதிக்கப்பட்டு அல்லல் படும் மக்களுக்கு, நம் தமிழருக்கு, அடிப்படை நிவாரண உதவி கிடைக்கக் கூட நீங்கள் செய்யக் குரல் கொடுக்காமல்,
அனைத்துக் கட்சிக் கூட்டம் அது இது என நேரம் கடத்துவது கலக்கம் அளிக்கிறது.

இப்போது உடனடித் தேவை, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவி.

1987-ல் எம்ஜியார் செய்தார்!....செயலிழந்த

நிலையிலும்!!

கப்பல் மறிக்கப்பட்ட நிலையிலும், விமானம் மூலம் இந்திய அரசு உதவி அளிக்க முன்னின்றார்.

அதைச் செய்யுங்கள் இப்போது!

தமிழீழம் கிடைப்பது கடவுள் விட்ட வழி!

அது நிச்சயம் கிடைக்கும்!

ஆனால், அதைக் காண மக்கள் இருக்க வேண்டும்!

நம் தமிழர் உயிரோடு இருக்க வேண்டும்.

தமிழர் தலைவர் எனச் சொல்லிக் கொள்ளும் நீங்கள் இப்போது செய்ய வேண்டியது....

அனைத்துக் கட்சிக் கூட்டம் அல்ல!
உங்கள் பலத்தைப் பயன்படுத்தி, வருந்தும் தமிழருக்கு நிவாரணம் அளிக்க வேண்டியது மட்டுமே!

பதவியில் இல்லாத போது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறப்பது அல்ல!
முதல்வர் பதவியை விட்டு விலக அறிக்கை அளிப்பதே, மத்திய அரசைக் கலங்க வைக்கும்!

செய்வீர்களா!

வருந்தும் நம் ஈழத் தமிழரை வாழ வைப்பிர்களா?

செய்வீர்கள் என நம்புகிறேன்!

நன்றி!
வணக்கம்!

Read more...

Tuesday, October 07, 2008

"இது ஒரு மனிதநேய ஓலம்!"

"இது ஒரு மனிதநேய ஓலம்!"


"நிறுத்துக!"



இலங்கை அரசே.....,
கண்மூடித்தனமாய்க் கொலைகள் செய்வதை....
எண்ணிக்கை பாராமல் இனத்தை அழிப்பதை.....
மண்கேட்ட மனிதரை மண்ணுக்கே அனுப்புவதை.....
புண்பட்ட மக்களைப் பலிகடா ஆக்குவதை.....
கண்ணில் பட்ட எவரையும் புலி எனச் சுடுவதை.....
அப்பாவி மக்களை அடியோடு அழிப்பதை.....
பெற்றவர் கண்ணெதிரே தமிழ்மானம் பறிப்பதை.....
கதறக் கதறக் கழுத்தை அறுப்பதை.....
அமைதிவழி காணாமல் அடக்குமுறையை அவிழ்த்துவிடுவதை....
அன்புவழி புத்தன் பெயரால் அக்கிரமங்கள் செய்வதை....!


விடுதலைப் புலிகளே....,
அன்புவழி நிச்சயம் வெல்லும் ஓர்நாள்
என்பதை இன்னமும் நம்ப மறுப்பதை....


அறவழி விடுத்து மறவழி தொடரும்

ஒருநிலை வெல்லும் என நம்புவதை......


இந்திய அரசே...........,
அண்டையில் ஓர் இனப்படுகொலை நிகழ்கையில்
அக்கறையின்றி வாளாவிருப்பதை....
சொந்தத் தமிழர் செத்து மடிகையில்
ஏதும் செய்யாமல் சும்மா இருப்பதை
அநீதிகள் சிலபல முன்பு நிகழ்ந்தபோதிலும்
அதை மனதில் கொண்டு இப்போது வேடிக்கைபார்ப்பதை....
அகதிகளாய் வருபவரின் நிலைகண்டும்
அக்கடா என ஒதுங்கி நிற்பதை.....
வல்லரசாய் இருந்து கொண்டும் ஒரு
நல்லரசாய்ச் செயல்படச் சுணங்குவதை....!

விரைவில் நம் ஈழத்தமிழருக்கு ஒரு நல்ல விடிவு வர எல்லாம் வல்ல முருகனை வேண்டுகிறேன்.

இது ஒரு மனிதநேய ஓலம்!

Read more...

Saturday, October 04, 2008

"விநாயகர் அகவல்" -- 16

"விநாயகர் அகவல்" -- 16



நான் வணங்கும் பெரியவர் மேலும் சொல்கிறார்!

///...சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே! ///

சொல் ப‌த‌ம் = சொல்லும், பொருளும்
சொல் ப‌த‌ம் = நாத‌ம் (ச‌த்த‌ம்) , ஒளி
சொல் ப‌த‌ம் = ஒலி, பாட்டில் ஒரு வ‌கை
சொல் ப‌த‌ம் = ம‌ந்திர‌ம், காலம்
சொல் பதம் = பிரணவம், திருவடி

சொல்லாலும் பொருளாலும் உண‌ர்த்த‌ முடியா இட‌ம். கார‌ண‌ம் இதை அறியும்போது ம‌ன‌ம் இருப்ப‌தில்லை. அந்த‌ நிலையைப் ப‌ற்றிய‌ உண‌ர்வு, அந்த‌ நிலையில் அனுப‌வித்த‌ உண‌ர்வு எங்கே எதில் ப‌திந்த‌து என்று சொல்வ‌த‌ற்கில்லை. அந்த‌ நிலையில் இருந்து கீழே இற‌ங்கி வ‌ரும்போது மீண்டும் சித்த‌ம் செயல்ப‌ட‌ ஆர‌ம்பிக்கிற‌து; பின் அஹ‌ங்கார‌ம் இணைகிற‌து. அத‌ன்பின் ம‌ன‌மும்,புத்தியும் செய‌ல்ப‌டுகின்ற‌ன‌. ஆக‌ அறிந்த‌வ‌னே இதை எப்ப‌டி விள‌க்குவ‌து, இத‌ற்கேற்ற‌ சொல் ஏதுமில்லையே என‌ ம‌ய‌ங்குகிறான்; திகைக்கிறான்.


சொல் என்ற‌ சொல்லிற்கு நாத‌ம் (ச‌த்த‌ம்) எனும் பொருளும் உண்டு. ப‌த‌த்திற்கு ஒளி என்ற‌ பொருள் உண்டு. ஆக‌ சொற்ப‌த‌ம் க‌ட‌ந்த‌ என்றால் நாத‌ம், விந்து(கலை) க‌ட‌ந்த‌ இட‌ம் என்று பொருள். விந்து என்றால் ஒளி. நாத‌த்தை கட‌ந்து நின்ற‌ இட‌ம் நாதாந்த‌ம். விந்து க‌லை என‌ப்ப‌டும் விந்தை க‌ட‌ந்த‌ இட‌ம் க‌லாந்த‌ம். நாத‌ விந்து க‌லாதீ ந‌மோ ந‌ம‌ என்னும் பாட‌லும் இவ்விட‌த்தையே குறிக்கிற‌து.
யோகிய‌ர் புருவ‌ம‌த்தியில் பிராணனும், சக்தியும் போய் சேரும்போது நாத‌த்தையும், ஓளியையும் அனுப‌விக்கின்ற‌ன‌ர்.

அத‌ற்கு மேல் போகும்போது ஓளி ம‌றைகிற‌து. ஒளியின் எல்லை நிலம் அது. அந்த‌ இட‌மே க‌லாந்த‌ம் என‌ப்படும் ஒளிப்பாழ்! அத‌ற்கும் மேலே போகும்போது ஒலியின் எல்லை வ‌ருகிற‌து. அதுவே வெளிப்பாழ் என‌ப்ப‌டும் நாதாந்த‌ம்.
அத‌ற்கும் மேலே உண‌ர்வோடு பிராண‌னும்,அம்மையான குண்ட‌லினியும் போகும் போது துரிய‌ நிலை கைக்கூடுகிற‌து.
துரிய‌ நிலை அடைந்த‌வ‌னுக்கு சில‌ அடையாள‌ங்க‌ள் இருக்கும். இய‌ல்பில் குழ‌ந்தை போலவோ, பித்த‌ன் போலவோ, ஜ‌ட‌ம் போலவோ இருப்பான். இந்த‌ மூன்று இய‌ல்புமே காண‌ ம‌ன‌திற்கு இத‌மாக‌ இருக்கும். ம‌ன‌திற்கு எரிச்ச‌ல் மூட்டுவ‌தாக‌ இருக்காது.

சொல் என்றால் ஒலி; ப‌த‌ம் என்றால் அந்த‌ ஒலிக‌ளின் வ‌கை. ஒலியும் ஒலியின் ப‌லவித‌ வ‌கைக‌ளான‌ சின்சின், சின், ம‌த்த‌ள‌ம், க‌ண்டாம‌ணி, வ‌ண்டு, வீணை,புல்லாங்குழ‌ல், ச‌ங்கு, அலையோசை, இடி என‌ப்ப‌டும் த‌ச‌வித‌ நாத‌ங்க‌ளும் முடிவ‌டையும் இட‌ம் அது. சுழுமுனை வ‌ழியே பிராண‌னும், ச‌க்தியும் மேலெழுவ‌தால் இத்த‌கு இசைவ‌கைக‌ள் எழும். இந்த‌ இசை ஒவ்வொன்றையும் உன்ன‌ உன்ன‌, ஒவ்வொரு த‌ளைக‌ளாக‌ அறும். ஜீவ‌ன் சிவ‌த்த‌ன்மையை ப‌டிப்ப‌டியாக‌ப் பெறுகிறான். அத்த‌கைய‌ இந்த‌ ஒலியும்,ஒலியின் வ‌கைக‌ளும் முடிவ‌டையும்போது துரிய‌ நிலை கைக்கூடுகிற‌து. அப்போது தான் உண்மையில் யார் என்ற‌ விஷ‌ய‌ம் அவ‌னுக்கு பிடிப‌டுகிற‌து!

சொல் எனப்ப‌டுவ‌து ம‌ந்திர‌ம்; ம‌ந்திர‌ம் என்றால் சூரிய‌ன். ஆக‌ நாத‌மும் விந்தும் ஒன்றாக‌ க‌ல‌க்கும் போது அது ம‌ந்திர‌மாகிற‌து. அதாவ‌து ஒலியும் ஒளியும் ஒன்றாக‌ ஆகும்போது இந்த‌ நிலை ஏற்ப‌டுகிற‌து. ஆக‌ ஒலி ஒளி க‌ல‌ந்த நிலைக்கு ஒளிவெளி பாழ் என்று சொல்லப்படும்.

பதம் என்ற சொல்லுக்கு காலம் என்ற பொருளும் உண்டு. கால‌த்தை க‌ட‌ந்த‌வ‌ளாக‌ அன்னை குண்டலினி அங்கே சென்று மாறும் போது காலினீ என்னும் த‌ன்மை கொண்ட‌வ‌ளாகிறாள். இப்ப‌டி ஒளிவெளிப்பாழையும், கால‌த்தையும் கட‌ந்த‌ இட‌ம் துரிய‌ம் என‌ப்ப‌டும் அந்த‌ இட‌ம். இட‌ம், நிலை என்ப‌த‌ற்கு அவ‌ஸ்தை எனும் சமஸ்க்ருத சொல்லால் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. அங்கு ஒன்றை ஒருவ‌ன் ஒளியாலோ ஒலியாலோ ஜீவ‌ அறிவாலோ உண‌ராம‌ல், உண‌ர்வு எனும் நிலையில் அனைத்தையும் உண‌ர்கிறான்.

சொல் என்ப‌து பிர‌ண‌வ‌ம் எனும் பொருள்ப‌டும்; ப‌த‌ம் என்றால் திருவ‌டி எனும் பொருளும் உண்டு. பிர‌ண‌வ‌த்தின் முடிவும், திருவ‌டியைக் க‌ட‌ந்துமான‌ அந்த‌ இட‌ம் துரிய‌ம் என‌ப்ப‌டும். அத‌னால் திருவ‌டி மீது அன்புக் கொண்ட‌ அன்ப‌ர்க‌ள் துரிய‌த்தின் எல்லையிலேயே இருப்ப‌து உண்டு. திருவ‌டி என்னும் இடம் தூலத்தில் ம‌ண்டையின் உச்சி! ஆனால் நுண் உட‌ல், கார‌ண உட‌லை க‌ட‌ந்தே உண்மையில் திருவ‌டி அறிய‌ப்ப‌டுகிற‌து. அங்கிருந்தே இறைவ‌ன‌து வ‌ழிக்காட்ட‌ல் கிட்டுகிற‌து. பிராண‌னும், குண்ட‌லினியும் பிரிக்க‌முடியாத‌ப்ப‌டிக்கு க‌ல‌ந்து அவ்விட‌த்தை அடையும் போது துரிய‌த்தின் எல்லை நில‌த்தை அடைகின்ற‌ன‌ர். திருவ‌டியில் க‌ல‌ப்ப‌வ‌ர் துரிய‌ நிலையை அடைகின்ற‌ன‌ர். அதாவ‌து ஜீவ‌ உண‌ர்வு அடியோடு ம‌றைந்து சிவ‌ உண‌ர்வாகி விடும். அந்நிலையை அடைந்த‌வ‌ர் அத‌ன்பிற‌கு த‌ன்னிச்சையால் ஏதும் செய்யார். கார‌ண‌ம் அவ‌ரும் இல்லை அவ‌ர‌து இச்சை என்று ஒன்றும் இருப்ப‌தில்லை. அந்நிலை அடைந்த‌வ‌ரையே பெரியோர், அடியார் என்கிறோம்.

