Saturday, April 01, 2006

"நனாக் காலம்"!!

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்!
அவை தொடர்ந்திடத் தொடர்ந்திட என்னென்ன நம்பிக்கைகள்!
அது ஒரு அழகிய "நனாக்காலம்"!
கழகங்கள் விரைவினில் வெளியேறும்!
'உதிரிகள்' சேர்ந்திங்கு சரித்திர்ம் படைத்திடும்!
அது ஒரு பொற்காலம்!

பொய்களைத் திருப்பித் திருப்பி சொல்வதானாலேயே,உண்மைகளை மறைத்திடலாம் என்றகோயபல்ஸின் தத்துவத்திற்கேற்ப,
இரு கழகங்களை விட்டால் வேறு கதியில்லை என,

"ஓலமிடும் மானிடரே!
உண்மைகள் தெரிந்து விடும்-உம்
மயக்கமும் கலைந்து விடும்!
எனவே,

"துணிந்த பின் மனமே!
துயரம் கொள்ளாதே!
சோகம் பொல்லாதே!

அலையும் காற்றில்
அகல் விளக்கேற்றி--கழகங்களை
காத்திட முடியாது!
வீழ்வது நிஜமே
நீ ஏன் வீணாய்
சஞ்சலப் பேய் வசமானாய்!- எனவே
துணிந்த பின் மனமே!
துயரம் கொள்ளாதே!
சோகம் பொல்லாதே!