Wednesday, May 09, 2007

மண்ணுநீதி!

"மண்ணுநீதி"!





கடல்நீரைக் குழிநிறுத்தி
அதில் சிக்கும் மீன் பிடிக்க
வலைவீசும் மனிதனே!- உன்

உலகத்தில் இவ்வண்ணம்
குழிகட்டி இனம்பிரித்து
அழிக்கின்ற மானுடரை -- நீ

தளை களைந்து தலை நிமிர்ந்து
தன்மானக் குரல் கொண்டு
தட்டுவதுமே எக்காலம்? -- சொல்!