அவ‌ர் வ‌ழி செய்ய‌ப்ப‌டும் செய‌ல் யாவும் ஈச‌ன் செயலாக‌ ஆகும். இவ‌ரே அவ‌ன‌ருளால் அவ‌ன்தாள் வ‌ண‌ங்கி எனும் நிலையை அடைந்த‌வ‌ர். இவ‌ரே அவ‌னே அனைத்து செய‌லிற்கும் கார‌ண‌ம் என்ற‌ நிலையை அடைந்த‌வ‌ர். இவ‌ரே த‌ன் செய‌லினால் ஏற்ப‌டும் வினைப்ப‌லனினால் பாதிக்க‌ப்ப‌டாத‌வ‌ர். ஆக‌வே இவ‌ர்க‌ளையே ம‌ஹாத்மாக்க‌ள், பெரியோர், குரு, அடியார் என்று சொல்லி வ‌ண‌ங்குவ‌து வ‌ந்த‌து. இவ‌ர்க‌ளை வ‌ண‌ங்குவ‌து ஈச‌னையே வ‌ண‌ங்குவ‌தாகும். இங்கே உள்ளே ஈச‌ன‌ன்றி வேறொருவ‌ர‌து இச்சையோ, செயலோ, இருப்போ இல்லாத‌தால் இத்த‌கைய‌ பெரியோர‌து உட‌ல் இறைவ‌ன் உறையும் ஆல‌ய‌மாகிற‌து. அத‌னால்தான் இத்த‌கையை பெரியோர‌து பூத‌வுட‌ல் மீது ச‌மாதி அமைத்து கோவிலாக்குவ‌து அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌து.

துரிய‌ம் என்றால் என்ன‌? அந்த‌ பெய‌ர் எதை குறிக்கிற‌து? அந்த‌ நிலை என்ன‌? அது எந்த நிலை என்று சொல்வ‌தை விட‌ அது எந்த‌ நிலையெல்லாம் இல்லை என்று சொல்வ‌து சுல‌ப‌ம். நாம் விழித்திருக்கும்போது உண‌ரும் நிலை அல்ல‌; தூங்கும்போது க‌னாக்காணும்போது உண‌ரும் நிலை அல்ல‌; க‌ன‌வே இல்லாது ஆழ்ந்துற‌ங்கும் நிலையும் அல்ல‌. இந்த‌ மூன்று நிலையில் மாறி மாறி பய‌ணிப்ப‌வ‌ர‌து நிலை எதுவோ அதுதான் அந்த‌ நிலை.

அதை அறியும்போது மாத்திர‌மே அது அதுதான் என்று புரியும். அங்கு ம‌ன‌மில்லாதாத‌ல் சொல்லும் பொருளும் அதை குறிக்க‌ உத‌வாது. அத‌னால்தான் அறிந்த‌வ‌ரால் அதை சொல்ல‌ முடிவ‌தில்லை. அதை சொல்ல‌ முடியும் என்று சொல்ப‌வ‌ர் அதை அறிய‌வில்லை என‌ அறிய‌லாம்.
கார‌ண‌ம் அந்நிலையை அடைந்த‌வ‌ர் திரும்ப‌ உட‌ல் உண‌ர்வுக்கு திரும்பும்போது முத‌லில் அடையும் திகைப்பே அதுதான். என்ன‌வென்று த‌ன‌க்குத்தானே கூட‌ எந்த‌ சொல்லாலும் அதை விளக்க‌ முடியாம‌ல், அந்த‌ உண‌ர்வை எண்ண‌ முடியாம‌ல் திகைப்பார். ஆக‌வே அறிந்த‌வ‌ர் இந்த‌ விஷ‌யத்தில் மாத்திர‌ம் மௌனியாகிறார். இப்ப‌டி மௌனியாகிற‌வரே முனிவ‌ர் என‌ப்ப‌டும் நிலையை அடைந்த‌வ‌ராவ‌ர்.

துரிய‌ம் என்றே சொல்லிற்கே நான்காவ‌து ப‌குதி என்றுதான் பெய‌ர். ஜாக்ர‌த் எனும் சொல்லான‌ விழிப்பு நிலைக்கு விள‌க்க‌மாக‌ அந்த‌ பெய‌ர் இருப்ப‌தை காணுங்க‌ள். ஜாக்ர‌ம் என்றால் விழிப்பு. ஸ்வ‌ப்ன‌ எனும் நிலை க‌ன‌வு நிலை. ஸ்வ‌ப் என்றால் தூக்க‌ம். அதிலிருந்து வ‌ந்த‌ சொல் ஸ்வ‌ப்ன‌ம். சுஷூப்தி என்ப‌து மூன்றாவ‌து சிலை. ஷூப் என்றால் முடிவு. சுஷூப் 'ந‌ன்றாக‌ முடிந்த' என்று பொருள். சுஷூப்தி என்றால் தூக்க‌ நிலை ந‌ன்றாக முடிந்து கடந்த நிலை.இதுவும் அந்த‌ நிலையின் த‌ன்மையை வைத்தே இருக்கும் சொல்.
ஆனால் துரிய‌த்திற்கு என்ன‌ பொருள் என்றால் நான்காவ‌து நிலை. இங்கே நிலையை சொல்லாலும் பொருளாலும் குறிக்க‌ முடியாததால், இத‌ன் பெய‌ரையே நான்காவ‌து நிலை என்று வைத்து விட்டார்க‌ள்.

மெய் ஞான‌ம்
ம‌ன‌ம் இருக்கும் வ‌ரை, சிற்ற‌றிவு இருக்கும் வ‌ரை ஏற்ப‌டும் ஞான‌ம் பொய்ஞான‌மாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து. கார‌ணம் என்னவென்றால் ஆண‌வ‌ ம‌ல‌த்தினால் த‌ன்னுடைய‌ விருப்பு வெறுப்புக்கேற்ப‌ உண்மை திரித்து க‌ண்ட‌றிய‌ப்ப‌டுகிற‌து. ம‌ன‌ம் ம‌றைந்த‌ நிலையில் அறியாத‌ ஒன்றினால் அறிய‌ப்ப‌டுகிற‌ அந்த‌ ஞான‌ம் கொஞ்ச‌மும் பொய் க‌லப்பில்லாத‌து. ருத்ர‌ க்ர‌ந்தி என‌ப்படும் மூணாவ‌து முடிச்சை அறுத்து பிராண‌னும், குண்ட‌லினியும் உச்சியை நோக்கி போகும்போது ம‌னதுட‌ன் கூடிய‌ ஆண‌வ‌ம‌ல‌ம் ம‌றைந்து, சிவ‌னோடு கூடிய ஆத்ம‌ த‌ன்மையை பெறுகிறான். அப்போது அவ‌ன் அறியும் அறிவே மெய்ய‌றிவு. ஆணவமலம் மாத்திரம் மறைந்து, அதே சமயம் ஆத்ம தன்மையும் பெறாமல் வெளியில் நிற்கும் நிலையில் நின்ற‌வ‌ன் சுத்த‌போத‌ம் எனும் த‌ன்மையை பெறுவ‌தால் புத்த‌ன் என‌ப்ப‌டுகிறார்.

அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே
என்ன‌வென்று விள‌க்கத் தெரியாது அதே ச‌ம‌யம் முழு உண‌ர்வோடு இருந்த‌னுப‌விப்ப‌தால் அந்த‌ விள‌க்க‌ முடியாத‌ நிலையை அற்புத‌ம் என்கிறோம். க‌ண்ணால் ச‌ரிவ‌ர‌ காண‌முடியாது திகைக்க‌ கூடிய‌ ஒளி ப‌டைத்த‌த‌னால் சூரிய‌னுக்கும் அற்புத‌ன் என்ற‌ பெய‌ருண்டு. அற்புத‌ம் என்ப‌து ஒரு ந‌ல்ல‌ நிலையை குறிக்கும் சொல். ஏனென்றால், சொல்லாலும் பொருளாலும் விள‌க்க‌ முடியாத‌ இட‌ம், ம‌ன‌ம் க‌ட‌ந்த‌ இட‌மாக‌ இருப்ப‌தால் அந்த‌ இட‌த்தில் நேருவ‌து பெருந்துன்ப‌மாக‌ இருந்துவிட்டால் எனும் ஒரு ஐய‌ம் ஜீவ‌ உண‌ர்வில் எழும். அத‌னால் தான் 'ப‌ய‌ம் வேண்டாம், அவ்வுண‌ர்வு மிக‌ அருமையான‌ உண‌ர்வு' என்று உறுதி த‌ர‌ அற்புத‌ம் எனும் சொல்லை ஔவையார் கூறுகிறார்.


அந்த‌ துரிய‌த்தின் வாயிலோடு சிவ‌த்த‌ன்மை, ஜீவ‌த்த‌ன்மை முடிவ‌டைந்து விடும். அந்த‌ வாயிலில் மாறாது நிற்கும் த‌ன்மையினானாய் இறைவ‌ன் இருக்கிறார். அவ‌ர் ஒன்றிற்கும், இர‌ண்டிற்கும் இடையே நிற்கிறார். அதாவ‌து அவ‌ரை ஒன்றென‌வும் சொல்ல‌முடியாது. இர‌ண்டென‌வும் சொல்ல‌ முடியாது. மொத்த‌த்தில் ப‌குத்து பார்க்க‌ இய‌லாத‌வ‌ர். த‌ந்த‌ம் கொண்ட‌தை க‌ளிறு என்று சொல்வ‌து வ‌ழ‌க்க‌ம். அங்கே அனைத்தையும் தாங்கும் இர‌ண்டு த‌ந்த‌மாகிய‌ ச‌க்தியுட‌ன், இறைவ‌ன் இருப்ப‌தை த‌ரிசிக்கிறான். எல்லை நில‌த்தில் நிற்கும் அவ்விறைவ‌னுக்கு ஈசுவ‌ர‌ன் என்று பெய‌ர். அவ‌னின் விருப்ப‌த்தால்தான் அனைத்தும் தோன்றி, ந‌ட‌ந்துக்கொண்டிருப்ப‌தை காண்கிறான். அதே ச‌ம‌யம் இச்செயல் விருப்ப‌த்தாலோ,ம‌ன‌தின் செயலாலோ ந‌ட‌க்க‌வில்லை என‌ காண்கிறான். அங்கு நினைப்ப‌வை யாவும் செயல் கூடுவதை நேர‌டியாக‌ க‌ண்ணுறுகிறான். ஆக‌வே க‌ற்ப‌க‌ம் என்று அந்த‌ நிலை சொல்ல‌ப்ப‌டுகிற‌து.

இப்போது நான் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகக் கேட்டேன்!
>இதை இப்படிச் சொல்லிப் பார்க்கலாமா?

இம்மூன்று நிலைகளிலும் மாறி மாறிப் பயணம் செய்தாலும், இவை மூன்று அனுபவங்களுமே வெவ்வேறு என்பதை உணர்ந்தாலும், இவை மூன்றுமே இந்த 'ஜாக்ரத் அவஸ்தை' நிலைவழியே தான் உணரப்படுகிறது.

அதாவது சங்கர்குமாராகிய நான் விழித்து, கனவுகண்டு ஆழ்நிலை ஆழ்வதாக ஒன்றுகிறேன்.
இதுவல்லாமல், இந்த மூன்று நிலைகளிலும் பயணிக்கும் ஒன்றை உணர்ந்து அதில் ஆழ்வதே அந்த நான்காம் நிலை.

கொஞ்சமாவது சரியா ஐயா?< //

ச‌ங்க‌ர் குமார் ஐயா! இதை எப்ப‌டியும் சொல்ல‌வே முடியாது! எது அது இல்லை என்று மாத்திர‌மே சொல்ல‌ முடியும்! எது அது என்று சொல்ல‌ முடியாது! புல‌ன்க‌ளின் வ‌ழியே அறிந்ததைக் கொண்டு தீர்மான‌த்திற்கு வரும் ஜீவ அறிவின் துணையால் இதை புரிந்துக் கொள்ள‌ முய‌ற்சித்தால், புரிந்துக் கொண்ட‌து மிக‌ த‌வ‌றான‌ ஒன்றாகி விடும். இத‌ற்கு விப‌ர்ய‌யா என்று பெயர். அத‌வாது உள்ள‌த‌ற்கு மாறாக‌ ஒன்றை த‌வ‌றாக‌ புரிந்துக் கொள்ளுத‌ல். கார‌ண‌ம், இந்த‌ நான்காவ‌து நிலையான‌ துரிய‌ம் ம‌ன‌ம், புத்தி, அஹ‌ங்கார‌த்தாலோ, புலன்களாலோ (இந்திரியங்கள்) புரிந்துக் கொள்ள‌ முடியாது. எப்ப‌டியென்றால் நிற‌ம் என்றால் என்ன‌ என்று ருசித்து உண‌ர‌ த‌லைப்ப‌டுவ‌தை போல‌! இந்த‌ நான்காவ‌து நிலையான‌ துரியம், ம‌ன‌ம் ம‌றைந்த‌ போது, புத்தி ம‌றைந்த‌ போது, ஆண‌வ‌ம் ம‌றைந்த‌ போது, புல‌ன்க‌ள் ம‌றைந்த‌ போது அறியப்ப‌டுவ‌து! அதை முறையான‌ முய‌ற்சியினால் மாத்திர‌ம் அறிய‌ முடியும்; புரிந்துக் கொள்ள‌ முடியும். அதை ஒருபோதும் ம‌ன‌திருக்கும் போது ம‌ன‌தின் வ‌ழியாக‌ சொல்ல‌வே முடியாது. அத‌னால்தான் அதை எச்சில் ப‌டாத‌ நிலை என்ப‌ர். அப்ப‌டி ஒன்று இருக்கிற‌து என‌ அறிய‌வே பெரியோர் சொல்கின்ற‌ன‌ரே த‌விர‌ அதை யாரும் விளக்க‌ இய‌லாது. >>>
சொல்லாலும் பொருளாலும் உண‌ர்த்த‌ முடியா இட‌ம். கார‌ண‌ம் இதை அறியும்போது ம‌ன‌ம் இருப்ப‌தில்லை. அந்த‌ நிலையைப் ப‌ற்றிய‌ உண‌ர்வு, அந்த‌ நிலையில் அனுப‌வித்த‌ உண‌ர்வு எங்கே எதில் ப‌திந்த‌து என்று சொல்வ‌த‌ற்கில்லை. அந்த‌ நிலையில் இருந்து கீழே இற‌ங்கி வ‌ரும்போது மீண்டும் சித்த‌ம் செயல்ப‌ட‌ ஆர‌ம்பிக்கிற‌து; பின் அஹ‌ங்கார‌ம் இணைகிற‌து. அத‌ன்பின் ம‌ன‌மும்,புத்தியும் செய‌ல்ப‌டுகின்ற‌ன‌. ஆக‌ அறிந்த‌வ‌னே இதை எப்ப‌டி விள‌க்குவ‌து, இத‌ற்கேற்ற‌ சொல் ஏதுமில்லையே என‌ ம‌ய‌ங்குகிறான்; <<< --------------------

திவாகர் எனும் என் நண்பர் கேட்டார்:
//சித்தம் பற்றிய விளக்கமாக எடுத்துகொள்கிறேன்
. //

இல்லை! திவாக‌ர் ஐயா! இது சித்த‌ம் ப‌ற்றிய‌ விள‌க்க‌ம் அல்ல‌! சித்த‌ம் உறைந்து, செய‌லற்று போகும் போது ஏற்ப‌டும் நிலை! சித்த‌ விருத்தி நிரோத‌: என்று ப‌த‌ஞ்ச‌லி யோக‌ சூத்திர‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ நிலை. இங்கு சித்த‌ம் காண‌ப்ப‌டுவ‌தில்லை!

அஹ‌ங்கார‌ம், புத்தி, ம‌ன‌ம் இம்மூன்றும் எங்கெங்கே இருக்கிற‌து என்று அறிந்த‌ குரு இருப்பிட‌த்தை காட்டுவார். அவை மூன்றிற்கும் கடிவாள‌ம் அவ‌ர் இடுவார். இட்டு விட்டு அக்க‌டிவாள‌த்தை கொண்டு அம்மூன்றை எப்ப‌டி ந‌ம‌க்கேற்ப‌ ந‌ட‌த்துவ‌து என்று சொல்லித்த‌ருவார். அந்த‌ நிலையில்தான் இந்த‌ ம‌ன‌ம்,புத்தி,அஹ‌ங்கார‌ம் மூன்றும் எதிரி என்னும் நிலையிலிருந்து மாறி ந‌ண்ப‌ன் என்னும் நிலைக்கு வ‌ந்து நாம் அடைய‌ வேண்டிய‌தை அடைய‌ உத‌வும்.

மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌து துரிய‌த்திலிருந்து வ‌ரும் போது எப்ப‌டி ஒன்றொன்றாக‌ மீண்டும் எங்கிருந்தோ தோன்றுகின்ற‌ன என்ப‌தை குறித்த‌ பெரியோர் விள‌க்க‌த்தை சொல்ல‌ முய‌ன்றிருக்கிறேன்.

***************************************************************


அவ்ளோதாங்க! இது போதுண்டான்னு போயிட்டார் நான் வணங்கும் அந்தப் பெரியவர்! இது கிடைச்சதே பெருசு! இதைப் புரிய முற்பட்டு, இதைப் பயின்றாலே ஒரு தெளிவு கிடைக்கும் என அவர் உணர்த்தியதாக நான் புரிகிறேன்.

அனைவருக்கும் நலம் சூழ்க!
இதுவரை இதைப் பொறுமையாகப் படித்த அனைவருக்கும் என் நன்றி! படித்த அனைவரும் இப்போதாவது வந்து ஏதாவது ஒரு கருத்து சொன்னால் மகிழ்வேன்!
************************************
வித்தக விநாயகன் விரைகழல் சரணே!

முற்றிற்று!

Read more...

Friday, October 03, 2008

"விநாயகர் அகவல்" -- 15

"விநாயகர் அகவல்" -- 15
முந்தைய பதிவு

நான் வணங்கும் பெரியவர் சொன்னது!

"பெரியோர்களை மெய்யாக பணிந்து தெரிந்ததை சொல்கிறேன்.

சீதக் களபச் செந்தாமரை பூம்பாதச் சிலம்பு பலஇசை பாட...

சீதம் (seetham) எனும் சொல் பொதுவாக குளிர்ச்சியை குறிக்கும். சீதம் எனும் சொல் சந்தனத்தையும் குறிக்கும். களபம் என்றால் கலவை; வாசனையுடன் கூடிய கலவை எனும் பொருளைத் தரும். ஆக சந்தனகலவை பூசப்பெற்ற செந்தாமரை பூ போன்ற திருவடிகளில் உள்ள சிலம்பு பல இசையை பாட...என்னும் நேரடி பொருள் வருகிறது.

ஒரு யோகியரின் ஒவ்வொரு சொல்லும் பெரிய விளக்கத்தை உள்ளே வைத்துக் கொண்டிருக்கும். காரணம் ஒரு சொல் இங்கே தவறினாலும், சங்கேதமாக இருக்கும் இவற்றின் பொருளை சிந்திக்கும் யோக‌ மாணவன் திசை தடுமாறி விடக்கூடும். ஆகவே அத்தனை சொற்களும் எந்த அர்த்தத்தை ஒரு சேர காண்பிக்கின்றவோ அதுவே சரியானதாக ஆகும்.

சீதா எனும் சொல்லிற்கு ஏர்க்காலினால் உழும் போது நிலத்தில் ஏற்படும் உழுத அடையாளம் எனும் பொருளுண்டு. அதில்தான் விதையை தூவுவார்கள் அல்லது நீர் பாய விடுவார்கள். அதனால்தான் சீதா என்று ஜனகரின் மகளுக்கு பெயர் வந்தது. நிலத்தில் உழுத போது அந்த பிளவில் அவள் கிடைத்ததால் அவளுக்கு அந்த பெயர்.

மூலாதாரம் பிருத்வி தத்துவமாகும். அதாவது நிலத்தின் தன்மை கொண்டது. நிலத்தின் தன்மையை உள்ளும்,புறமும் அறிவதற்கு, ஆள்வதற்கு உதவும் இடம். அதற்கு கீழே குல குண்டம் எனும் இடமே குண்டலினியின் இடம். பிராணனால் அங்கு உழுது கீறப்படும் போது அவள் விழித்தெழுகிறாள் அல்லது வெளிப்படுகிறாள். ஆக யோக மார்க்கத்தில் சீத எனும் சொல் வரும்போது சங்கேதமாக குலகுண்டம் சுட்டிக் காட்டப்படுகிறது. ஜனன உறுப்பிற்கும், குதத்திற்கும் இடையே சற்று உட்புறம் அமைந்திருப்பதாக பெரியோர் கண்டறிந்து சொல்கின்றனர்.ஆங்கிலத்தில் Perineum என்பார்கள்.

களபம் என்றால் கலவை! சரி என்ன கலக்கிறது? அந்த குலகுண்டத்தில் (perineum) குண்டலினியுடன் பிராணவாயு கலக்கிறது. இரண்டும் சேர்ந்து மேலே ஒன்றாக எழும்புவதால் இங்கு களபம் என்ற சொல் பயன்படுகிறது.

சரி! வேறு என்ன பொருள் இந்த சொற்களுக்கு வருகின்றன? அவையும் இதே பொருளை சுட்டிக்காட்ட வேண்டும். அப்படி இருந்தால்தான் இந்த சங்கேத குறிகளை கண்டறிந்தது சரியென்று ஆகும்.

சீத‌ம் என்றால் ச‌ந்த‌ன‌ம், க‌ள‌ப‌ம் என்றால் க‌ல‌வை! ச‌ந்த‌ன‌ம் என்ப‌து வாச‌னையை குறிக்கும். நாற்றம் (வாசனை) என்ப‌து பிருத்வி த‌த்துவ‌த்தின் த‌ன்மாத்திரையாகும். அதாவ‌து மூலாதார‌த்தின் வேலை. க‌ள‌ப‌ம் என்றால் வ‌ழ‌க்க‌ம் போல் க‌ல‌வை! ஆக‌ வாச‌னை என்றாலே வாயு இல்லாம‌ல் இல்லை! காற்று இல்லாம‌ல் ம‌ண‌த்தை உண‌ர‌முடியாது. ஆக‌ இங்கே ச‌ந்த‌னம் என்ப‌து மூலாதார‌த்தில் வ‌ந்த‌ வாயுவை குறிக்கும். எது க‌ல‌க்கிற‌து? குண்ட‌லினி! ஆக‌ இந்த‌ முறையிலும் சீத‌ க‌ள‌ப‌ம் என்றால் அதே பொருள் வ‌ருகிற‌து.

சீத‌ம் என்றால் ம‌து என்று ஒரு பொருள் உண்டு! க‌ள‌ப‌ம் என்றால் யானைக்க‌ன்று என்று ஒரு பொருள் உண்டு! ம‌துவை போன்ற‌ ம‌தநீரால் ம‌த‌மான‌ யானைக்க‌ன்று என்று பொருள் வ‌ருகிற‌து. ச‌ஹ‌ஸார‌ர‌த்தில் முழு க‌ட‌வுளாய் விள‌ங்குப‌வ‌ர் இங்கே முத‌ற்க‌ட‌வுளாயும் இருக்கிறார்.

மேலே இருப்ப‌வ‌ர் ம‌ஹாக‌ண‌பதி என்றால் இவ‌ர் பால‌க‌ண‌பதி. எல்லா ஆதார‌ தெய்வ‌ங்க‌ளுக்கும் மிக‌ இளைய‌ தெய்வ‌மாய் இருப்ப‌தால் பால‌விநாய‌க‌ன் ஆகிறார். மேலே இருக்கும் ம‌ஹாகணப‌தி முழுமுத‌ற்க‌ட‌வுளின் சிர‌சு என்றால் மூலாதார‌ க‌ண‌பதி பாத‌ம் ஆகிறார். ஆகவே சீத‌க் க‌ள‌ப‌ப் பூம்பாத‌ம் இங்கேயும் பொருந்துகிற‌து. இங்கே ம‌து போன்ற‌ ம‌த‌நீராக‌ ஆவ‌து கீழே வ‌ந்த‌ வாயுவே! குண்டலினி மூலாதார‌த்தை தொடும்போது ஒரு விளைவு ஏற்பட்டு அங்கு குண்ட‌லினியே விநாய‌க‌ராய் காட்சி அளிக்கிறாள். என‌வே இங்கும் சீத‌க்க‌ள‌ப‌ என்றால் வாயுவுட‌ன் சேர்ந்த‌ குண்ட‌லினி எனும் பொருள் வ‌ந்துவிடுகிற‌து.


சீத‌ம் என்றால் மேக‌ம் என்றும் ஒரு பொருளுண்டு. குளிர்ச்சியினால் அத‌ற்கும் அந்த‌ பெய‌ருண்டு. மேக‌ம் என்ப‌து வாயுநிலையை தொட்ட‌ நீரே! ஆக‌ இங்கும் மேக‌ம் வாயுவை குறிக்கும் சொல்லாக‌ யோக‌ம் சொல்லும். அத‌னால்தான் ப‌ல‌ யோக‌ நூல்க‌ளில் ம‌ஹாவாயுவை மேக‌ம் என்று குறியீடாக‌ சொல்லும் வ‌ழ‌க்க‌ம் உண்டு. பின் க‌ள‌ப‌ம் என்றால் அதே பொருள்! யானைக்க‌ன்று என்று வைத்துக் கொண்டாலும், கலவை என்று வைத்துக்கொண்டாலும் குண்ட‌லினியுட‌ன் சேருவ‌தையே குறிக்கும்.
சீத‌ம் என்றால் நீர்!
வாயுவே கீழே இற‌ங்கும் போது அட‌ர்த்தியினால் நீர்த‌ன்மை பெறுகிற‌து. என‌வேதான் வாயு மூலாதார‌த்தை நோக்கி இற‌ங்குகிற‌து. அங்கே மூல‌க்க‌ன‌லால்தான் மீண்டும் சுத்த‌ வாயுவாக‌ ஆகிற‌து. திரும்ப‌ க‌ள‌ப‌த்துட‌ன் சேர்த்தால் அதே பொருள் வ‌ரும்.

சீத‌ம் என்றால் பிர‌திப்ப‌லிக்க‌க்கூடிய‌ என்ற‌ பொருளும் உண்டு. நீரை சீத‌ம் என்று சொன்ன‌தால்தான் இந்த‌ பொருள் வ‌ந்த‌து என்றாலும். உண்மையில் ம‌ஹாவாயு நேர‌டியாக‌ பார்க்க‌முடியாத‌ உண்மையை பிர‌திப‌லிப்ப‌தால் அத‌னை அந்த‌ பெய‌ரில் சில‌ யோக‌ நூல்க‌ளில் சொல்லுவ‌துண்டு!
நேர‌டியாக‌ பார்க்க‌முடியாத‌ உண்மையை பிர‌திப்ப‌லிப்ப‌து என்றால்?
சூரிய‌னை நேர‌டியாக‌ பார்க்க‌முடியாத‌ போது க‌ண்ணாடியில் அத‌னை பிர‌திப‌லிக்க‌ செய்து காண்ப‌தை போல‌.
ம‌ஹாவாயு ஆத்ம‌ த‌ன்மையை பிர‌திப‌லித்து காட்டும் த‌ன்மை கொண்ட‌து. என‌வே அதை க‌ண்ணாடி என்றும் சொல்வ‌ர். ம‌ஹாவாயு ச‌ரி வ‌ர‌ ஏறாத‌ யோகிக‌ள் என‌க்கு இன்னும் க‌ண்ணாடி போட‌வில்லைய‌ப்பா என்று ப‌ரிபாஷையில் சொல்வ‌தை கேட்டிருக்கிறேன்.

செந்தாம‌ரை பூம்பாத‌ சில‌ம்பு ப‌ல‌ இசை பாட‌

செந்தாம‌ரை போல‌ சிவ‌ந்த‌ நிற‌த்தில் இருப்ப‌து மூலாதார‌ம் மாத்திர‌மே! பாத‌ம் என்ப‌தை கால் என்றும் சொல்வ‌ர். கால் என்றால் காற்று! பாத‌ம் என்றாலே யோக‌ முறையில் காற்றுதான். மூல ஆதாரமாகிய‌ பாத‌த்தில் விழுவ‌து காற்று. அத‌ன்பிற‌கு அது ம‌ஹாவாயுவாக‌ ஆகிவிடும். சில‌ம்புத‌லால் சில‌ம்பு என்ற‌ பெய‌ர் அத‌ற்கு வ‌ந்த‌து. இங்கே வாயுவான‌து சுழுமுனை வ‌ழியே நுழைய‌ ஆர‌ம்பித்த‌தில் இருந்து செவியில் சின்சின் எனும் ஒரு ஒலி எழும்ப‌ ஆர‌ம்பிக்கிற‌து. சுவ‌ற்றுகோழி க‌த்துவ‌தை போல‌. சில் வ‌ண்டு ச‌த்த‌ம் எழுப்புவ‌தை போல‌. சில்வ‌ண்டின் ச‌த்த‌த்தை கொலுசு ச‌த்த‌ம் என்றெண்ணி ப‌யந்த‌வ‌ர் ப‌ல‌ருண்டு அல்ல‌வா?

மூலாதார‌த்தில் வாயு நுழைந்த‌ அக்க‌ண‌ம் அந்த‌ கொலுசு ச‌த்த‌ம் போன்ற‌ சின்சின் எனும் ஒலி கேட்க‌ ஆர‌ம்பிக்கிற‌து. அதன் பின் வாயுவின் நகர்தலால் ஒவ்வொரு இசை கேட்க‌ ஆர‌ம்பிக்கிற‌து. சின் எனும் ஒலி, ம‌த்த‌ள‌ம், புல்லாங்குழ‌ல், க‌ண்டா மணி, வ‌ண்டு,வீணை, ச‌ங்கு, அலையோசை, இடி போன்ற‌ ச‌த்த‌ங்க‌ளும் கேட்கின்ற‌ன‌. இதையே ப‌ல‌ இசை பாட‌ என்று சொல்ல‌ப்ப‌டுகிற‌து.

பூ என்ற‌ சொல் பூவாகிய‌ ஆதார‌த்தையும் குறிக்கும்; பூ ஆகிய‌ பூமி எனும் மூலாதார‌த்தையும் குறிக்கும்.

இப்ப‌டி சிந்தித்து அறியும் மாணாக்க‌ன் த‌ன் அனுப‌வ‌த்தின் மூல‌மாக இவை உண்மை என்னும் ஊர்ஜித‌ப்ப‌டுத்திக் கொள்கிறான்.

இறைவன் அருளால் தவறின்றி சொல்ல முயல்கிறேன். வழக்கம் போல் பெரியோர்களும், நண்பர்களும் காணும் தவறுகளை பொறுத்து விடுங்கள்."


மேலே சொன்னது அனைத்தும் நான் வணங்கும் பெரியவர் சொன்னவை!

**************************

[தொடரும்]

Read more...

Wednesday, October 01, 2008

"விநாயகர் அகவல்" -- 14

"விநாயகர் அகவல்" -- 14



முந்தைய பதிவு

பல ஆண்டுகளாக நான் விநாயகர் அகவலைப் பாராயணம் செய்து வருகிறேன். இதன் எளிமையும், இனிமையும், சந்தமும் என்னை மிகவும் கவர்ந்தது. ஔவைப்பாட்டி நுணுக்கமான பல செய்திகளை இதில் சொல்லிச் சென்றிருக்கிறாள் என்ற அளவிலேயே எனது தேடல் இதில் இருந்து வந்தது.

இந்த வருடத் தொடக்கத்தில் அமெரிக்காவில் இருக்கும் ராச்செஸ்டெர் [Rochester] என்னும் ஊரில் ராஜ ராஜேஸ்வரி அன்னைக்கு ஒரு ஆலயம் எழுப்பி, மிகச் சிறந்த இறைப்பணி செய்துவரும் சைதன்யானந்தா என்னும் ஒரு பெரியவரின் அருளுரையில் இதற்கான பொருள் விளக்கம் கேட்க நேர்ந்தது..... முருகனருளால்.

இதன் ஆர்வமாய் மேலும் இதைப் படிக்கத் தொடங்க எண்ணித் தேடியபோது மதுரைத் திட்டத்தின் கீழ் திரு ரஜபதி ஐயா எழுதிய உரைவிளக்கம் கிடைத்தது. அதில் அவர் சொல்லியிருக்கும் செய்திகள் பிரமிப்பூட்டின.

நான் வணங்கும் ஒரு பெரியவரின் ஆசியுடன், அவர் தந்த சில விளக்கங்களுடனும், இதற்கு எனது பாணியில் ஒரு எளிய விளக்கம் கொடுக்க எண்ணினேன்.

அதன் விளைவுதான் சென்ற 13 பதிவுகளாய் வந்த விநாயகர் அகவல் உரை விளக்கம்!

இந்த மூன்று பெரியவர்களுக்கும் எனது பணிவான வணக்கமும், நன்றியும்.

நான் சொன்னது மிக, மிக ஆரம்பநிலை விளக்கம் மட்டுமே!

இதனைப் படித்து, நன்கு உள்வாங்கிக் கொண்டு, உள்ளில் ஏதேனும் உந்தல் புறப்பட்டால், ஒரு குருவைத் தர விநாயகனை வேண்டுங்கள்!

அவர் காட்டித் தருவார்! வளம் தருவார்!

மதுரைத் திட்டச் சுட்டி இதோ!

விநாயகர் அகவல் இசைவடிவில் இங்கே!

இனி நான் வணங்கும் பெரியவர் எழுதிய முதல் ஓரிரு வரிகளுக்கான சில யோக விளக்கங்களைக் காணலாம். இது சற்று ஆழ்நிலை விளக்கமாக இருக்கும். பிடிப்பவர்க்குப் பிடிக்கும்! புரிபவர்க்குப் புரியும்! நன்றி.

"சங்கர் ஐயா கேட்டுக் கொண்டதற்கேற்ப எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

விநாயகர் அகவல் முழுக்கவே யோக நெறியின்படி எழுதப்பட்ட நூல்! யோகத்தில் முழுமைப்பெற்றவரது துணையும், அவர் காட்டும் தெளிவும் இல்லாமல் இருந்தால் மிக தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு விடலாம்! கொஞ்சம் ஆபத்து தான்!


யோக நெறியில் உள்ளது என்ன என்ற ஒரு மேலெழுந்தவாரியான அறிவை வேண்டுமானால் இதனால் பெறலாம். இந்த யோகம் என்றால் என்ன என்பது குறித்து ஒரு தெளிவு கிடைக்கும். அதற்கு இந்த [vsk இன்] விளக்கம் உபயோகமாகும். தன் பணிகளுக்கு இடையில் நேரம் கிடைத்து இப்படி ஒன்றை [vsk] எழுதுவது பெரிய விஷயம்தான். பணிவுடன் வணங்குகிறேன்.

யோகத்தில் குறியீடுகள்தான் முக்கியம். ஏன்? வெளிப்படையாக சொன்னால் என்ன என்று தோன்றலாம். யோகத்தில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியம்.

1.இந்த பாதையை உள்ளப்படிக்கு உணர்ந்தவரது வழிக்காட்டல்;
2.சாதகன் எதையும் ஆழ்ந்து சிந்தித்து தானாக அறியும் ஞானம்.


இந்த பாதையை உள்ளப்படிக்கு முழுதும் சென்று அறிந்தவர் இதில் உள்ள ஆபத்துக்களையும், இடையூறுகளையும், நுணுக்கங்களையும் அறிந்திருப்பார். அவருக்கு அவர் குரு உதவி இருப்பார். ஆதியில் இறைவனே நேரடியாக குருவாக வந்து வழிக்காட்டியதாக சான்றோர் சொல்லால் அறிகிறோம். நானும் அப்படியே நேரடியாக இறைவனின் வழிக்காட்டுதலையே பெற்றுக் கொள்கிறேன் என்பவர் உண்மையில் ஊக்கத்தோடும், ஆக்கத்தோடும் முயன்றால் நிச்சயம் இப்போதுக் கிட்டும் என்று பெரியோர் ஆணித்தரமாக சொல்லுகின்றனர்.

சாத‌க‌ர் என‌ப்ப‌டும் யோக‌ ப‌யிற்சியாள‌ருக்கு குரு சில‌ அடிப்ப‌டைக‌ளை மாத்திர‌ம் சொல்லித்த‌ந்து எப்ப‌டி அறிய‌ வேண்டும் என்று க‌ற்றுத் த‌ருவார்! அதை வைத்துக் கொண்டு சீட‌ரே ஆராய்ந்து அறிய‌ வேண்டும். ப‌க‌வ‌த்கீதை, சித்த‌ர் பாட‌ல்க‌ள், உப‌நிஷ‌த் எல்லாமே இப்ப‌டி தான் அறிய‌ வேண்டும். அத்த‌னையும் இப்ப‌டி தான் என்று யோகிக‌ள் க‌ருதுகின்ற‌ன‌ர். என‌வே குறியீடாய் சொல்வ‌தை க‌ண்ட‌றியும் திற‌னை ப‌யிற்சி மூல‌மாக‌வும், வ‌ழிக்காட்டுத‌ல் மூல‌மாக‌வும் சீட‌ன் அறிகிறான். திரும்ப‌ என்ன‌ வ‌ழிக்காட்டுத‌ல் என்று சொல்கிறேனே என்றால், ப‌யிலும் சீட‌ன் யோசித்து அறிந்த‌தை குருவிட‌ம் வ‌ந்து சொல்லும் போது குரு அதை ச‌ரி என்றோ த‌வ‌று என்றோ சொல்லுவார். த‌வ‌றாய் இருந்தால் மீண்டும் சீட‌ன் தியான‌த்தில் சிந்தித்து ஆராய்வான்.

உதார‌ண‌ம் தைத்திரீய‌ உப‌நிஷ‌த்தில் வ‌ருண‌ண் பிருகுவுக்கு சொல்வ‌தை காண‌லாம்.
"எதிலிருந்து எல்லாம் தோன்றிய‌தோ, எதனால் எல்லாம் இருக்கிற‌தோ, எத‌னால் எல்லாம் ல‌ய‌மாகி முடிவ‌டைகிற‌தோ அது எதுவென‌ அறிவாய்!" என்பார் வ‌ருண‌ன்.
பிருகு வெகுகால‌ம் தியானித்து அறிந்து வ‌ந்து "அன்ன‌ம்" என்பார்.
"ந‌ன்று! இன்னும் போய் ஆராய்வாய்!" என்பார் வ‌ருண‌ன்.
திரும்ப‌ ஆராய்ந்து நேர‌டியாக‌ அறிந்து வ‌ந்து "பிராண‌ன்" என்பார் பிருகு.
"ந‌ன்று! இன்னும் சிந்தி!" என்பார் வ‌ருண‌ன்.

இப்ப‌டியே போகும்!
ஆக‌ சீட‌னை சிந்திக்க‌ வைத்து, அதே ச‌ம‌ய‌ம் த‌வ‌றாக‌ போகும் போது மீண்டும் வழிக்குத் திருப்புவார் குரு. அப்படி சீட‌ன் சிந்திக்க‌வே யோக‌ முறையில் எல்லாம் குறியீடுக‌ளாக‌ இருக்கும். இத‌னால் அறிய வேண்டிய தாகத்தில் இருக்கும் ஒருவன், க‌ண்டிப்பாக‌ ஒரு முழுமைய‌டைந்த‌வ‌ரை தேடி அடைவான். அடுத்து அவ‌ன் சிந்திக்க‌ வாட்ட‌மாக‌, உப‌யோக‌மாக‌ இந்த‌ குறியீடுக‌ள் இருக்கும். இத‌னால் மொழியை க‌ட‌ந்து மொழியின் உள்ளே ம‌றைந்து இருக்கும் உண‌ர்வினை அறியும் வ‌ல்ல‌மையை பெறுகிறான்.

ஒரே ம‌ட‌லில் எல்லாம் இருந்தால் ப‌டிப்ப‌வ‌ருக்கு க‌ஷ்ட‌மாக‌ இருக்கும். அடுத்த‌ மட‌லில் விநாய‌க‌ர் அக‌வலின் முத‌ல் வ‌ரியில் இருக்கும் குறீயீடு (allegory) எதை குறிக்கிற‌தென்று ஒரு மாதிரிக்கு (sample) தெரிவிக்க முயலுகிறேன். அதுவும் ஓரளவிற்கு எனக்கு புரிய வைக்கப்பட்டதை, பெரியோர் அங்கீகரித்ததையே எழுத முயல்வேன்.
*********************************

[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

Tuesday, September 30, 2008

"விநாயகர் அகவல்" -- 13

"விநாயகர் அகவல்" -- 13



முந்தைய பதிவு

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி [68]



சிவனை உணர்ந்து சிவத்தில் திளையும்

திருவடி பணியும் அடியவர் எல்லாம்

அடியவர் என்பதைக் காட்டிடும் புனிதத்

தவமுனி வேடமும் தவத்திரு நீறும்

தாங்கியே தம்மைக் காட்டிக் கொள்வர்


ஆனைமுகனின் அருள்வழி அடைந்த

ஔவைப்பாட்டியும் தானும் அதுபோல்

தவநிறை வேடம் தாங்கிடச் செய்து

மந்திரமாகும் சுந்தர நீற்றைத்

தன்னில் அணிந்து தன்னைப் போலும்

இறையருள் நிறைந்த அடியவர் கூட்டம்

என்றும் தன்னுடன் தங்கிட வேண்டி

தாயினும் சிறந்த தயாவாய் ஆளும்

சங்கரன்மகனின் தாள்பணிகின்றாள்



அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் [70]


ஐந்தெழுத்து மந்திரத்தின் சுந்தரத்தைச் சொல்லிடுவோம்


'ந'கரமிங்கு மறைக்கும்பொருள்

'ம'கரமிங்கு மும்மலங்கள்

'சி'கரமென்னும் பதி உண்மை

'வ'கரமவன் அருட்கருணை

'ய'கரமது பசுவுண்மை


சொந்தமான பதியை விட்டுப்

பிரிந்துவந்த பசு ஆன்மா

திரும்ப அதை அடையாவண்ணம்

மறைந்திருந்து அதைத் தாக்கும்

மலமென்னும் மகரம் இங்கு!


பதியவனின் அருட்கருணை

பாய்ந்துவந்து தடையழிக்க

மறைப்பிங்கு விலகியோடி

பசுவிங்கு பதி அறியும்!

நமசிவயவின் பொருளிதுவே


ஐந்தெழுத்து மந்திரத்தை

அனுதினமும் இடைவிடாது

அன்புடனே ஓதிவரின்

அழுந்திவரும் ஆன்மாவும்

பேரின்பப் பேறடையும்


ஓமென்னும் பிரணவத்தின்

துணையின்றி தனியாக

ஓதுகின்ற பெருமையிங்கு

பஞ்சக்கரம் ஒன்றுக்கே

இருப்பதனை உணர்ந்திடுவோம்


இத்தகைய பேறுடைய

பஞ்சக்கர மந்திரத்தின்

உட்பொருளை கணபதியும்

ஔவைக்கு விளக்கிவிட

அன்னையிவள் ஆர்ப்பரிக்கிறாள்!


[பஞ்சக்கரம்= பஞ்ச+ அக்கரம்= பஞ்ச அக்ஷரம்= நமசிவய]



"சிவாய எனச் சொல்லி மூச்சிழுத்து நிறுத்திவிட்டு

நம:வெனச் சொல்லியதை வெளியினிலே விட்டுவிட

பலகாலப் பயிற்சியினால் தொங்கிநிற்கும் குண்டலினி

தானாகக் கிளர்ந்தெழுந்து மூலாதாரச் சக்கரத்தில்

தானாக நிலைகொண்டு ஒவ்வொன்றாய் மேலெழும்பி

சஹஸ்ராரம் சென்றடைய, சத்தத்தில் சதாசிவமும்

சித்தத்தில் சிவலிங்கமும் தானாகத் தோன்றிவிட

மூண்டெழுந்த முக்கோணச்சுடரினிலே மலமெல்லாம் சாம்பலாகும்

திருநீறாய் அதைக்கொண்டு நிர்மலனாய்த் திகழ்ந்திடுவாய்"

எனவந்த ஆனைமுகன் அருட்கருணைத் திறத்தினிலே

ஔவையிவள் அகமகிழ்ந்து ஆழ்நிலையில் அமிழ்கின்றாள்!



தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே! [72]



"தானே அது" வென்னும் தத்துவத்தின் பொருளாகி

நாடிவந்த எவருக்கும் அருள்வழங்கும் அன்பனிவன்

வாடிநின்ற எவர்துயரும் பொடியாக்கிப் போக்கிடுவன்

ஆனைமுகக் கடவுளிவன் அறுகம்புல் அணிந்திடுவான்


எளியனான என்றனையும் ஏற்றிவிடக் கருணைகொண்டு

தவஞானத் தத்துவத்தை வித்தகனாய் எனக்குரைத்து

அருள்ஞான உபதேசம் தந்தென்னை ஆட்கொண்ட

நின்னடியைப் பணிந்திங்கு திருவடியில் சரண்புகுந்தேன்


என்றிங்கு முடிக்கின்றாள் தமிழன்னை ஔவைப்பாட்டி

திருவடியில் நூல் தொடங்கி திருவடியில் தாள்முடித்தாள்

கருணையுளம் மிகக்கொண்டு தமிழரெலாம் வாழவென்று

கருத்தெல்லாம் பாட்டாகக் கவினுறவே சொல்லிவைத்தாள்


செந்தமிழின் செல்வமென எமக்கெல்லாம் வந்தயிவள்

தாளடியை யான் பணிந்து தெரிந்தவரை சொல்லிவைத்தேன்

சொல்லவைத்த ஔவைக்கு என்வணக்கம் சொல்லிவைத்தேன்

சொலப்பணித்த கணபதியின் தாளிணையில் நான் பணிந்தேன்


சொற்குற்றம் பொருட்குற்றம் இதிலிங்கு இருக்குமெனில்

குற்றமெலாம் எனக்கெனவே எனசொல்லிப் பணிகின்றேன்

நிறையெதுவும் இதிலிருப்பின் முன்சொன்ன பெரியோர்க்கு

அத்தனையும் சேருமென்று சொல்லியிங்கு முடிக்கின்றேன்!



"வித்தக விநாயகன் விரைகழல் சரணே!"


"விநாயகர் அகவல்" முற்றிற்று.


[நாளை நிறைவுறும்!]

Read more...

Sunday, September 21, 2008

"விநாயகர் அகவல்" -- 12

"விநாயகர் அகவல்" -- 12
முந்தைய பதிவு

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி [64]



உருவாய் வந்து திருவருள் செய்தவன்

குருவாய் வந்து அகவிருள் தொலைத்தவன்

அருவுருவாகி அகத்துள் ஆடுவான்

அவனே உருவிலா சதாசிவம் ஆகும்


சிவமாய், சக்தியாய், விந்துவாய், நாதமாய்

அருவம் காட்டி ஐந்தொழில் புரிபவன்

சதாசிவமாகி விண்வெளி நிற்பான்

உள்ளிலும் புறத்திலும் இவனே நிறைவான்


ஆக்கல் காத்தல், அழித்தல், மறைத்தல்,

அருளல் என்னும் ஐந்தொழில் யாவும்

செய்திடும் அருவுரு சதாசிவம் என்பான்

விண்வெளியதனில் நாதமாய் ஒலிப்பான்


கண்ணில் தெரிந்தவன் சத்தத்தில் நிறைந்து

சதாசிவமாக அண்டத்தில் ஒலிப்பான்

சித்தத்தில் அவனே சிவலிங்கம் ஆவான்

வானத்திலாடும் மயில் குயிலாச்சு!


யோகம் என்னும் ஞானம் பெற்றோர்

அண்டத்துள் அறிவது சதாசிவத்தை

உள்ளம் என்னும் பிண்டத்தில் அறிவது

சிவலிங்கம் என்னும் அதுவே ஆகும்


அகமும் புறமும் யோகமும் போகமும்

இவரருளாலே நிறைந்திடக் கண்டு

கணபதி தந்த நற்கொடை அருளிது

மழையாய்ப் பொழிவதில் ஔவை நனைகிறாள்!


அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி [66]



இறையவன் திருவுரு கொள்வதற்கும் அரியது

சின்னஞ்சிறிய அணுவுள்ளும் அணுவாய் இருப்பான்

அண்டபகிரண்டம் முழுதுக்குமாய் விரிந்துமிருப்பான்

எங்கெங்கு நோக்கினும் சக்தியடா எனப்பாடிய

பாரதியின் சொல்போல காணுமிடமெல்லாம்

நீக்கமற நிறைந்திருக்கும் அவனருளைப் பருகுவது


இறையருள் தனக்குக் கொடுத்திட்ட நிலையை

எவரும் புரிந்திடத் திருவுளம் கொண்டு

அனைவரும் அறிந்திடும் ஒருபொருள் எடுத்து

அதனின் மூலம் எமக்கு உரைக்கிறாள்


பாலும்,தெளிதேனும், பாகும் பருப்பும்

கரும்பும், ஒரு முக்கனியும் சொற்சுவை சேர்க்கும்!

கணுக்களெல்லாம் முற்றிக் கனிந்து

கருப்பஞ்சாறு தன்னில் நிறைந்து

இனிப்பெனவே இருக்கின்ற கரும்புபோல

என இந்தக் கரும்பைச் சுவைக்கிறாள் ஔவை
********************************************
[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 11

"விநாயகர் அகவல்" -- 11

முந்தைய பதிவு

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) [58]



சொல்லிய சொல்லும், எண்ணிய எண்ணமும்

பாசம் என்னும் அறிவின் விளைவுகள்!

பாசமறுக்க இறையருள் வேண்டும்!

இறையருள் வருவது குருவருள் மூலம்!


சொல்லும், எண்ணமும் அறவே அறுத்து

மனத்துள் ஒடுங்கிட இன்பம் பிறக்கும்

பாசமறுத்து பசுவெனும் அறிவை

உள்ளில் அறியும் நிலையைக் காட்டிட

இறையே இங்கு குருவாய் வந்த

இனிமைக் களிப்பில் ஔவை சிலிர்க்கிறாள்!



இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் [60]



இருளைக் காண்பதும் ஒளியைக் காண்பதும்

கண் எனும் ஒன்றே புரிந்திடும் செயலாம்!


ஞானம் பிறப்பதும் அறியாமை இருப்பதும்

சிவமயம் என்னும் பேரருள் ஆணை!


இதனை அறிந்து, அறிந்தோம் என்னும்

எண்ணமும் அகன்று இறையருள் தன்னில்

தானே இறையாய் இருப்பது என்னும்

மூன்றாம் நிலையாம் சாரூபம் தன்னில்!


அருளே வடிவாம் கணபதி அருளால்

அறிவும் அறிவின்மையும் பிறக்கும் இடமும்

ஒன்றே என்னும் தெளிவில் பிறக்கும்

இன்பநிலையினில் சாரூபம் கண்டாள்!



எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் [62]



இத்தனை வந்ததும் எல்லாம் மறையும்

தானே இறையெனும் உணர்வும் மறையும்


எல்லையில்லாப் பெருவெளியதனில்

எல்லைகள் ஏது எண்ணங்கள் ஏது


எல்லா நலனும் இழந்தே போயினும்

எல்லையில்லா இன்பமே நிலைக்கும்


நாலாம் நிலையாம் சாயுச்சியம் எனும்

சொல்லா நிலையில் சுகமே விளையும்


இம்மை மறுமை பிறப்பு இறப்பெனும்

எல்லாத் துயரும் அடியோடழிந்து


அல்லல்கள் யாவும் நில்லாதொழிந்து

கணபதி அருள்வழி ஒன்றே தெளிந்து

ஆனந்த நிலையினில் ஔவை திளைக்கிறாள்!
***********************************************
[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 10

"விநாயகர் அகவல்" -- 10




முந்தைய பதிவு

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி [54]



இறையின் தரிசனம் தியான முடிவினில்

மும்மலம் விளைத்த அகவிருள் விலகி

ஆன்மா ஒளியினைக் காணும் வேளையில்

சாதகன் சிரசின் மேலொரு ஒளியின்

காட்சியும் கிட்டும் என்பர் யோகியர்

நால்வகை நிலையுள் சாலோகமென்னும்

முதல்நிலை
இதுவென ஆன்றோர் அறிவர்

சரியை என்னும் யோகம் சித்திக்க

சாலோகநிலையினில் பேரொளி தரிசனம்

இறையருள் கிட்டிய பெருமித மகிழ்வில்

ஔவைப்பாட்டி குதித்தாடுகிறாள்!



என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து [56]



ஆன்மா தன்னை அறியும்போது

இறையின் அருகில் இருப்பதை உணரும்

இறையருள் இன்றி இது நிகழாது

பேரொளிவெள்ளம் உள்ளில் தெரிய

ஆனைமுகனும் அருகில் தெரிவான்

ஐம்புலன் ஆளுகை தன்னை மறைக்க

ஆன்மா எதுவென தனக்கே மறக்க

அமலன் அருளால் தன்னை அறிந்திட

ஞானம் பிறந்த நன்னெறி நிலையில்

சாமீபமென்னும் இரண்டாம் நிலையினை

ஆனைமுகனின் அருகில் இருப்பதை

அறியும் ஔவை அகமகிழ்கின்றாள்!


சுழுமுனை வரையினில் கனலை எழுப்பி

நாடிகள் பத்தையும் சுத்தப்படுத்தி

அமுதநிலையையும் அறிந்து மகிழ்ந்து

ஆயுளை நீட்டும் வழியடைந்தாலும்,


ஆனைமுகனின் அருளால் கிட்டும்

இந்நிலை ஞானம் கைகூடாவிடின்,

தன்னை அறியும் நிலை கிட்டாவிடின்,

ஏதொருபயனும் இல்லை என்பதை

உணர்ந்திட்ட ஔவை இவ்வண்ணம் மகிழ்கிறாள்!


இவையெலாம் முறையே தன்னில் நிகழ்ந்திட

முன்னை வினைகள் முதலில் மாயணும்!

காலம் காலமாய்ப் பிறவியெடுத்து

கணக்கில்லாது வினைகள் புரிந்து

கணக்கினை மேலும் மேலுமாய்க் கூட்டி

ஆன்மா உள்ளின் அடியில் அழுந்தி

சுமைகளைக் குறைக்கும் வழிதெரியாமல்

அலைந்திட்ட ஆன்மா விடுதலை பெற்று

முந்தைய வினைகளை முழுதுமாய்க் களைந்து

பேரொளி கண்டு தன்னை அறிந்து

மகிழ்வில் ஆழ்ந்திடும் காட்சியைக் கண்டாள்!
*******************************************
[தொடரும்]

அடுத்த பதிவு


Read more...

"விநாயகர் அகவல்" -- 9

"விநாயகர் அகவல்" -- 9


முந்தைய பதிவு

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி [46]


செய்துவரும் பயிற்சியதும் மென்மேலும் முதிர்ந்துவர

ஆனந்தம் உள்ளினிலே அமுதமெனப் பொங்கிவரும்!

சூரியனும் சந்திரனும் இசைந்திருந்து இளகவைக்கும்

செயல்திறனைச் சூட்சுமமாய் ஔவையிங்கு சொல்லிநின்றாள்


[மேலிதனைச் சொல்லுதற்கு குருவினருள் எமக்குவேண்டும்!]

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் [48]


ஆதாரம் ஆறினிடை அமர்ந்திருந்து இயக்குகிற

பதினாறு கலைகளையே பாட்டியிங்கு சொல்லுகிறாள்

மேலிருக்கும்
ஸஹஸ்ராரம், ஆதாரம் ஆறு,

லலாடபிந்து, அர்த்த சந்திரன், ரோகிணி,

நாதம், நாதாந்தம், சக்தி, வியாபிகா,

சமனா, உன்மனா
என்னுமிந்தப் பதினாறு

நிலைகளையே கடந்தவரே உத்தமத் தவத்தோர்

ஆதாரச் சக்கரங்கள் ஓராறும்,

சூரிய சந்திரக் கலையிரன்டும்

சேர்ந்திங்கு உடற்சக்கரம் எட்டானது

உள்ளிருக்கும் சக்கரத்தை

உள்ளிருக்கும் கணபதிதான்

உள்ளபடி காட்டுகிறான்


சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப் [50]


உருவினைச் சமைக்க ஆறுமுகம் கொள்வர்

பருப்பொருள் இலக்கணம் அதுவே ஆகும்

வடிவம், உயரம், நீளம், அகலம்,

திண்மை, பருமை எனவும் சொல்வர்

நான்முகம் என்பது நுண்பொருள் இயல்பு

இயந்திரவடிவில் இதனை அமைப்பர்

இறையவன் உருவினை அறிந்திட உதவிடும்

பத்து குணங்களும் எண்ணிடச் செய்து

உள்ளில் காட்டும் யோகியர் நிலையினை

கணபதி காட்டித் தருவான் என்றாள்


புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் [52]


ஐம்புலன் ஐந்தும், மனம், புத்தி

அகங்காரம் எனும் மூன்றும் சேர்ந்த

சூக்கும உடலின் எட்டுநிலைகளும்,

உள்ளிருக்கும் ஆறு ஆதாரங்கள்

நிராதராம், மீதானம் எனும்

எட்டுநிலைகளாய் விரிந்திருக்கும்

அற்புதத்தை
எனக்குப் புரியவைத்தனையே

என ஔவையின் மகிழ்ச்சி அதிகமாகிறது!
******************************************

[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 8

"விநாயகர் அகவல்" -- 8





முந்தைய பதிவு

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் [40]


ஆதாரங்கள் ஆறும் இங்கே

இரண்டிரண்டாய்ப் பிணைந்திருக்கும்

மூலாதாரமும் சுவாதிட்டானமும்

அக்கினிமண்டலம் எனவாகும்

மணிபூரகமும் அநாகதமும்

சூரியமண்டலம் என விளங்கும்

விசுத்தி, ஆக்கினை இரண்டும் சேர்ந்து

சந்திரமண்டலம் என விளங்கும்


குண்டலினி என்னும் பரிக்ரக சக்தி

பாம்பின் உருவம் தனைக்கொண்டு

மூலாதார மடியினில் தன்னைச்

சுருட்டிவைத்துத் தொங்கிநிற்கும்

முறையுடன் புரியும் யோகசாதகன்

சுருண்டிருக்கும் அரவம் இதனை

மூன்று மண்டல வாயில் வழியே

ஆக்கினைவரையில் தானெழுப்பி

மந்திரச் சொல்லை நாவில் உணர்ந்து

ஆன்மா இதனை உணரச் செய்யும்


குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து [42]

பேசாதொலிக்கும் மந்திர சத்தம்

சுவாசச் சுழலின் துணையால் நிகழும்

இடகலை பிங்கலை சுழுமுனை மூலம்

சுழலும் ஒலியே அஜபா எனப்படும்!

உட்செலும் பிராணன் 'ஸோ' எனும் ஒலியையும்

கும்பகம் நிற்கும் வாயுவில் 'ஹம்'எனும் ஒலியும்

கூடச்சேர்ந்து 'ஸோஹம்' எனவாகும்!



ஸோஹம் என்பதே சிவோஹம் ஆகும்!


சிவோஹம் என்னும் சொல்லாமந்திரம்

ஒவ்வொரு சுவாசம் நிகழும் போதும்

ஒவ்வொருவர்க்குள்ளும் நிகழ்ந்தே இருக்கும்

அறிந்தவர் இதனைப் பிடித்துக்கொண்டு

சாதகம் என்னும் பயிற்சி செய்யின்

உள்ளே மூளும் கனலின் வெம்மை

தன்னில் உணரும் ஞானம் பிறக்கும்

[அசபை= அஜபா]

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே [44]


இத்தனை இதுவரை காட்டிய கணேசன்

மூலத்தினின்று முளைத்தெழும் சோதியைக்

கிளப்பிவிட்டு மேலெழும்பச் செய்திருந்து

சுழுமுனை மார்க்கமாய் கொண்டுசெல்லும் வழியினைக்



காற்றெனும் பிராணன் வழியினைச் சொல்லி

காட்டித்தந்த அருள்திறத்தைப் பாடுகிறாள்!

[கால்=காற்று, பிராணன்]
*******************
[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 7

"விநாயகர் அகவல்" -- 7


[முந்தைய பதிவு]

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி [34]

ஐம்புலன் அவஸ்தை கருவிகள் நிகழ்த்தும்!

'கண் செவி மூக்கு வாய் தொடுபுலன்' என்னும்

ஐம்புலன் ஆட்சி-- இரு கண், இரு செவி,

இரு துளை நாசி, ஒருவாய், ஆண்குறி,

ஆசனவாய்-- எனும் ஒன்பது வாயில்

வழியே நிகழும் வகையினை அறிந்து

வாசல் திறக்கும் கதவினை ஓம் எனும்

மந்திரச் சொல்லால் அடைத்திடும் வழியை

எனக்கு இன்புடன் அருளிக் காட்டி,

ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே [36]


ஆழ்நிலை தியானம் புரிந்திடும் தவத்தோர்

ஆறாதாரங்கள் வழியினில் செலுத்தி

பிராணனை ஒடுக்கும் வித்தையை அறிவர்!

மூலாதாரம் என்னும் முதல்நிலை

குதம்,குறி இவற்றின் நடுவே இருக்கு

கணபதி இங்கே ஆளுமைசெய்து

சாதகன் தன்னை வழிநடத்திடுவார்

குறிமூலம் தன்னில் சுவாதிட்டானம்

பிரமன் இங்கு அமர்ந்திருப்பார்

உந்திக் கமலம் தன்னில் மணிபூரகம்

திருமால் இதிலே வாசம் செய்கிறார்

இதயநாடியில் அநாகதம் உளது

உருத்திரர் இதனின் தலைவர் ஆவார்

கண்டம் நடுவே விசுத்தி ஆகும்

மகேசர் தலைமையில் இயக்கம் நடக்கும்

புருவமத்தியில் ஆக்ஞை எனப்படும்

சுழுமுனை என்பதும் இதுவேதான்

ஆளுமை செய்பவர் சதாசிவர் ஆவார்

மூலம் தொடங்கி மேலே எழும்பி

பிராணன் இவற்றின் வழியே கடந்து

சுழுமுனை வரையில் சுழன்று செல்லும்

இந்நிலை வந்தவர் இகத்தை மறப்பர்

ஆன்ம உணர்வினில் எல்லாம் மறந்த

இனிமை அனுபவம் தன்னில் திளைப்பர்

இவ்வகை செய்திடும் யோகப்பயிற்சி

ஆதாரயோகம் என்பர் ஆன்றோர்

தன்னை மறந்தவன் இறையினை உணரும்\


இன்னொருநிலையே நிராதாரம் என்பர்


இவ்வகை யோகம் கைகூடிவிட

பிராணன் வீணே செலவாகாமல்

இடம் வலம் என்னும் இரண்டும் அடக்கி

ஆனையைப் பழக்கும் அங்குசம்போல

ஆனைமுகனும் மூலத்தில் நின்று

அன்புடன் அருள்வார் அவரைத் துதித்தால்!

இந்நிலை கைவரின் பேச்சும் ஒழியும்

ஆன்மா என்றும் ஒருநிலை நிற்கும்


இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி [38]


சூரியன், சந்திரன், அக்கினி என்னும்

மூவகை நாடிகள் உடலில் உள்ளன.

பிங்கலை என்னும் சூரியநாடி

வலப்பக்க நாசியின் வழியே செல்லும்

இடகலை என்னும் சந்திரநாடி

இடப்பக்க நாசியின் வழியினில் செல்லும்

சுழுமுனை என்னும் அக்கினிநாடி

உடலின் நடுவில் உயிர்த்து நிற்கும்

வல, இடம் வாயு சென்றுவருவதில்

உடலின் இயக்கம் நிகழ்கிறது

பிராணனின் வாயு உள்ளே செல்வது

பூரகம் என்னும் சொல்லால் அறியும்

உள்ளே சென்றதை உடலிருத்துவது

கும்பகம் என்னும் சொல்லால் அறியும்

வெளியே சென்றிடும் வாயுவின் செயலை

இரேசகம் என்னும் சொல்லால் அறிக

ஓமெனும் சொல்லைப் பிரித்துப் பார்த்தால்

அகரம் உகரம் மகரம் புரியும்


பிங்கலைக்குரியது அகரம் ஆகும்

உகரமும் மகரமும் இடகலை சுழுமுனை

இரண்டையும் குறிக்கும் எழுத்துகள் ஆகும்

மூலத்தில் எழுந்திடும் முக்கோண ஜோதியை

மேலே எழுப்பிச் சிரசில் கொணர்ந்தால்

ஆயிரம் இதழுடை தாமரை ஒன்று

அகலவிரிவதை ஆன்றோர் உணர்வர்

இவ்வகை வழிகளின் முறைகள் யாவையும்

குருமுகம் அறிவது சாலச் சிறந்தது


இடகலை பிங்கலை இரண்டும் நிறுத்தி

சுழுமுனைவழியே சிரசைக் காட்டிட

கணபதி அருள ஔவை மகிழ்கிறாள்!


************************************************

[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

Friday, September 19, 2008

"விநாயகர் அகவல்" -- 6

"விநாயகர் அகவல்" -- 6




[முந்தைய பதிவு]

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் [28]



இன்பம் என்பது இன்னது என்று

தன்னையுணரா மாந்தர் இங்கு

இன்பம் என்பது புலனில் என்று

நின்னை மறந்து தன்னை அழிப்பர்

கண்டதைக் கண்டு காமம் கொண்டு

கருத்தொழிபட்டு மதியை இழந்து

புலனில் அடக்கம் கொள்ளாதிருந்து

பொய்வழி சென்று மெய்வழி மறப்பர்

சுவை ஒளி ஊறு ஓசை மணம் என்னும்

ஐம்புலன் மீது கொண்டிட்ட அவாவில்

தன்னிலைகெட்டு தறிகெட்டலைந்து

செயல்வழி மறந்து சிந்தை குலைவர்

இதனைவிடுத்து சிவனில் இழைந்து

அவனை நினைந்து அகத்துள் மலர்ந்து

நற்செயல் செய்யும் பண்பு வளர்ந்து

அருளொளி படர பிறவிருள் அகல

கணபதி தானே தன்னுள் வந்து

மாயை அறுக்கும் வழிகளைக் காட்டி

இன்பம் அறுத்துப் பேரின்பம் தந்திட

புலனை அடக்கும் வழிகளைக் காட்டி



கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து [30]


தத்துவங்கள் எனச் சொல்லப்படும் முப்பத்தாறும்

உணர்வுடனிருக்கையில் உபத்திரவம் செய்திடும்

இறையருள் கூடி குருவருள் நாடி

ஞானம் பிறந்து ஒன்றன்பின் ஒன்றாய்

ஒடுங்கிடச் செய்யும் வித்தை அறிந்து

ஒவ்வொரு விளக்காய் உள்ளுள் ஒடுங்க

எல்லையில்லா இன்பம் பிறக்கும்!


ஆம்!


எல்லா விளக்கும் அணைந்தபின்னே


எல்லையில்லாப் பெருவெளி தெரியும்!

நல்வினை தீவினை இரண்டின் பயனால்

இன்பம் துன்பம் என்பன நிகழும்

இவற்றின் விளைவால் பிறவிகள் எடுக்க

ஆன்மா இங்கே அலைந்து கிடக்கும்

திருவருள் கூடிய பேரின்பநிலையில்

அனைத்தும் இங்கே அகன்றிடத் துடிக்கும்

அறுகம்புல்லோன் அருளால் இருவினை இரண்டின்

பயனும் ஒழிந்து ஆணவமென்னும் இருளும் மறைந்து



தலமொரு நான்கும் தந்தெனக் கருளி [31]


இறைவனை அடைய நால்வழி உண்டு

பணிவழி, மகன்வழி, நட்புவழி, காதல்வழி

என்பன இவற்றின் வகைகள் ஆகும்!

சரியை கிரியை யோகம் ஞானம்

என்னும் பெயரும் இவற்றுக்குண்டு


இறைபணி செய்து அடியரைப் பணிந்து

முதல்வழிமூலம் அடைவது சாலோகம்


இறையிடம் அமைத்து அவரை வழிபடல்

திரவியம் சேர்த்துத் திருப்பணி செய்தல்

மகனெனும் வழியிது அடைவது சாமீப்யம்


பொறிகளையடக்கி புலனை அடக்கல்

அன்புடன் அவனை அனுதினம் எண்ணல்

யோக வழியினில் பெறுவது சாரூபம்


தன்னையிழந்து தன்னை மறந்து

இறையில் கலந்து தானே இறையும்

என்றே கசிந்து காதல் மல்கிட

கனிவது காதல் வழியெனச் சொல்வர்

கிடைப்பதோ என்றும் சாயுச்சியம்


இவ்வழி நான்கும் எனக்கென அருளி


ஈசனவன் அடியரோடு தானும் கலந்திருந்து

அவ்வுலகில் வாழ்ந்திடலே சாலோகம் ஆகும்


ஈசனது அடிபற்றி அவனுக்கு அருகாமையில்

மகிழ்வுடன் இருத்தல் சாமீப்யம் ஆகும்


ஈசன் வடிவினையே தானும் அடைந்து

ஈசனாகவே வாழ்வதுவோ சாரூபம் ஆகும்


ஈசனே தானாகி தன்னுள்ளே அவன் கலந்து

ஒன்றாக வாழ்ந்திடலே சாயுச்சியம் எனச் சொல்வர்.


மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே [32]


உலகில் பிறக்கும் ஆன்மா அனைத்தும்

ஆணவம் கன்மம் மாயை என்னும்

மும்மல வசத்தால் அல்லல் கொள்ளும்

இவற்றில் இருந்து பிறக்கும் மயக்கம்

என்றும் அண்டாமல் அடியோடகற்றி
************************************
[தொடரும்]


அடுத்த பதிவு

Read more...

Sunday, September 14, 2008

"விநாயகர் அகவல்" -- 5

"விநாயகர் அகவல்" -- 5



முந்தைய பதிவு

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென [22]

தன்னைத் தானே உணரும் பேறு

எல்லாருக்கும் வாய்ப்பதுமில்லை

தன்னையுணரச் செய்திட இங்கு

குருவென ஒருவன் வந்திடல் வேண்டும்

இறையருள் கூடி ஞானம் பிறந்திடக்

குருவே எமக்குத் திருவருள் புரிவான்

இதுவே உண்மை இதுவே மெய்யென

நல்லவை உணர்த்தித் திருவடி தருவான்

ஐந்தெழுத்தை அகத்தில் வைத்து

அனுதினம் நின்னை எண்ணித் துதித்திட

அன்புக்கணபதி நீயே என் குருவாய் வந்து



வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே [24]


இதுவரை இங்கு வாடியதெல்லாம்

தீர்ந்தது என்று அருளினை வழங்கி

கையினில் ஏந்திய தந்தக்கோலால்

முந்தைவினைகளை முழுதுமாய் அழித்து

மகிழ்வாய் என்றன் கலியினைத் தீர்த்து



உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி [26]


எத்தனை முறை யான் கேட்டபோதிலும்

முன்னிலும் இனிப்பாய்த் திகட்டாச் சொல்லை

பாவங்கள் போக்கிடும் திருமந்திரத்தை

உய்த்திடச் செய்திடும் உபதேசத்தை

என்றன் செவியில் அன்புடன் ஓதி

நூல்பல ஓதி கிடைக்கா ஞானம்

நீயே வந்து உரைத்திட்ட ஞானம்

யானெனும் செருக்கை ஒழித்திட்ட ஞானம்

திருவடி வைத்துத் தந்திட்ட ஞானம்

என்றும் எனக்குத் தெவிட்டா ஞானம்

அதனை அறிந்ததில் தெளிந்தது ஆன்மா
******************************************
[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 4

"விநாயகர் அகவல்" -- 4





முந்தைய பதிவு

முப்பழ நுகரும் மூஷிக வாகன! 15


தோல், விதை, கொட்டை ஏதும் தள்ளாது

அனைத்தும் கொள்வது ஆனையின் குணமே

அன்பால் பழுத்த அடியவர்தம்மில்

குற்றம் குறைகள் ஏதுமிருப்பினும்

அப்புறம் தள்ளா அருட்பெருங்கடலிவன்!

ஆனை வடிவம் கனத்ததோர் உருவம்

ஆயினும் அமர்வதோ பெருச்சாளி மேலே

எவரும் தாங்கிடும் வண்ணம் மென்மை

அருளைப் பொழிபவன் என்பதை உணர்த்தும்

“குண்டலியோகம் செய்பவர் உள்ளில்

குறுகுறுவெனவோர் உணர்வும் ஓடும்

பெருச்சாளி ஒன்று ஓடுதல்போல

அவ்வுணர்விருக்கும்”-
இது ஆன்றோர் வாக்கு!

மூலம் தொடங்கி மேலே ஏறிடும்

குண்டலிக் கனலின் உச்சியில் இருப்பவர்

விநாயகன்
என்றும் அறிந்தவர் சொல்லுவர்!



இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் [18]



எத்தனைதான் பட்டாலும் வாடியிங்கு நொந்தாலும்

மீண்டுமிந்தப் பிறவியெனும் ஆழ்கடலில் உழல்வதுவே

வாழுகின்ற உயிர்க்கெல்லாம் வாடிக்கை ஆகிப்போச்சு!

போதுமிந்தப் பிறவியென மனமிங்கு நினைக்கையிலே

சூது மிகுந்த வாழ்க்கையினிப் போதுமென எண்ணுகையில்

மாயமிந்தப் பிறவியென மனமுணரும் நேரத்தில்

தாயாக நீ வந்து தயை செய்து காத்திடவே

நாயாக நானிங்கு உழலாமல் பிறப்பறுத்து

நீயாக என்முன்னே இப்போதே எழுந்துவந்து

அடியேனை ஆட்கொள்ள வேண்டுமெனும் என்கதறல்



திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து [20]



பிறவிப்பயனின் விளைவாய்ச் சிறிது சிறிதாய்க்

குறைந்திருந்து, நின்றன் கருணை என்னில் தெரிந்து

நின்னையே நாடி ஐந்தெழுத்தை அன்புடன் ஓத

மூலாதாரம் முதலில் கிளம்பி, சுவாதிட்டானம்

நாபி, இதயம், கண்டம் புருவமத்தி
என்னும் இடங்களில்

சுழுமுனை வழியே நின்று துதிக்கும்

பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவம்

என்னும் ஐவரும் ஒவ்வொரு எழுத்திலும் நின்றிருந்து

ஓதும் நாமம் நாதமாய் மாறிட

கதறல் கேட்ட கணபதி அதனில்

ஓம் எனும் நாதமாய் வருவான்

நற்றுணை புரிவான் இதயம் பொருந்தத்

தன் திருவருள் தருவான் கணபதி.
*******************************************
[தொடரும்]

[நீலக் கணபதியை மேலே தரிசியுங்கள்!!]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 3

"விநாயகர் அகவல்" --- 3




முந்தைய பதிவு இங்கே

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் [8]


படைத்தல் காத்தல், அழித்தல்,

மறைத்தல், அருளல் என்றே உலகில்

இறையவன் செய்திடும் ஐந்தொழிலாகும்

நான்கு கரங்கள், எட்டுக்கைகள்

பன்னிரு தோளெனக் கடவுளர் உண்டு

ஐங்கரம் கொண்டு ஐந்தொழில் செய்யும்

அருள்நிறைக் கடவுள் கணபதி இவனே

முன் ஒருகையில் ஒடித்த தந்தம்

எழுத்தாணி எனவே அதனைக்கொண்டு

படைக்கும் தொழிலைச் செய்கின்றான்

இன்னொரு கரத்தில் மோதகம் ஏந்தி

அனைத்தையும் காக்கும் காப்புத் தொழிலையும்

மூன்றாம் கரத்தில் அங்குசம் ஏந்தி

அழித்தல் தொழிலையும் புரிகின்றான்

நாலாம் கரத்தில் பாசம் தாங்கி

மறைக்கும் கருமம் நிகழ்த்துகிறான்

ஐந்தாம் கரமாம் தும்பிக்கையினில்

அமுதக் கலசம் அதனைத் தாங்கி

அருளினை எமக்கு வாரித்தருகிறான்

ஆனையின் நிறமோ கருமை ஆகும்

ஆடையுடுத்ததோ வெண்மை ஆகும்

இரண்டும் கலந்தால் நீலம் ஆகும்

கண்ணுக்குக் குளுமை நீல நிறமே

தனியே தன்னந்தனியே......

அகத்தில் இவனைத் தனியே நிறுத்தி

வெளியன் இவனை வழிபடும் அன்பர்

அழியாநலனைப் பெற்றிடுவார் எனும்

நம்பியாண்டான் நம்பி சொன்னது

நீலத்திரு மேனியின் எழிலின்

தன்மைகுறித்தே என்றே கொள்க.


நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் [10]


அடியவர் நெஞ்சினில் அன்புடன் அருளும்

மந்திரம் யாவையும் சொல்லிடும் வண்ணம்

நாயகன் வாயும் தொங்கிய வண்ணம்!

ஆனையின் வாயினைப் போலே கீழே

தொங்கிடும் வாயின் பெருமை இதுவே!

நாலிரு புயமெனில் எட்டென வேண்டா

இருபுயம் என்பது வலிமையைக் குறிக்கும்

நுதலில் இருந்து வளர்ந்திடும் துதிக்கை

தோளெனத் தனியே அமைவது இல்லை

எனவே கணபதி வலிமை பொருந்திய

நான்கு புயங்களைத் தன்னில் கொண்டான்!

பகலவன், முழுமதி, அக்கினி எனவே

மூன்று கண்களைக் கொண்டவன் நாயகன்

மும்மதம் என்னும் ஆன்மவினைகளின்

பாவம் கழுவிடும் மதநீர் சுரப்பால்

முகத்தில் தழும்பாய்க் கோடினை உடையவன்

[நான்ற= தொங்குகிற; சுவடு= தழும்பு]



இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் [12]


எவர்க்கும் உண்டிங்கு இருசெவிகள்

இருந்தும் பயனற்று வாழ்கின்றார்

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்

என்று பாடினான் வள்ளுவன் இங்கு!

செவியின் பயனைச் சரியாய் உணரா

இழிநிலை மாந்தர் தன்னிலை மறந்தார்

நாயகன் புகழைக் கேட்பது ஒன்றே

செவிகள் செய்யும் புண்ணியம் என்று

அதனைச் செய்திடும் உயர்நிலை தவத்தோர்

அருளைப் பாடி அவனடி பணிய

அவனிரு செவிகளும் அசைந்து கொடுக்கும்!

ஆம்!~

கணபதி திருச்செவி மட்டுமே இங்கு

அசையும் தன்மை உடையனவாகும்!

வேறெவர் செவியும் அசைவது இல்லை

ஆனையின் செவிகள் மட்டுமே புரியும்!

ஆனைப்பாகன் ஆனையின் மீது

ஏறிடப் பற்றிடும் ஒருபொருள் செவியே!

கணபதி செவிகளைப் பற்றியவண்ணம்

பிறவித்துயரை ஒழித்திட முடியும்

அத்தகு பெருமை வாய்ந்திட்ட செவிகளை

ஔவை இங்கே அழகுறப் போற்றினார்!

மூவுலகுயிரும் ஒன்றாய் வணங்கிடும்

முழுமுதற்கடவுள் கணேசன் ஆவான்

அவனது முடியினில் பொலிவாய்த் திகழும்

பொன்முடி இவனே அரசன் என்னும்!

ஓமெனும் பிரணவ மந்திரம் காட்டும்

முப்புரிநூலைத் திருமார்பில் தாங்கி

ஒளியெனும் அறிவை எமக்குத் தருபவன்

விநாயகன் என்றே இச்சொல் உணர்த்தும்!



சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே! [14]



அறிவுறை மாந்தர் பகுத்தறிவென்னும்

ஒருநிலைநின்று வாதம்செய்து நாளைக்கடத்துவர்

உண்மை அறிவுடை உயர்நிலை தவத்தோர்

உண்மை எதுவெனப் புரிந்தே இருப்பர்


ஐம்புலன் ஆசையில் அகப்பட்ட ஆன்மா

விழித்திரும்போது சூழ்நிலை அறிந்து

வேதனைகொள்ளும் நிலையினை ஆன்றோர்

ஜாக்கிராவஸ்தை என்று சொல்லுவர்

கனவுலகில் சென்று அலையும் ஆன்மா

விரும்பிய இடங்களைத் தானே அடைந்து

எங்கும் பரவி உணர்வுகள் கொள்ளும்

நிலையினை சொப்பனாவஸ்தை எனபர் அறிந்தோர்!

இவ்விரு நிலையிலும் சொற்களின் ஆட்சி

அதிகம் இருக்கும் என்பதை உணர்க!

ஆழ்நிலைத் துயிலில் சுழுத்தியில் அடங்கிய

சொற்கள் தம்மின் வலிமை இழக்கும்

பேசாநிலையில் ஆன்மாஇருந்தும்

இதுவோர் மறதிநிலையே!

இதனால் பெரிதும் பயனேதுமில்லை!

மனத்தை அடக்கி பிராணனில் ஒடுக்கி

சித்தம் தன்னை அவனில் நிறுத்தி

இருக்கும் நிலையைத் துரியம் என்பர்

ஆன்மா இங்கே இறையை உணரும்

காலமும் நேரமும் கடந்து நின்று

இன்பமும் துன்பமும் ஒழிந்து சென்று

பிறப்பும் இறப்பும் இல்லா நிலையிது

இந்நிலைதன்னில் இருப்பவன் கணேசன்

அனைத்தையும் தந்திடும் கற்பகத் தரு அவன்!

யானை அதிலும் ஆண்யானையாம்!

அதனால் கற்பகக் களிறே என்கிறார்!



[தொடரும்]


*********************


அடுத்த பதிவு





Read more...

"விநாயகர் அகவல்" --- 2

"விநாயகர் அகவல்" --- 2




ஔவையார் அருளிச்செய்த "விநாயகர் அகவல்"

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப் [2]




குளிர்நிறை சந்தனம் பூசிய கழல்கள்

தாமரை மலரினைப் போலச் சிவந்தவை

கால்களில் குலுங்கும் பாதச் சிலம்புகள்

பேரொலி எழுப்பும் இன்னிசை ஒலிகள்

திருவடி அதனில் பிரபஞ்சம் பிறந்தது

நாத ஒலியினில் நானிலம் பிறந்தது

அனைத்தும் இவனின் அடிகளில் பிறந்தன

ஒவ்வொரு ஒலிக்கும் புதிதுபுதிதாய்

இசையொலி எழுப்ப யுகங்கள் பிறந்தன

மூலாதாரக் கனலினைக் கிளப்பும்

நாயகன் கழல்கள் நாதம் எழுப்பும்

நாதத்திலிருந்து அனைத்துமே பிறக்கும்

[சீதம்= குளிர்; களபம்= சந்தனம்]





பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் [4]



பொன்னால் ஆகிய அரைஞாண் கயிறும்

பூவினைப் போலும் மென்மை தவழும்

வெண்ணிறப் பட்டில் மின்னும் ஆடையும்

பெருத்த இடுப்பில் பாங்குடன் மிளிர

[பூந்துகில்= மென்மையான வெண்ணிறப்பட்டு; மருங்கு= இடை, இடுப்பு; எறிப்ப= ஒளிபரப்ப]


பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும் [6]



திருவடி தொடங்கி இடைவரை வந்தவர்

அண்டசராசரம் அனைத்தும் அடங்கும்

ஆனைமுகத்தோன் பானைவயிற்றில்

பெட்டியைப் போலும் பெருநிறை வயிற்றில்

சற்றே கனிந்து அதைப் பாடுகின்றார்.

ஆனைமுகத்தோன் அதனால் இங்கு

கனத்த முகத்தோன் ஒற்றைக் கொம்பன்

அழகுறை நெற்றியில் சிவந்ததோர் பொட்டு

சிந்தூரம் எனவே அதனைச் சொல்வர்

திருவடி துவங்கி முகநிறை தரிசனம்

ஔவை செய்விக்கும் ஆனந்த தரிசனம்!

[பேழை= பெட்டி; பாரம்= கனம்; கோடு= தந்தம்; வேழம்= யானை; சிந்தூரம்= சிவப்புப் பொட்டு]

Read more...

"விநாயகர் அகவல்" --- 1

"விநாயகர் அகவல்" --- 1
என் இனிய அன்பான நண்பர்களே,

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் நான் தினமும் ஓதும் ஒரு பனுவல்.

சேரமான் நம்பி கைலாயம் செல்ல விரைகிறார்!

ஔவையாரையும் உடனழைக்க, தன் பிள்ளையார் பூஜையை முடித்த பின்னே வர முடியும் என்கிறார் ஔவையார்.

காத்திராமல் நம்பி விரைய, ஔவையார் பூஜையைத் தொடர்கிறார்.

அப்போது பிறந்ததுதான் விநாயகர் அகவல்!

அகவலைப் பாடி முடித்ததும், தன் தும்பிக்கை மூலம், விநாயகப் பெருமான் ஔவையாரை நேராக ஒரு நொடியில் கைலாயம் கொண்டு சேர்த்ததாக வரலாறு!

அதாவது, இதில் சொல்லியபடி செய்தால், இறைவனடி சேரலாம் என்பது கருத்து!!

இதெல்லாம் தெரியாமலேயே, இதன் இனிமையும் சந்தமும் என்னை மிகவும் கவர்ந்தது.

பொருள் முழுதும் அறியாமலேயே இதனைச் சொல்லி வந்திருந்தேன்.

தமிழ்மணத்தில் பதிவெழுதத் தொடங்கியபின், இதனை மேலும் ஆழ்ந்து படிக்கத் துவங்கினேன்.


அகவல் என்றால் "அழைப்பது" எனப் பொருள்!

என் முருகனின் மயிலும் அகவும்!!

எனவே, இது மேலும் என்னைக் கவர்ந்தது!

இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின!

இதனை என் மொழியில் சொல்ல வேண்டும் என்ற ஆசையை என்னுள் ஏற்படுத்தியது முருகனருள்.

எழுதி முடித்ததும், நான் மிகவும் மதிக்கும் ஒரு பெரியவரிடம் இதை அனுப்பினேன்.

பத்து நாட்களாகியும் அவரிடமிருந்து பதிலில்லை.

இன்று காலை ஒரு மடல்...... பதியச் சொல்லி!

தாமதம் இல்லாது, இதோ உங்கள் பார்வைக்கு.

சொல்ல வேண்டிய செய்திகள் அனைத்தையும்,....... சொல்லப்போகும் அவையின் மனமறிந்து, ....... சொல்லி இருக்கிறேன் என நினைக்கிறேன்

திங்கள் முதல் வெள்ளி வரை, தினம் ஒரு பதிவாகத் தொடர்ந்து வரும்.

வழக்கம் போல் நீட்டி முழக்கித்தான்!

படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்!



வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்!


அனைவர்க்கும் முருகனருள் முன்னிற்கும்!

*******************************************************




Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP